Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரன்னாகொடவுக்கு எதிரான மனு தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், கொழும்பு,  ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு  ஏற்காமல் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.  அதன்படி மனுவின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் மறுத்தது.

இந்த குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு நேற்று (10) மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான  சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்ற தீர்மனத்தை அறிவிப்பதற்காக  பரிசீலனைக்கு வந்தது.

இதன்போது நீதிமன்றின் தீர்மானத்தை நீதிபதி சோபித்த ராஜகருணா அறிவித்தார்.

'ஒருவருக்கு எதிராக குற்றச் சாட்டை முன் வைப்பதா இல்லையா எனும் முடிவை எடுக்கும் விருப்பு அதிகாரம் சட்ட மா அதிபருக்கே உள்ளது.  அதனால் நீதிமன்றத்துக்கு அதில் தலையீடு செய்ய முடியாது.' என நீதிபதி சோபித்த ராஜகருணா திறந்த மன்றில் அறிவித்தார்.

' இந்த ரிட் மனுவை முன்னெடுத்து செல்வதற்கான எந்த சட்ட ரீதியிலான நியாயப்பாடுகளும் மனுவில் உள்ளடங்கவில்லை.

அதே நேரம், வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை முன்னெடுத்து செல்லாமல் இருக்க தீர்மானித்தமைக்கான காரணிகளை சட்ட மா அதிபர் இரு இரகசிய அறிக்கைகள் ஊடாக மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவற்றையும் இந்த நீதிமன்றம் ஆராய்ந்தது.  அந்த இரு அறிக்கையில் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக வழக்கொன்றினை முன்னெடுத்து செல்ல  போதுமான காரணங்கள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்கிறோம்.' என நீதிபதிகள் அறிவித்தனர்.

அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய  தாக்கல் செய்யப்பட்டிருந்த  இது குறித்த எழுத்தானை நீதிப் பேராணை மனுவே நேற்று இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது.

கொழும்பில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களின் பெற்றோரான, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா கோவிந்தசாமி நாகநாதன்,  மருதானையைச் சேர்ந்த ஜமால்தீன்  ஜெனி பஸ்லீன் ஜெனீபர் வீரசிங்க, டொன் மேர்வின் பிரேமலால் வீரசிங்க, தெமட்டகொடவைச் சேர்ந்த  அமீனதுல் ஜிப்ரியா சப்ரீன் ஆகியோர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

சி.ஏ. ரிட் 424/21 எனும் இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த ரிட் மனுவில், பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை வாபஸ் பெறுவதற்கான தீர்மானமானது நியாயமற்ற, பாரபட்சமான, சட்டவிரோதமான, சட்டத்திற்குப் புறம்பான மற்றும் தேவையற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்ட தீர்மானம் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் டிலான், மொஹமட் சாஜித் உள்ளிட்ட 11 பேர் 2008 செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போயுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவ்வாறு காணாமல் போனவர்களுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளின் படி, மேற்படி பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிலர் கடத்தப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள “பிட்டு பம்பு” என்ற அறையில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் பின்னர் அவர்கள் முன்னாள் கடற்படைத் தளபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான பீட வளாகத்தில் அமைந்துள்ள கன்சைட்  என்ற சட்டவிரோத நிலத்தடி சிறைச்சாலையில்  தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக மனுதாரர்கள்  தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் கடற்படைத் தளபதியின் மீதான குற்றப்பத்திரிக்கையை வாபஸ் பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானமானது சட்டத்தினால் வழங்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும், எனவே  நீதி நிர்வாகத்தின் நோக்கத்திற்காக இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் அந்த தீர்மானம்  திருத்தப்பட வேண்டியதெனவும் மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையிலேயே பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பி, 2 ஆம் பிரதிவாதிக்கு எதிரான மேல் நீதிமன்ற குற்ற பகிர்வுப் பத்திரிகையுடன் தொடர்புடைய ஆவணங்களை மேன் முறையீட்டு நீதிமன்ற பொறுப்பில் எடுத்து ஆராய தடைமாற்று நீதிப் பேராணை  ஊடாக இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அத்துடன் மனுவை விசாரணை செய்து 2 ஆம் பிரதிவாதியான வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரிகையை முன்னோக்கி கொண்டு செல்ல  முதல் பிரதிவாதி சட்ட மா அதிபருக்கு கட்டளைப் பேராணைஒன்றினை பிறப்பிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

 மனுதாரர்கள் சார்பில்  சட்டத்தரணி நுவன் போப்பகே மற்றும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆகியோர் ஆஜராகிய நிலையில், முதல் பிரதிவாதி வசந்த கரன்னாகொடவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜரானார். 2 ஆம் பிரதிவாதி சட்ட மா அதிபருக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜரானமை குறிப்பிடத்தக்கது. 

கரன்னாகொடவுக்கு எதிரான மனு தள்ளுபடி | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.