Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் குவியும் விடுதலைப் புலிகளின் படையணிகள்: கொழும்பு வார ஏடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் குவியும் விடுதலைப் புலிகளின் படையணிகள்: கொழும்பு வார ஏடு

[புதன்கிழமை, 25 யூலை 2007, 14:26 ஈழம்] [பி.கெளரி]

கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக எண்ணிக்கொண்டு இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பெரும் தாக்குதலுக்கு தயாராகுவதாகவும், அவர்களின் படையணிகள் மன்னாரில் குவிக்கப்படுவதாகவும் கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.07.07) வெளிவந்த "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்:

கடந்த வெள்ளிக்கிழமை 1,000 தொடக்கம் 1,200 வரையிலான விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஒன்று கூடியிருந்தனர். இருபுறமும் உள்ள அவர்களது முன்னணி பாதுகாப்பு நிலைகளுக்கு அவர்கள் நகர்த்தப்படனர். பெருமளவான விடுதலைப் புலிகள் மன்னாரை நோக்கி நகர்த்தப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வன்னியின் எல்லைப்புறங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகளிர் படையணியான சோதியா படையணி மல்லாவியில் நிலை கொண்டுள்ளது. இந்த எல்லா நிகழ்வுகளும் போர் வடக்கு நோக்கி நகர்வதையே கட்டியம் கூறுகின்றது. குறிப்பாக இது ஓமந்தைக்கு மேற்காகவும் மணலாறு நோக்கியதாகவும் உள்ளது. இந்த ஆயத்தங்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மன்னாரின் நீலாச்சேனையில் உள்ள இராணுவ நிலைகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் நடைபெறும் போது உயிலங்குளத்தில் உள்ள 21 ஆவது படையணியின் 5 ஆவது பிரிக்கேட்டின் தலைமையகம் மீது கடுமையான எறிகணை வீச்சுக்களும் நடத்தப்பட்டுள்ளன. இது தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்புவதை தடுக்கும் உத்தியாகும். இதுவும் ஓமந்தைக்கு மேற்குப் பகுதியில் நடைபெற்று வரும் மோதல்களின் தொடர்ச்சியாகும்.

தம்பனை, பெரியதம்பனைப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. இதில் 10 படையினர் பலியானதுடன் 5 பேர் காணாமல் போயிருந்தனர். இவர்களில் இருவர் பின்னர் தளத்திற்கு திரும்பியிருந்தனர். ஒருவரின் சடலத்தை படையினர் கண்டெடுத்ததுடன், இருவரின் சடலங்களை விடுதலைப் புலிகள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்திருந்தனர்.

கிழக்கு பகுதியில் நடைபெறும் படை நடைவடிக்கை முடிவுற்றதும் படையினர் வட போர்முனையின் முன்னணி நிலைகளில் செறிவாக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

படையினர் ஓமந்தைக்கு மேற்காக உள்ள முன்னணி நிலைகளை அண்டிய பகுதிகளிலும், மணலாற்றின் முன்னணி நிலைகளிலும் நடைவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கல்மடுவை தளமாக கொண்டு அமைக்கப்பட்ட இராணுவத்தின் 57 ஆவது புதிய படையணி இத்தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.

இப்படையணி முன்னர் நடத்திய தாக்குதல்களுக்கு அதிர்ச்சிகரமான பதிலடியை விடுதலைப் புலிகள் முள்ளிக்குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் வழங்கியிருந்தனர். இந்த தாக்குதலின் போது பம்பைமடுவில் அமைந்திருந்த பீரங்கிப் படை றெஜிமென்ட் கடுமையாக பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

விடுதலைப் புலிகள் தமது படையணிகளையும், கனரக ஆயுதங்களையும் மன்னாரை நோக்கி நகர்த்தி வருவதாக இராணுவ மற்றும் பொதுமக்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மரபுவழி போர் வலுவை அழிப்பது தான் படையினரின் நோக்கம். கிழக்கு படை நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தப்பும் வழிகளை தடைசெய்யும் நோக்குடன் வாகரை, கதிரவெளி காட்டுப்பகுதிகளில் படையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் சிறப்பு படையணியின் படைப்பிரிவுகள் குடும்பிமலை மீதான நடைவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டன.

