Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

November 3, 2021

spacer.png

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணி, இன்று (03) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டுறவுச் சங்கங்களின் இரண்டு தேங்காய் எண்ணெய் ஆலைகள், ஒரு தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி மையம் ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குறித்த காணிகளை கையளித்துள்ளனர்.

யுத்த காலத்தில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் முன்னரங்க பிரதேசமாகவும் காணப்பட்ட முகமாலை பிரதேசம் அதிகளவு கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிக்காத வெடிப்பொருட்கள் நிறைந்த பிரதேசமாக காணப்பட்ட நிலையில் அங்கு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தொடர்ச்சியாக கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2021/168108

  • கருத்துக்கள உறவுகள்

பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு – டக்ளஸ்

பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு – டக்ளஸ்

கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி  சாத்தியமான வழிகளின் ஊடாக பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க  வேண்டும் என்பதே  எனது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முகமாலையில் சுமார் 316 ஏக்கர் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “1987ம் ஆண்டு இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலம் கிடைத்த வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முறையை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் மூலம்   தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை அன்று எனக்கிருந்தது.

இதே கொள்கையையே நான் இன்றும் கொண்டுள்ளேன். அப்போது இதை எதிர்த்தவர்களும் பின்னர் மாகாணசபை முறையை ஏற்றுக்கொண்டு தேர்தல்களின் போட்டியிட்டு பதவிகளையும் பெற்றுக்கொண்டனர்.

அப்போதே இதை ஏற்றுக்கொண்டு அமைதிவழியில் நல்லிணக்க வழிமுறையில் தமிழ் மக்களுக்குத் தீர்வுகாண முனைந்திருந்தால் அதன் பின்னர் ஏற்பட்ட யுத்த அழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வாறில்லாமல், அழிவு யுத்தத்ததைத் தொடர்ந்ததன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் சொல்கிறேன், இந்த அழிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடாது என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது.

எனவே,  தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தினை வளர்ப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதே இலக்காக இருக்கின்றது” எனவும் தெரிவித்த அவர் .

மேலும், தனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சு அதிகாரத்தின் ஊடாக  பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க  வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்த அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, இச்சந்தர்ப்பத்தினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேணடும் எனவும் கேட்டுக்கொண்டார்.” என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1248139

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.