Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம்: மகிந்த ராஜபக்ச.

Featured Replies

புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம்: மகிந்த ராஜபக்ச.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தனியரசு இலக்கை அடைய உள்ளதாக பரப்புரை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு இது. தங்களது பயங்கரவாதத்தாலும் வன்முறைகளாலும் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் ஒடுக்கி வருகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கையிலும் நாம் அதனை மேற்கொள்வோம்" என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

"நாங்கள் அந்தப் படுகொலையை நடத்தவில்லை. படுகொலையின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து எமக்குத் தெரியவில்லை. அனேகமாக அரசியல் இலாபங்களுக்கான படுகொலையாக இது இருக்கலாம்" என்று கிளிநொச்சியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருகோணமலையின் வடகிழக்கில் நேற்று கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டது மூலம் கிழக்கை கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா இராணுவம் கைப்பற்றினாலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கிழக்கில் நிலைகொண்டிருப்பதையே வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் என்று ரொய்ட்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு பிரதம செயலாளருக்கும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையே முறுகல் நிலை இருந்ததாகவும் கருணா குழுவினரால் அவருக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்ததும் என்றும் கூறப்படுகிறது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்."

இதை தான் தமிழ் மக்களும் சொல்கிறார்கள்.அதாவது தமிழ் மக்கள் மிக விரைவில் அரச கூலிப்படைகளை ஓட ஓட விரட்டுவோம் என்று.வி.புலிகளும்,தமிழ் மக்களுமாக சேர்ந்து இந்த கொலை வெறியர்களை விரைவில் வெளியேற்றுவார்கள்.We will kick your a** sooner than you think Mr mahinda.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்."

நீ யாரென்று எமது மக்களுக்கு தெரியாது ஆதலால் நீ ஒரு சின்னப்பிள்ளையென நினைத்து இருந்துவிட்டனர் ஆனால் நான் உனக்கு சொல்வது என்ன வென்றால் நீ மங்கிகளின் தலைவன் அதனால் தான் உனது தாய் தந்தையர்கள் மங்கி என்று வைத்தை பெயரை நீ மகிந்த அதாவது மகியங்கனையின் குரங்கு (மங்கி) என்று மாற்றிக்கொண்டாய் இருப்பினும் உன்னால் முடிந்தாள் நீ தலைமை தாங்கி உனது கோலைப்படைகளையும் கூட்டி உனது எமது தமிழினத்தின் துரோகக் கும்பலையும் கூட்டி எமது மண்ணில் கால் மிதித்துப்பார் அப்போது தெரியும் எமது பொறுமையும் எமது போராட்டமும் போராட்ட வடிவங்களும் அந்த பொன்னான நேரத்தை நாம் தினமும் வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவுக்கும் அவரது குழுவுக்கும் வேற வேலை இல்லை சிங்களமக்களை ஏமாற்றுவதற்காக இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க வேணும்!! விட்டுத் தள்ளுங்கோ.

போர் நிறுத்தத்தில் போர் செய்து எல்லை மீறும் பேடி.....

உலகத்தின் கண்களுக்கு நாடகமாடி.........

நீ கொண்டு வந்தாய் ஆயுதம் தேடி....

நந்தவனத்தில் ஒர் ஆண்டி பிச்சை எடுத்து கொண்டுவந்தான் கோடி.....

விரைவில் பார் ஒரு படை இது எங்கள் மண் என்று துரத்தும் பாடி......

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பிரதேசங்கள் இருக்கின்றன என்று ஒப்புக்கொண்டால் எப்படி அவை சிறிலங்காவின் நாட்டுக்குள் இருக்கமுடியும்? மகிந்தவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவில் எல்லாப் பிரதேசங்களும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றது. என்ன அவர்தான் சுதந்திரமாக எங்கும் செல்லமுடியாமல் இருக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.