Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜேந்திர பாலாஜி: அதிமுக முன்னாள் அமைச்சர் கர்நாடகாவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கர்நாடகாவில் தனிப்படை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 18 நாள்களாக நடந்து வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இதன் பின்னணியில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்தப் புகாரின் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் அவர் மீது கூறப்பட்டன.

இந்த மோசடி வழக்கில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதேநாளில், அ.தி.மு.க கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராஜேந்திர பாலாஜி, அதன்பிறகு எங்கே சென்றார் என யாருக்கும் தெரியவில்லை.

இதற்காக ஐந்து தனிப்படைகளை விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர் ஏற்படுத்தினார். ஆனால், எங்கு தேடியும் அவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின்னர், மேலும் 3 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒருகட்டத்தில், `கேரளாவில் பதுங்கியிருக்கிறார், கர்நாடகாவில் தலைமறைவாக இருக்கிறார்' என்றெல்லாம் யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியாயின.

 
Rajendra balaji

பட மூலாதாரம்,RAJENDRA BALAJI FACEBOOK

 
படக்குறிப்பு,

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் போலீஸார் கண்காணித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் ஒருவரின் கார் ஓட்டுநர் உள்பட சிலரை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், அவர் வெளிமாநிலத்துக்குத் தப்பிச் சென்றதாகவும் தகவல் கிடைத்ததாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்தவர்களிடம், யார் மூலம் எங்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற விசாரணையும் நடைபெற்று வந்தன. இருப்பினும், ராஜேந்திர பாலாஜி கிடைத்தால் மட்டுமே மேலும் விசாரணையை துரிதப்படுத்த முடியும் எனக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ` எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜியை தேடி வரும் பணிகள் நடக்கின்றன. இதுதொடர்பான விசாரணையில் 3 கோடி ரூபாயை அவர் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் நடைபெற்ற மொத்த ஊழலும் அவரால் மட்டும் நடைபெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் நடமாட முடியாத சூழல் வரும் என்றெல்லாம் அவர் பேசி வந்தார். தற்போது அவர்தான் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்' என்றார்.

தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர், திருச்சி என பல பகுதிகளில் தனிப்படை முகாமிட்டது. ஒருகட்டத்தில் டெல்லியில் பதுங்கியிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கான பணிகளில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருந்தனர். `ஓரிரு நாள்களில் ஜாமீன் கிடைக்கலாம்' எனக் கூறப்பட்ட நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் ராஜேந்திர பாலாஜிகைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி: அதிமுக முன்னாள் அமைச்சர் கர்நாடகாவில் கைது, முடிவுக்கு வந்த 18 நாள் தேடுதல் வேட்டை - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேந்திர பாலாஜி போலீஸ் வலையில் சிக்கியது எப்படி? இனி என்ன நடக்கும்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதன் மூலம் தனிப்படை போலீஸாரின் 18 நாள் தேடுதல் பணி முடிவுக்கு வந்துள்ளது. ` இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபராக ஆக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்ததில் உள்நோக்கம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள்.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் (2016-21) பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது ரவீந்திரன் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அந்த மனுவில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3.10 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான நல்லதம்பி என்பவர் மூலம் பணம் கைமாறப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் பதிவானது. இந்த வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது மோசடிக்குரிய குற்றம் என்பதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை

இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்கு விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் முயன்றனர். ஆனால், மாவட்டத்தில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, கர்நாடகம், டெல்லி எனப் பல மாநிலங்களில் அவரைத் தேடி வந்தனர். அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலரையும் போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால், ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் எனக் கண்டறிய முடியவில்லை.

ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் என்பவர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் முறையிடவே, வீட்டுக்குள் சோதனை நடத்திய ஆய்வாளர் சிவபாலனை காணொலி விசாரணையில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. `வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெறப்பட்டதா?' எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதில் அளித்த காவல் ஆய்வாளர் சிவபாலன், மாவட்ட எஸ்.பியின் அனுமதியின் பேரிலேயே சோதனை நடத்தியதாக கூறினார். இதையடுத்து `மாவட்ட எஸ்.பி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கர்நாடகாவில் சிக்கியது எப்படி?

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.கவினர், முன்னாள் அமைச்சருக்கு வேண்டியவர்கள் எனப் பலரிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் வைத்து ராஜேந்திர பாலாஜியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் முத்துப்பாண்டி, பலராமன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போல் பேச்சுக்களை அடிப்படையாக வைத்தே, போலீஸார் நெருங்கியதாகவும் அ.தி.மு.க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்துக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்து வரப்பட உள்ளதாகவும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு போலீஸ் கஸ்டடிக்குள் அவரைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 18 நாள்களாக ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அவருக்கு உதவிய நபர்களும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

டெல்லி, கேரளா என சுற்றினாலும் கர்நாடகாவை மையமாக வைத்து போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதன் பின்னணியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய நபர்கள் உதவி செய்வதை தனிப்படை போலீஸார் கண்டறிந்ததும் ஒரு காரணம் எனவும் அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ஏ1 மீது ஏன் நடவடிக்கை இல்லை?

