Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த சாட்சியம்! தியாவின் "எறிகணை" நாவல்! - பொன்.புத்திசிகாமணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
erikanai-1024x763.jpg
 
இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது.
 
அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம்.
இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன்.
 
அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது.
மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் .
 
இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த யுத்தத்திற்கான சாட்சி யென்றே சொல்லலாம்.
சொந்தப் பிரதேசத்திலிருந்து,அதுவும் சொந்த வீட்டிலிருந்து இடம்பெயர்வதான கொடுமை மிகவும் மோசமானது.யுத்தகாலத்தில் தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அவர்கள் பட்ட அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. அதனை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
 
குடும்பத் தலைவனை இழந்த ஒரு குடும்பம் படுகின்ற சோதனையும்,வேதனையும் இந்நாவலின் முக்கிய கருவாகும். கணவன் சிவா ,யுத்தத்தால் கொலை செய்யப்பட்ட பின். குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி ,புவனா,தனது பிள்ளைகளுடன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆசிரியரால் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
வயிற்றுக்கும்,வாழ்வுக்குமான சோதனை மிகுந்த இவர்களது வாழ்க்கை கத்திபோல் நடப்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது. இராணுவம் செல்லடிக்கும் நேரங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடி ஓடும் காட்சிகள்,ஐயோ அந்தக் குடும்பத்திற்கு எதுவுமே நடந்து விடக் கூடாது ,என வாசிப்பவர்களுக்கு ஒரு பரதவிப்பை ஏற்படுத்துகிறது.
 
இது ஆசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.சின்ன வாக்கியங்கள்,யதார்த்த மொழிநடை.கஸ்ரங்களைச் சந்தித்த ஒரு பிரதிநிதியாலேயே தான் இவ்வாறு பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
 
இந்தக் கதையின் கதாநாயகி புவனா என்றே எடுத்துக் கொண்டேன்.எத்தனை இழப்புகளைச் சந்தித்த போதும்,அதனைச் சவாலாக எடுத்துக்கொண்டு ,பருந்திற்கு பயந்து,குஞ்சுகளை தனது இறகிற்குள் பாது காக்கும் தாய்க்கோழி போல் ,அந்தத் தாயை என்னால் நோக்க முடிந்தது. தாயின் சுமையைக் குறைப்பதற்காக படிக்கின்ற சின்னவயதில் பொறுப்போடு நடந்து கொள்கிற மூத்த மகன் செல்வனின் பாத்திரப் படைப்பு பெரு மரியாதையைத் தருகிறது.
 
பாதிக்குமேல் அவனே கதாநாயகனாகி விடுகிறான்.இடம் விட்டு இடம் மாறும் போதெல்லாம் சைக்கிள் பிரயாணத்தில் அவர்கள் படும் பாடுகள் ,அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளும் போக்கு. கதாபாத்திரங்களோடு எங்களையும் பயணிக்க வைக்கிறது.
 
ரேணு,நதி என்கிற சகோதரிகளை பாதுகாக்கும் பொறுப்புள்ள அண்ணனாக மாறும் செல்வன் .தாய்க்கும் நம்பிக்கைக்குரிய தனயனாக மாறிவருது கதைக்கு வலுச்சேர்க்கிறது.
 
வன்னியப் பற்றிய காட்சிப் பகிர்வும்,வளங்கள் பற்றிய செய்திகளும் வாசிக்கும் போது. மகிழ்ச்சியைத் தருகிறது. கோழிய குளம்,கொம்பறுத்த மடு,விளக்குவைச்ச குளம்,மல்லாவி,கோட்டைகட்டிய குளம்,வன்னேரி,தென்னியன் குளம் போன்ற பகுதிகளில் எனக்குப் பரிச்சியம் வாய்ந்த படியால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.
 
