Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்’

 

 

மகேஸ்வரி விஜயனந்தன்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும் அது இறைமையுள்ள நாடு என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, நேற்று (19) நினைவூட்டினார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்தத் தவறியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,
 
நாம் இறையாண்மையுள்ள நாடு, இந்தியாவின் ஒரு பகுதி அல்ல எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது கவலைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக எங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

"எங்கள் தமிழ் சகோதரர்கள்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விழித்த அவர், இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் தங்கள் கவலைகளை கலந்துரையாடியிருக்க வேண்டும் என்று ஷ மீண்டும் வலியுறுத்தினார்.

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதியும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்று முன்தினம் (18) சந்தித்து குறித்த ஆவணத்தைக் கையளிதிருந்தது.

குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரும் அடங்குகின்றனர்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்காக 13ஆவது திருத்தத்தை கட்டியெழுப்புவதற்கு கடந்த காலங்களில் இந்திய மற்றும் இலங்கைத் தலைவர்கள் செய்த பல பொது உறுதிமொழிகளை அந்த ஆவணம் நினைவு கூர்ந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள், பிளவுபடாத நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, அவர்களின் இயற்கை வாழ்விடங்களில் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆவணத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினையில் காலத்துக்குக் காலம் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், அவற்றை அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார்.

 

Tamilmirror Online || ’மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்’

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தங்கள் கவலைகளை கலந்துரையாடியிருக்க வேண்டும்

தமிழினத்தை அழித்தவாறு கவலைகளைக் கூறட்டாம். எவளவு தலைக்கனமான வினா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் கவலைகளே இவர்கள்தான். கள்ளனிடம் நிஞாயம் கேட்பவருண்டோ? அதிலும் இதுகள் யாரிடம் எடுத்தார்களோ அவர்களை கள்ளர் ஆக்கும்போது கேட்க முடியுமோ? இவருக்கு குசும்பு கூடிபோய்ச்சு.

தமிழரின் கவலை என்னவென்று தெரியாதவர், சொன்னால் மட்டும் விளங்கிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.