Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா குழுவின் அட்டகாசத்தின் மத்தியிலும் மட்டக்களப்பில் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடையடைப்பு

Featured Replies

கருணா குழுவின் அட்டகாசத்தின் மத்தியிலும் மட்டக்களப்பில் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடையடைப்பு

- ஜெயானந்தமூர்த்தி

மூதூர் பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்தமையைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பில் வடகிழக்கில் இன்று பூரண கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் துணை ஆயுதக் குழுவின் அட்டகாசம் ஆங்காங்கே காணப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்” மூதூர் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் அப்பிரதேசத்து மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசின் இக்கண்மூடித்தனமான நடவடிக்கையைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பூரண கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று வடகிழக்கு பிரதேசமெங்கும் பூரண கடையடைப்பும் பணிப்புறக்கணிப்பும் இடம் பெற்றுள்ளது. இதற்கு முதலில் எமது தாயக மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் துணை ஆயுதக்குழுவின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்பட்டது. இவர்கள் பொதுமக்கள், வர்த்தக உரிமையாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோரை கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது என ஆயுதமுனையில் மிரட்டியதுடன் ஒலிபெருக்கி மூலமாகவும் அறிவித்துள்ளனர். எனினும் எவரும் இதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் மாவட்டத்தின் இயப்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்ததுடன் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களும் இயங்கவில்லை. வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

எமது தாயக மக்கள் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான நடவடிக்கைக்கு இன்று தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அதிலும் கிழக்கு மாகாணத்தை தாம் கைப்பற்றி தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் மக்களை விடுவித்துள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் பாறைசாற்றி வருகின்றபோதிலும் மக்கள் தமது எதிர்பலையைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசுக்கும் அரச படையினருக்கும் முண்டுகொடுத்து வரும் துணை ஆயுதக்குழுவினர் மக்களை தமது விருப்புக்குமாறாக அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் தமது இலக்கை அடைய முனைகின்றனர்.

இதுபோன்றே எதிர்வரும் காலத்தில் எந்தவொரு தேர்தல் வருமானாலும் ஆயுதக்குழுக்களின் பிரசன்னமிருப்பின் மக்கள் ஆயுதமுனையில் மிரட்டப்பட்டு அவர்களின் விருப்புக்குமாறாக வாக்களிக்கும் நிலை ஏற்படும். எனினும் ஐனநாயக ரீதியில எந்தவித அச்சுறுத்தலுமின்றி ஒரு தேர்தல் நடைபெறுமானால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத்தவிர எந்தவொரு கடசிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

பதிவு

எனது நன்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி பாரிய வெற்றியாக முடிந்துள்ளது

பிரிக்க முடியாது எங்களை என்று தமிழ்மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்...............

கொள்கை இல்லாத கழிசறைகளுக்கும் கொள்கை பிடிப்புள்ள புலிகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை மக்கள் நன்கு உணருவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

மட்டக்களப்பு அதிர்ருதில்ல B)

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மெளனமாக இருந்தாலும் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.. மக்களின் தலைமையை மக்கள்தான் எப்போதும் தீர்மானிக்கின்றார்கள், தலைமையைத் திணிக்கமுடியாது என்பதற்கு நல்ல உதாரணம் இன்றைய நிகழ்வு.

யாழ் குடாநாட்டு பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முழுமையாகக் கடைப்பிடிப்பு.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்ற பணிப் புறக்கணிப்பப் போராட்டம் சுமாராக வெற்றி பெற்றுள்ளது. மூதுரை உயர் பாதுகாப்பு வலமாக பிரகடனம் செய்ததைக் கண்டித்து இடம்பெற்ற இந்த தொழில் புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

காலையில் இலங்கை போக்குவரத்து சேவை பேரூந்துகள் மற்றும் தனியார் சிற்றூர்த்திகளும் காலை 7.00 மணிக்குப் பின்னர் மடடுப்படுத்திய அளவில் சேவையில் ஈடுபட்டது.

அரச ஊழியர்களின் வருகை குறைந்து காணப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டது. சில இடங்களில் படைத்தரப்பினர் பூட்டிய வர்த்தக நிலையங்களை திறப்பி;த்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது.