புலம்பெயர்ந்து சென்ற போதும்,அந்த குடும்பத்தை ஆதரித்து உதவிகள் புரியும் ஏனைய கதாபாத்திரங்களும் கதைக்கு வலுச்சேர்க்கின்றன. பருவப்பெண்கள் இல்லாமல் கதைக்குச் சுவையே இருக்காது என்பதை உணர்ந்த ஆசிரியர். அதனை இதற்குள் புகுத்தியிருப்பதும் அழகு. சந்திப்புகளும், திடீர் திருப்பங்களும் காதலின் மனமுறிவும்.சுகமாக முடிவதும் ஆரோக்கியம்.
 
உழைப்பால் உயரும் செல்வனின் பொறுப்பான படைப்பு .அடுத்தவர்க்கு உத்வேகத்தைத் தருகிறது. சுரபியின் காதலை நயமாகச் சொல்லி சுகமாக முடித்து விடுகிறார். தாய் புவனாவின் ஆசை.யுத்தத்தின் இறுதிநாள் கடுமையும்,உறவுகளைப் பிரித்துவிடும் சோகமும். கலங்க வைக்கிறது. வாசகர்கள் வாசிக்கவேண்டிய நாவலிது.
 
ஆழிப்பேரலை சுனாமி என்ற யப்பான் சொல்லை உலகெங்கும் அறியத்தந்தது போல்.அப்பாவிகளாக கிராமங்களில் வாழ்ந்த நம் மக்களுக்கு இந்த யுத்தம் நவீன கொடிய ஆயதங்களை அறியவைத்துச் சென்றிருக்கிறது .
 
"எறிகணை" இதுவும் ஒரு ஆயுதம் என்பதை நாம் அறிவோம். 
 
தியாவுக்கு எமது வாழ்த்துகள். இனியும் அவரிடமிருந்து நல்ல ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம்.
 
 
நன்றி,
பொன்.புத்திசிகாமணி,
யேர்மனி.
1 minute ago, theeya said:
erikanai-1024x763.jpg
 
இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது.
 
அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம்.
இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன்.
 
அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது.
மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் .
 
இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த யுத்தத்திற்கான சாட்சி யென்றே சொல்லலாம்.
சொந்தப் பிரதேசத்திலிருந்து,அதுவும் சொந்த வீட்டிலிருந்து இடம்பெயர்வதான கொடுமை மிகவும் மோசமானது.யுத்தகாலத்தில் தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அவர்கள் பட்ட அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. அதனை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
 
குடும்பத் தலைவனை இழந்த ஒரு குடும்பம் படுகின்ற சோதனையும்,வேதனையும் இந்நாவலின் முக்கிய கருவாகும். கணவன் சிவா ,யுத்தத்தால் கொலை செய்யப்பட்ட பின். குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி ,புவனா,தனது பிள்ளைகளுடன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆசிரியரால் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
வயிற்றுக்கும்,வாழ்வுக்குமான சோதனை மிகுந்த இவர்களது வாழ்க்கை கத்திபோல் நடப்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது. இராணுவம் செல்லடிக்கும் நேரங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடி ஓடும் காட்சிகள்,ஐயோ அந்தக் குடும்பத்திற்கு எதுவுமே நடந்து விடக் கூடாது ,என வாசிப்பவர்களுக்கு ஒரு பரதவிப்பை ஏற்படுத்துகிறது.
 
இது ஆசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.சின்ன வாக்கியங்கள்,யதார்த்த மொழிநடை.கஸ்ரங்களைச் சந்தித்த ஒரு பிரதிநிதியாலேயே தான் இவ்வாறு பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
 
இந்தக் கதையின் கதாநாயகி புவனா என்றே எடுத்துக் கொண்டேன்.எத்தனை இழப்புகளைச் சந்தித்த போதும்,அதனைச் சவாலாக எடுத்துக்கொண்டு ,பருந்திற்கு பயந்து,குஞ்சுகளை தனது இறகிற்குள் பாது காக்கும் தாய்க்கோழி போல் ,அந்தத் தாயை என்னால் நோக்க முடிந்தது. தாயின் சுமையைக் குறைப்பதற்காக படிக்கின்ற சின்னவயதில் பொறுப்போடு நடந்து கொள்கிற மூத்த மகன் செல்வனின் பாத்திரப் படைப்பு பெரு மரியாதையைத் தருகிறது.
 
