Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழர் தகவல்" ஆசிரியருக்கு கனடா அரசாங்க உயர் விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர் தகவல்" ஆசிரியருக்கு கனடா அரசாங்க உயர் விருது

[சனிக்கிழமை, 21 யூலை 2007, 05:51 ஈழம்] [காவலூர் கவிதன்]

கனடாவில் புதிய குடிவரவாளர்களுக்கு சேவையாற்றிய பதினான்கு பிரமுகர்கள் ஒன்ராறியோ மாகாண அரசினால் சிறப்பிக்கப்பட்டனர்.

கனடிய பல்கலாச்சார நாளை முன்னிட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விருது விழாவில், சிறப்பிக்கப்பட்ட பிரமுகர்களுக்கு விருதும் பதக்கமும் வழங்கப்பட்டது.

நியூகமர் சம்பியன் எவோர்ட்(Newcomer Champion Award) என்று அழைக்கப்படும், ஒன்ராரியோ மாகாணத்திற்கான இந்த உயரிய விருது இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

விருது பெற்றவர்களில் "தமிழர் தகவல்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் அவர்களும் அடங்கியுள்ளார்.

20070721001eo9.jpg

பல்லின பல்கலாச்சார சமூகங்கள் வாழ்கின்ற ஒன்ராறியோ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 14 பேரில், திருச்செல்வம் அவர்கள் மட்டுமே ஒரேயொரு ஈழத் தமிழர் ஆவார்.

குடியுரிமை, குடிவரவு அமைச்சர் மைக் கோல் விருதினையும் தங்கப் பதக்கத்தினையும் வழங்கினார்.

திருச்செல்வம் ஒரு மூத்த ஊடகவியலாளர். ஊடகத்துறையில் 40 ஆண்டுகளை பூர்த்தி செய்திருப்பவர். கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ச்சியாக "தமிழர் தகவல்" என்ற மாதாந்த தகவல் சஞ்சிகையை ரொறன்ரோவில் வெளியிட்டு வருபவர்.

தமிழர் தகவலால் நடத்தப்படும் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கும் பலரும் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்படுவர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய ஆண்டு மலரும் வெளியிடப்படுகிறது.

கடந்த பத்து வருடங்களாக வருடா வருடம் கனடிய நாள் விழாவையும் தமிழர் தகவல் நடத்தி வருகிறது.

கனடிய தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் கலை, இலக்கியப் பணியிலும் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பணியாற்றி வரும் திருச்செல்வம், ஒரு மூத்த அரசியல் ஆய்வாளராகவும் மதிக்கப்படுகிறார்.

இலங்கையில் லேக் ஹவுஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பணியாற்றிய பின், யாழ்ப்பாணத்தில் "முரசொலி" நாளேட்டினை தொடங்கி அதன் பிரதம ஆசிரியராக 1989 ஆம் ஆண்டுவரை அவர் பணியாற்றினார்.

விருது வழங்கும் விழாவின் போது, கடந்த 18 ஆண்டு காலமாக 20-க்கும் அதிகமான பொது அமைப்புக்களில் திருச்செல்வம் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட்டு உரையாற்றிய ஒன்ராறியோ அரச பிரதிநிதி, மாதம் ஒன்றுக்கு சுமார் 100 மணித்தியாலங்கள் தன்னார்வத் தொண்டராக மக்களுக்கு அவர் சேவை வழங்கி வருகின்றார் என்றும் குறிப்பிட்டார்

புதிளம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் திருச்செல்வம் அவர்களுக்கு இப்பாராட்டு வழங்கப்பட்டது மகிழ்ச்சியானது. கனடாவில் விருது பெறுவதற்கும் வழங்குவதற்குமெனவே ஒரு கூட்டம் மேடைபோட்டுத் திரியும் இவ்வேளையில் கனடிய அரசால் பாராட்டுப் பெறும் இவரை உலகத் தமிழர் அனைவர் சார்பிலும் பல்லாண்டு நலமுடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குச் சமூகமட்டத்தில் கிடைக்கும் கெளரவம் என்றைக்குமே, தமிழன் பற்றிய உயர்வான சிந்தனையை உலகமட்டத்தில் ஏற்படுத்தி நிற்கும். அவ்வாறே தவறான செய்கைகளும் அவனைத் தாழ்த்தி நிற்கவே உதவி செய்யும்.

இந்த வகையில் திருச்செல்வத்தின் பெருமை ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை. அவரால் நாமும் பெருமையடைகின்றோம்

அவரிற்கு இனிய வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

திரு. திருச்செல்வம் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்ந்து மேன்மேலும் சேவை செய்ய வாழ்துதுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்காக இலங்கை அரசின் உலங்கு வானூர்தியில், விடுதலைப் புலிகளை சந்திக்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை முரசொலி பத்திரிகையில் வந்ததற்காக இந்திய அமைதிப்படையின் அனுமதியுடன் இயங்கும் ஒட்டுப்படைகளினால் பரியோவான் கல்லூரியின் சிறந்த மாணவரான அகிலனை ,முரசொலி பத்திரிகை ஆசிரியரின் மகன் என்ற காரணத்தால் படுகொலை செய்யப்பட்டார். திரு. திருச்செல்வம் அகிலனின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by கந்தப்பு

திரு திருச்செல்வம் அவர்களுக்கு கிடைத்த விருது இன உணர்வோடு தனது மக்களுக்கு செய்யும் சேவைக்காக கிடைத்த விருது.

அனத்து தமிழர்களும் பெருமையோடு வாழ்த்துவோம்

திரு. திருச்செல்வம் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்ந்து மேன்மேலும் சேவை செய்ய வாழ்துதுகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.