சங்கானை மற்றும் யாழ் நகரப் பகுதியில் சில இடங்களிலும் இத்தகைய சம்பவங்கள் இடம் பெற்றதைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன. இதே நேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் பலர் துப்பாக்கி முனையில் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

சங்கானையில் காலை 9.00 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்த போதிலும் இராணுவத்தினர் வீடுகளுக்குச் சென்று வர்த்தகர்களை அழைத்து வந்து கடைகளை திறந்து மாலை வரை பூட்டக் கூடாது என அச்சுறுத்தி விட்டும் சென்றள்ளார்கள். ஆனாலும் பெருமளவில் யாழ் நகரப் பகுதியில் கடைகள் பூட்டப்பட்டுக் காணப்பட்டன.

இன்று யாழ் குடா நாட்டில் வழமைக்கு மாறாக சன நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. போக்குவரத்துச் சேவைகளும் மட்டுப்படுத்திய அளவிலேயே இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்துக்கு எதிர்ப்பு: தமிழர் தாயகத்தில் முழு அளவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

திருகோணமலை மாவட்டம் மூதூர், சம்பூர் பிரதேசங்களை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியதைக் கண்டித்து தமிழர் தாயகம் முழுவதும் இன்று புதன்கிழமை முழு அளவில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பாடசாலைகள், சிறிலங்கா அரசாங்க திணைக்களங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியன இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்களும் தடைப்பட்டன.

யாழ்ப்பாணம்

யாழ். நகரப்பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல்கலைக்கழக சுற்றாடலிலும் பலாலி வீதியிலும் பெருமளவிலான சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். நகரப்பகுதி பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாததால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.

சிறிலங்கா அரச பேரூந்துகள் மட்டும் சேவையில் ஈடுபட்டன. இருப்பினும் அவையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையையே மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமப்பகுதி கடைகளின் உரிமையாளர்களை மிரட்டி கடைகளை திறக்குமாறு சிறிலங்கா இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் அறிவித்தல் விடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் பலர் துப்பாக்கிமுனையில் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டுள்ளனர். சங்கானையில் காலை 9.00 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்த போதிலும் இராணுவத்தினர் வீடுகளுக்குச் சென்று வர்த்தகர்களை அழைத்து வந்து கடைகளை திறந்து மாலை வரை பூட்டக்கூடாது என அச்சுறுத்தி விட்டும் சென்றுள்ளனர். இருப்பினும் பெருமளவில் யாழ். நகரப் பகுதியில் கடைகள் பூட்டப்பட்டுக் காணப்பட்டன.

யாழ். குடாநாட்டில் வழமைக்கு மாறாக மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது.

கிளிநொச்சி- முல்லைத்தீவு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டது.

கடைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் நடைபெறவில்லை.

வீதிகளிலும் கடைகளிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டன.

வவுனியா

வவுனியாவில் நகரப்பகுதி கடைகள் திறக்கப்படவில்லை. பாடசாலைகள், வங்கிகள், சிறிலங்கா அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியன இயங்கவில்லை.

அனைத்து வீதிகளும் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் வீடுகளில் முடங்கியிருந்த போதும், நண்பகல் மூடப்பட்ட கடைகளைத் திறக்க வலியுறுத்தி ஒலிப்பெருக்கி மூலமாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்தல்களை விடுத்த வண்ணம் இருந்தனர். எனினும் அங்கு கடைகள் திறக்கப்படவில்லை.

ஓமந்தை சோதனைச் சாவடி வழமை போல திறக்கப்பட்டிருந்தது. எனினும் மக்கள் போக்குவரத்து குறைவாக இருந்ததாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னார்

மன்னாரில் போக்குவரத்துச் சேவைகள் எதுவுமே இயக்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவருமே பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிலங்குளம் பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாததால் இன்று நடைபெறவிருந்த இரண்டாம் தவணைத் தேர்வுகள் எதிர்வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

திருகோணமலை

சிறிலங்கா ஆக்கிரமிப்பில் உள்ள திருகோணமலையில் பெரும்பாலான பகுதிகளில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து இன்றைய நாளில் கடைகள் திறக்கப்படடிருந்தன. எனினும் புறநகர்ப்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகளுக்கு போதிய மாணவர் செல்லாததால் ஆசிரியர்கள் கையொப்பமிட்டுச் சென்றனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் தமிழ்ப் பிரதேசங்களில் முழுமையான பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினரும் சிறிலங்கா காவல்துறையினரும் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் அச்சுறுத்தல் இருந்தபோதும் பொதுமக்கள் முழு அளவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.