பாதிக்குமேல் அவனே கதாநாயகனாகி விடுகிறான்.இடம் விட்டு இடம் மாறும் போதெல்லாம் சைக்கிள் பிரயாணத்தில் அவர்கள் படும் பாடுகள் ,அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளும் போக்கு. கதாபாத்திரங்களோடு எங்களையும் பயணிக்க வைக்கிறது.
 
ரேணு,நதி என்கிற சகோதரிகளை பாதுகாக்கும் பொறுப்புள்ள அண்ணனாக மாறும் செல்வன் .தாய்க்கும் நம்பிக்கைக்குரிய தனயனாக மாறிவருது கதைக்கு வலுச்சேர்க்கிறது.
 
வன்னியப் பற்றிய காட்சிப் பகிர்வும்,வளங்கள் பற்றிய செய்திகளும் வாசிக்கும் போது. மகிழ்ச்சியைத் தருகிறது. கோழிய குளம்,கொம்பறுத்த மடு,விளக்குவைச்ச குளம்,மல்லாவி,கோட்டைகட்டிய குளம்,வன்னேரி,தென்னியன் குளம் போன்ற பகுதிகளில் எனக்குப் பரிச்சியம் வாய்ந்த படியால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.
 
புலம்பெயர்ந்து சென்ற போதும்,அந்த குடும்பத்தை ஆதரித்து உதவிகள் புரியும் ஏனைய கதாபாத்திரங்களும் கதைக்கு வலுச்சேர்க்கின்றன. பருவப்பெண்கள் இல்லாமல் கதைக்குச் சுவையே இருக்காது என்பதை உணர்ந்த ஆசிரியர். அதனை இதற்குள் புகுத்தியிருப்பதும் அழகு. சந்திப்புகளும், திடீர் திருப்பங்களும் காதலின் மனமுறிவும்.சுகமாக முடிவதும் ஆரோக்கியம்.
 
உழைப்பால் உயரும் செல்வனின் பொறுப்பான படைப்பு .அடுத்தவர்க்கு உத்வேகத்தைத் தருகிறது. சுரபியின் காதலை நயமாகச் சொல்லி சுகமாக முடித்து விடுகிறார். தாய் புவனாவின் ஆசை.யுத்தத்தின் இறுதிநாள் கடுமையும்,உறவுகளைப் பிரித்துவிடும் சோகமும். கலங்க வைக்கிறது. வாசகர்கள் வாசிக்கவேண்டிய நாவலிது.
 
ஆழிப்பேரலை சுனாமி என்ற யப்பான் சொல்லை உலகெங்கும் அறியத்தந்தது போல்.அப்பாவிகளாக கிராமங்களில் வாழ்ந்த நம் மக்களுக்கு இந்த யுத்தம் நவீன கொடிய ஆயதங்களை அறியவைத்துச் சென்றிருக்கிறது .
 
"எறிகணை" இதுவும் ஒரு ஆயுதம் என்பதை நாம் அறிவோம். 
 
தியாவுக்கு எமது வாழ்த்துகள். இனியும் அவரிடமிருந்து நல்ல ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம்.
 
 
நன்றி,
பொன்.புத்திசிகாமணி,
யேர்மனி.

 

 

 

"எறிகணை" நாவல் பற்றி பொன். புத்திசிகாமணி ஐயா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட மதிப்பாய்வு- நன்றி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் தியா..  வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்+

வாழ்த்துக்கள் தியா💖

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 15:30, பாலபத்ர ஓணாண்டி said:

தொடர்ந்து எழுதுங்கள் தியா..  வாழ்த்துக்கள்..

நன்றி 

On 31/12/2021 at 15:38, நன்னிச் சோழன் said:

வாழ்த்துக்கள் தியா💖

நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.