Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில் சிறுபோகத்தில் இராணுவத்தையும் இணைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில் சிறுபோகத்தில் இராணுவத்தையும் இணைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - கருணாகரன்

January 21, 2022
AVvXsEgHrbw93tzZOjp0TDLU4aeKzvXe0zGkQK5FGAzvqq8FCQav1IIkcMlI0J2MTa9BGJEf5dwSnOKqhoqBlPgc4u6uiS2A_06A2k9OBzmbte1DNVkinAuJW6YUmz_dPs8dkfpJTiyUkII6HzbFogPQ5WdTkXXy9jDDFytbIZOHFOsuN2c7R2FdKIvE7nMCqw=s16000

(வரதன்)

சேதனப்பசளை பாவனை பாரிய விவசாய புரட்சி திட்டமாகும்.இராணுவத் தினர் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி சேதனப் பசளையை உற்பத் தியை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பசுமை செயலணி திட்டத்தை முன்னெடுக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு உணவு சுகாதாரம் ஆகிய பாதுகாப்புக்கள் முக்கியமானவை.உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெ டுக்கிறது.எமது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது என்பதற் காகவே இந்த பசுமை செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது மட்டு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தை 33 ஆயிரத்து 700 ஹெக்டெ யரில் நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.என மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பசுமை செயலணி பயிற்சி செயற்பட்டறையில் இவ்வாறு கருத்துதெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கு திட்டத்திற்கமைவாக இலங்கையில் பசுமை நஞ்சற்ற நாடு திட்டத்தின் கீழ் சேதன உர உற்பத்தியும் பாவனை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் உணவு உற்பத்தி திறனை அதிகரிக்கும் முகமாக மாவட்டத்திலுள்ள விவசாய திணைக்கள மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள உரச்செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பசுமை செயலணியின் செயற்திட்டம் தொடர்பான செயலமர்வு இன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.இவ் நிகழ்விற்கு மட்டு மாவட்ட பசுமை செயலணி இணைப்பாளர் நிலுக்க பண்டார (231வது பிரிகெட் கொமாண்டர் ) மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த். மட்டு மாவட்ட விவசாய திணைக்கள- கமநல அபிவிருத்தி திணைக்கள (உரச்செயலக) உயர் அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகதர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.
 

 

http://www.battinews.com/2022/01/blog-post_297.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான படைத்துறை ஆளுகைக்குள் நாடு (வட-கிழக்கு) செல்கிறது. இதுனூடாகச் சாதாரண விவசாயிகள் முதல் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் ஏழைத்தொழிளார்களும் பாதிப்படைவர். படைத்துறை ஊதிப்பெருத்து நிற்பதன் விளைவு. கோட்டவைநோக்கித் திரும்பாது தடுக்கும் உத்தியாகவும் இதனைப் பார்க்கலாம்.

Edited by nochchi
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிங்கள மாவட்டங்களில் இத்திட்டம்  தொடங்கப்படவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்கள் மீது பொருளாதாரத் தடைபோட்டு எங்கள் விளை நிலங்களை இந்த இராணுவம் தடுத்து பாதுகாப்பு வேலிகளை போட்ட போதும் நாம் விவசாயம் செய்தோம். இப்ப என்ன இராணுவம் வேண்டிக்கிடக்கு விவாசாயத்துக்கு? இராணுவம் செய்த அழிப்புக்களை மறைத்து, தமிழரின் காவலர் படம் காட்ட வேண்டும், வெளிநாடுகள் இந்த இராணுவத்தை தூதுவர்களாக ஏற்க வேண்டும். முன்பு அடாவடி, இப்போ நயவஞ்சகம். நாங்கள் மறக்கலாம், மன்னிக்கலாம் ஆனால் அவன் எங்களை அழிப்பதையும், சுரண்டுவதையும் நிறுத்தப்போவதில்லை. அப்படி முடியுமானால்; பிடித்த நிலங்களை விடுவிக்கட்டும், நமது அரசியல் கைதிகளைவிடுவிக்கட்டும், சிங்கள குடியேற்றங்களை தடுக்கட்டும், நமது பறிக்கப்பட்ட அதிகாரங்களை திருப்பி தரட்டும். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம், நமது தேவையும் அதுதான், நல்லிணக்கமும்  அதுதான். எங்கள் மண்ணில் என்ன செய்யவேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. ஒவ்வொரு கட்டுப்பாடு போட்டு சுரண்டி முடிந்து, இப்போ தட்டுப்பாடுகளை காரணம் காட்டி சிங்கள குடியேற்றங்களை துரிதப்படுத்தும் தந்திரம். கடல் வளம் போட்டுது இப்போ விவசாயம். எப்போ நம்மவர் திருந்துவது? ஒரு சிங்களவன் மாத்தையா என்று அழைத்தால் போதும், வாங்கோ இருங்கோ, என்ன வேணும்? எடுங்கோ என்று நாமே கொடுத்து அழகு பாப்போம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.