இந்த கொமாண்டோ மற்றும் இலகு காலாட் படை படையணி பற்றாலியன்களை கொமாண்டோ படையணியின் பிரிக்கேடியர் சார்லி கலகே வழிநடத்தியிருந்தார். சிறப்புப் படையணியை ஒரு புதிய டிவிசனாக உருவாக்க அரசு முயன்று வருகின்றது.

உருவாக்கப்படும் புதிய 58 ஆவது படையணியை மணலாற்றில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவம் புதிக கவசத்தாக்குதல் படையணியையும் உருவாக்கி வருகின்றது. இப்படைப்பிரிவின் மூன்றாவது றெஜிமென்ட் இந்த மாதத்தின் முற்பகுதியில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளது.

இந்த படையணிக்கான படையினர் கவசப்படைப்பரிவு, சிறப்பு படைப்பிரிவு போன்றவற்றில் இருந்து தான் ஆரம்பத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். எனினும் தற்போது நேரடியாக புதிய ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னைய படை நடைவடிக்கைகளின் போது சில சந்தர்ப்பங்களில் படையினரின் நகர்வுத்திறன் குறைவாக இருந்ததனால் கவசத்தாக்குதல் படைப்பரிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் நகர்கோவில் முகமாலை களமுனைகளில் படையினர் பெரும் டாங்கிப் படை நடவடிக்கையை மேற்கொள்வது சாத்தியமற்றது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற சமரில் டாங்கிப்படை கடுமையான இழப்புக்களை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கவசத்தாக்குதல் படைப்பிரிவு துருப்புக்காவி கவசவாகனங்களையும், இலகுகாலாட் தாக்குதல் வானகங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவை தாக்குதலில் ஈடுபடுதல், துருப்புக்களை இடம்மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். இதில் உள்ள எல்லா கவச வாகனங்களும் எல்லாச்சக்கரங்களும் இயங்கும் தன்மையை கொண்டவை (அதாவது 6 இற்கு 6 அல்லது 8 இற்கு 8). இதனால் கரடுமுரடான தரையமைப்புக்களிலும் அவை இயங்கக்கூடியவையாக இருக்கும்.

இந்தப் படையணியின் தாக்குதல் ஆயுதங்கள் அதன் வாகனங்களிலேயே பொருத்தப்பட்டிருக்கும். இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியங்கி பீரங்கிகள், நேரடியான சூடுகளை வழங்கும் சிறிய ரக ஹெவிச்சர் பீரங்கிகள் போன்றன அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam

புலிகள் மன்னாரில் குவிக்க படுவதால் தாக்குதல் கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில் நடை பெறும் எண்று நம்பலாம்.... !

((எல்லாரும் தெரிய படை நடத்தப்படுகிறது இது புலிகள் பாணி இல்லையே...?)) ஆகவே மற்றவர்கள் குழப்பும் போது நானும் கொஞ்சம் கலக்கி விட ஆசை பட்டதால் வந்த வினை... இது ...

குறிப்பு:: களத்தில் குழப்பம் விளைவிக்கும் கருத்து எழுதினால் எச்சரிக்கை வளங்கப்படும்..(தயா)

சரத் பொன்சேகா கூறுவது போல கிழக்கில் படைசெறிவை குறைத்து வடக்கில் செறிவை அதிகரிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது கிழக்கில் நிலைகொண்டிருக்கும் புலிகளின் கொரில்லா தாக்குதல்களை செறிவு குறைந்த பகுதியால் சமாளிக்க முடியாதது

மிகப்பெரிய வலிந்த தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என பலரும் கட்டியம் கூறினாலும் எந்த பகுதியில் நடக்கும் என்பது புரியாத புதிர் என்பதில் சந்தேகம் இல்லை.புலிகளை பொறுத்தவரையில் தாக்குதல் செய்துவிட்டுத்தான் பேசுவார்கள் சிலவேளை பலமுனைகளில் களம் திறக்கவும் வாய்பிருகின்றது.வடக்கை பொறுத்தவரையில் மன்னார்,வவுனியா,மணலாறு,முகமா

Edited by ஈழவன்85

இப்படியான செய்திகள் சிங்கள பத்திரிக்கை ஆசிரியரின் கற்பனையுடன் இராணுவத்தை விழுப்புடன் இருக்க செய்வதுற்க்கே...................