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை, `` நாளை உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவரை அவசரம் அவசரமாக கைது செய்துள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன'' என்கிறார்.

``ராஜேந்திர பாலாஜி வழக்கில் புகார் கொடுத்த ரவீந்திரன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பத்திரத்தில், ` நான் நல்லதம்பியிடம்தான் பணம் கொடுத்தேன். அந்தப் பணம் திரும்ப வராததால் 28.8.2021 அன்று போலீசாரிடம் புகார் கொடுத்தேன். கடந்த 1.10.21 அன்று பணத்தை செட்டில் செய்துவிடுவதாக போலீசார் முன் உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு நல்லதம்பி சென்றார். ஆனால் அன்றைய தினம் போலீசாரிடம் கேட்டபோது, `நல்லதம்பி அந்த பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துவிட்டதாக கூறிவிட்டார். எனவே நீங்கள் ஐ.ஜியிடம் புதிய புகார் கொடுங்கள்' என்றனர். எனவே, ஐ.ஜியிடமும் புகார் கொடுத்தேன். உண்மையில் நான் ராஜேந்திர பாலாஜியை நேரில் பார்க்கவேயில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்தே இது பொய் வழக்கு என்பது நிரூபணமாகிறது'' என்கிறார் இன்பதுரை.

தொடர்ந்து பேசுகையில், `` நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த உண்மைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்திலேயே போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக நல்லதம்பி இருக்கிறார். இரண்டாவது குற்றவாளியாகவே ராஜேந்திர பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வரையில் ஏ1 ஆக சேர்க்கப்பட்ட நல்லதம்பி வெளியில் உலவிக் கொண்டுதானே கொண்டிருக்கிறார்? முதல் குற்றவாளியே சுதந்திரமாக விட்டுவிட்டு இரண்டாம் குற்றவாளியாக உள்ள ராஜேந்திர பாலாஜியை மட்டும் பிடிக்க சொல்லி எந்த சட்டம் சொல்கிறது? அவரை சிறையிலடைக்க காவல்துறை இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன?'' எனக் கேள்வி எழுப்புகிறார்.

அவமானப்படுத்துவதுதான் நோக்கம்

 

ராஜேந்திர பாலாஜி

பட மூலாதாரம்,RAJENDRA BALAJI FB

 

படக்குறிப்பு,

ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர்

மேலும், ``ராஜேந்திர பாலாஜி வெளியில் இருந்தால் சாட்சியைக் கலைத்துவிடுவார் எனவே அவரை கைது செய்யவேண்டிய அவசியம் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அப்படியானால் ஏ1 ஆக இருப்பவர் சாட்சியைக் கலைக்க மாட்டாரா? இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்து அவரை அவமானப்படுத்த வேண்டும். அதன்மூலம் அ.தி.மு.கவை களங்கப்படுத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க அரசின் திட்டம்'' என்கிறார்.

``அப்படியானால், சட்டரீதியாக சந்திக்காமல் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?'' என்றோம். `` அவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என எட்டுக்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்தனர். தொடர்ந்து அடுக்கடுக்காக பொய் வழக்கு போடுகின்றனர். அதனால் உச்ச நீதிமன்றத்தின் துணையோடு இந்த வழக்கை எதிர்கொள்ள நினைத்தார். அது அவரது சட்ட உரிமை. இந்த வழக்கை சட்டப்படியாக சந்தித்து நிரபராதியாக ராஜேந்திர பாலாஜி வெளியில் வருவார்'' என்றார்.

தி.மு.க சொல்வது என்ன?

அ.தி.மு.க தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி, `` இது பழைய வழக்கு. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்றபோது, ` இது பிணை வழங்க முடியாத குற்றம்' என நீதிமன்றம் தெரிவித்தது. ரவீந்திரன் கொடுத்த புகாரில் நல்லதம்பி பணம் வாங்கியதாக இருந்தாலும், ராஜேந்திர பாலாஜியின் அதிகாரத்தை வைத்துத்தான் இந்தப் பணம் வாங்கப்பட்டது. இவர் அரசு ஊழியர் என்பதற்காகத்தான் லஞ்சம் வாங்கப்பட்டது. அதனால்தான் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எங்களால் நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது,'' என்கிறார்.

