Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்று வன்னியில் பொருளாதாரத் தடையை புலிகள் எவ்வாறு முறியடித்து இருந்தனர்? கற்க வேண்டிய பாடம்

Featured Replies

1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு, விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி எரிபொருள் வரத்துத் தடைப்பட்டது. எரிபொருள் தடைப்பட்டால், விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பட்டினியால் வாடும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வழிக்கு வருவார்கள் என்பதே அரசின் திட்டம்.
இந்தத் திட்டத்தைப் புலிகள் எப்படி முறியடித்தனர் என்பதை அவ்வியக்கப் போராளியொருவர் 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த தினசரியொன்றில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
 
“...உழவு இயந்திரத்தின் தேவையை எமது சொந்த வளத்தால் மாற்றீடு செய்ய நாம் யோசித்தோம். வன்னிப் பிராந்தியத்தின் இன்னொரு பெரும் வளமான காளை மாடுகளைப் பயன்படுத்த எண்ணினோம். இதன்படி 1991 ஆம் ஆண்டு ஆடி, ஆவணி மாதங்களில் 200 சோடி காளை மாடுகளை உழவிற்குப் பழக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் செயற்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் பயனாக, உழவு இயந்திரம் – உதிரிப்பாகங்கள், எரிபொருள் ஆகியவற்றின் கொள்வனவிற்காகச் செலவிடப்படும் பல கோடி பணம் எமது பிரதேசத்திற்கு வெளியில் செல்வது தவிர்க்கப்பட்டது.
கூலி விவசாயிகள் அதிமாகத் தொழில் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்க்கை மேம்படுகிறது.
 
இதுவரை காலமும் வெறும் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காளை மாடுகளின் பெறுமானம் உயர்ந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் பயனை விவசாயிகளான கால்நடை உரிமையாளர்களே பெறுவர்.
உழவு மாடுகளிற்கு திடீரென ஏற்பட்ட வரவேற்பை அவதானித்த தனிப்பட்ட விவசாயிகள் நிலமையை உணர்ந்து கொண்டு தாமாகவே காளை மாடுகளை உழவிற்கு பழக்குவதற்கு தொடங்கினார்கள். இதன் மூலம் தேசத்தின் தேவையை உணர்ந்து – தன்னம்பிகையுடன் எமது விவசாயிகள் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்....”
இந்த முயற்சிதான், 2006 ஆம் ஆண்டு வரை வன்னிக்குள் அரிசியின் விலையை 16 ரூபாவுக்கு மேல் அதிகரிக்காமல் வைத்திருந்தது. உள்ளூர் வளத்தை மிகச் சரியாகக் கணிப்பிட்டு அதனைச் சரியாக – வினைத்திறனோடு பயன்படுத்தியன் விளைவினால்தான் வன்னிப் பெருநிலம் நிமிர்ந்த நின்றது. இந்த நிமிர்வுக்கு தியாக மனப்பான்மையுடன் கூடிய அர்ப்பணிப்பே முதுகெலும்பாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது.
எனவே சுதேசிய பொருளாதாரத்தில்தான் நிற்கப்போகிறோம் எனப் போராடும் தேசங்கள் முதலில் மக்கள் நலன்சார் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு கடுகளவிற்காவது தியாக மனப்பான்மை வேண்டும். அதற்கு அடுத்து நம்மிடம் என்ன வளமிருக்கிறதென்பதையும், அதனை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதையும் அனுபவசாலிகளிடமிருந்து கற்க வேண்டும்.
 
 
ஊடகவியலாளர் ஜெரா தம்பியின் முகனூலில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு
  • கருத்துக்கள உறவுகள்

இத சீமான் சொன்னா பைத்தியக்காரன் எண்டுராஙக..

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத சீமான் சொன்னா பைத்தியக்காரன் எண்டுராஙக..

புலிகள் தேவையான இடத்தில் தேவையான இயந்திரமயமாக்கலை செய்தார்கள். 

மேலே சொல்லப்பட்டிருப்பது இயந்திரமயமாக்கலை தடை போட்டு தடுத்த போது அதை எப்படி மாற்று வழியால் வெற்றி கொண்டார்கள் என்று.

சமாதான காலத்தில், தடைகள் தளர்ந்த போது, டிரக்டர் வாங்கும் விவசாயிகளை தடுத்து காளை மாட்டை ஓட்டுங்கோ என அவர்கள் பைத்தியகாரத்தனம் பண்ணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத சீமான் சொன்னா பைத்தியக்காரன் எண்டுராஙக..

 அந்த நிலத்தில்  இன்றும் மாடுகளுக்கு பெருமதி பெறுமதி குறையவில்லை.

நன்றி நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால கட்டத்தில் பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள்,  எவராவது ஒருவரின் நிலம் தரிசாக இருந்தால் விவசாயத்தில் ஆர்வம் இருந்தும் நிலம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்க்ளிடம் தொடர்பு கொண்ட்டால் அதனை விவசாயத்திற்காகப்பெற்றுத்தருவது அத்துடன் இந்தியாவிலிருந்து வறட்சியை தாங்க கூடிய குறைந்த கால நெல் இனங்களை தருவித்தல் போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.