புலிகளின் தாக்குதல் திட்டங்கள் தக்க தொடங்கிய பின் தான் எல்லாம் வெளிச்சம்.

dsdfs1ez3.jpg

விடுதலை புலிகள் ஏடு மே 1984

படம் சிறிதாக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் புலிகளின் போர் அணிகள் குவிப்பு ஓமந்தை, மணலாறில் படையினர் ஆயத்தம் வடக்கில் இருதரப்புகளும் பெரும் போருக்குத் தயார்

படையினர் ஓமந்தைக்கு மேற்காக உள்ள முன்னணி நிலைகளை அண் டிய பகுதிகளிலும், மணலாற்றின் முன் னணி நிலைகளிலும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா கல் மடுவை தளமாகக்கொண்டு அமைக்கப் பட்ட இராணுவத்தின் 57 ஆவது புதிய படையணி தாக்குதலில் ஈடுபட்டு வரு கின்றது.

இந்தப் படையணி முன்னர் நடத்திய தாக்குதல்களுக்கு அதிர்ச்சிகரமான பதி லடியை விடுதலைப் புலிகள் முள்ளிக் குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் வழங்கியிருந்தனர். இந்தத் தாக்குதலின் போது பம்பைமடுவில் அமைந்திருந்த பீரங்கிப் படை கடுமையாக பீரங்கித் தாக குதலுக்கு உள்ளாகியிருந்தது.

விடுதலைப் புலிகள் தமது படை யணிகளையும், கனரக ஆயுதங்களை யும் மன்னாரை நோக்கி நகர்த்தி வருவ தாக இராணுவ மற்றும் பொதுமக்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மரபுவழி போர் வலுவை அழிப்பதுதான் படை யினரின் நோக்கம். கிழக்கு படை நடவ டிக்கையில் விடுதலைப் புலிகளின் தப் பிச் செல்லும் வழிகளை தடைசெய்யும் நோக்குடன் வாகரை, கதிரவெளி காட் டுப்பகுதிகளில் படையினர் குவிக்கப்பட் டனர். பின்னர் சிறப்புப் படையணியின் படைப்பிரிவுகள் குடுமிமலை மீதான நடைவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டன.

புதிதாக உருவாக்க உத்தேசிக்கப் பட்டுள்ள 58 ஆவது படையணியை மண லாற்றில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிலங்கா இரா ணுவம் புதிய கவசத்தாக்குதல் படைய ணியையும் உருவாக்கி வருகின்றது. இந்த படைப்பிரிவின் மூன்றாவது றெஜி மென்ட் இந்த மாதத்தின் முற்பகுதியில் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளி யேறியுள்ளது.

முன்னைய படை நடவடிக்கைகளின் போது சில சந்தர்ப்பங்களில் படையின ரின் நகர்வுத்திறன் குறைவாக இருந்த தனால் கவசத்தாக்குதல் படைப்பரிவு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் நாகர் கோவில், முகமாலை களமுனைகளில் படையினர் பெரும் டாங்கிப் படை நட வடிக்கையை மேற்கொள்வது சாத்தி யமற்றது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற சமரில் டாங்கிப்படை கடு மையான இழப்புக்களை சந்தித்திருந் தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படையணியின் தாக்குதல் ஆயுதங்கள் அதன் வாகனங்களிலேயே பொருத்தப்பட்டிருக்கும். இயந்திரத் துப் பாக்கிகள், தானியங்கி பீரங்கிகள், நேர டியான சூடுகளை வழங்கும் சிறிய ரக ஹெவிச்சர் பீரங்கிகள் போன்றன அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - என்று ஷடிபென்ஸ் டயறி|யில் விவரிக் கப்பட்டுள்ளது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.