``அரசியல் பழிவாங்கும் நோக்கம் இருப்பதாகக் கூறுகிறார்களே?'' என்றபோது, ``அப்படி எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை. இந்த வழக்கில் ஏ1 ஆக குற்றம் சாட்டப்படும் நல்லதம்பியும் கைது செய்யப்படுவார். மோசடி வழக்கில் முகாந்திரம் இருந்ததால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியூர்களுக்கு ராஜேந்திர பாலாஜி தப்பிச் சென்றார். கொலைக்குற்றத்தைவிட பெரிய குற்றமாக, மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டுவதைப் பார்க்கிறோம். அதனால் அரசு தன்னுடைய கடமையைச் செய்கிறது,'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-59883849

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பேச்சு தான்.. இவ்வளவும் செய்து.. இன்னும் செய்யும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20வரை நீதிமன்ற காவல் - கைது பற்றி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் - முழு விவரம்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராஜேந்திர பாலாஜி

பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ஆம் தேதிவரை காவலில் வைத்திருக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜியை, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மத்தியில் சிறையில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது கைது நடவடிக்கையில் இத்தனை அவசரம் காட்ட வேண்டியது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.

`முன்ஜாமீன் மனுவை நாங்கள்தான் ஜனவரி 6ஆம் தேதி எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஆனால், ஒருநாள் அவகாசம் இருக்கும்போது ஒரு நாள் முன்னதாக அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3.10 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகார் கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனுவை விசாரித்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இதன்பிறகும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ஒன்பது புகார்கள் ராஜேந்திர பாலாஜி மீது கொடுக்கப்பட்டன.

இதனால், காவல்துறை தன்னைக் கைது செய்யலாம் என்பதை அறிந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து, எட்டு தனிப்படைகளை அமைத்து டெல்லி, கர்நாடகா, கேரளா எனப் பல மாநிலங்களில் போலீஸார் அவரைத் தேடி வந்தனர். சுமார் 18 நாள்களாக இந்தத் தேடுதல் வேட்டை நீடித்தது.

இதுதொடர்பாக, ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் எனப் பலரையும் போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால், எங்கு தேடியும் ராஜேந்திர பாலாஜி கிடைக்கவில்லை.

 

ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் தங்கியிருப்பதை அறிந்து அவரைப் பின்தொடர்ந்து சென்று போலீஸார் கைது செய்தனர். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க பிரமுகர் ராமகிருஷ்ணன், நாகேஷ், ரமேஷ் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலத்துக்கு அழைத்து வந்தனர்.

ஆவின் மோசடி வழக்கில் சுமார் 3 மணி நேரம் வரையில் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்நது, 20 ஆம் தேதி வரையில் ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

முன்னதாக, தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (6 ஆம் தேதி) விசாரணைக்கு வரவிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்பாக இன்று ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, `ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்வதில் ஏன் இவ்வளவு அவசரம்? எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ` நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா?' எனவும் கூறியுள்ளனர்.

 

ராஜேந்திர பாலாஜி

 

படக்குறிப்பு,

வழக்கறிஞர் இன்பதுரை

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞரும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை, ``ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா தலைமைலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முதலாவது அமர்வு முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ` இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் பழிவாங்கும் உணர்வுடனும் போடப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நேற்று ராஜேந்திர பாலாஜியை கைது செய்துள்ளனர். நாங்கள் கடந்த 28 ஆம் தேதி முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக இந்த வழக்கை ஆறாம் தேதி (இன்று) எடுத்துக் கொள்வதாகக் கூறியிருந்தீர்கள். அதற்குள் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அது தவறு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சுட்டிக் காட்டியுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போதே அவரைக் கைது செய்தது விதிகளுக்கு முரணானது' என்று வாதிட்டார்.

அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

இதற்கு மூன்று நீதிபதிகளும் தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தலைமை நீதிபதி விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியை நோக்கி` உச்ச நீதிமன்றம் உறங்குவதாக நினைக்கிறீர்களா? உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

ராஜேந்திர பாலாஜி

நாங்கள்தான் ஆறாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஒருநாள் அவகாசம் இருக்கும்போது அவரை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா? இதனை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம். அவரது வழக்கறிஞரை தொந்தரவு செய்தீர்களா?' என்றனர்.

இதற்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை. அவரைக் கைது செய்துள்ள விவரத்தை மட்டுமே என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர். விரிவான தகவல்களை அரசிடம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்.

`உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கைது செய்யக்கூடாது என தெரியாதா?' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன்பிறகு மூத்த வழக்கறிஞர் கிரி வாதிடும்போது, ` இந்த வழக்கில் இன்னும் 3 பேரைக் கைது செய்ய உள்ளனர். அவர்களில் ஒருவர் வழக்கறிஞர்' என்றார். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் தடை விதித்தனர்.

இதில், வழக்கின் முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான நல்லதம்பியின் வழக்கறிஞர், `நல்லதம்பிக்கு முன்ஜாமீன் வேண்டும்' எனக் கேட்க, `நீங்கள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்' என்று கூறிய நீதிபதிகள். இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்'' என்றார்.

https://www.bbc.com/tamil/india-59893706

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.