Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர்களான சி .பி ரத்நாயக்க, சன்ன ஜெயசுமணவுடன் 40 க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் இணைந்து குருந்தூர்மலையில் பிரித் ஓதல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on 2022-02-07 11:25:04

 
 

(கே .குமணன்) 

 

தொல்லியல் அகழ்வு இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டுவரும் முல்லைத்தீவு குமுளமுனை  தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு  சனிக்கிழமை 5 ஆம் திகதி வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி பி ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் இணைந்து  திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

 

IMG_5568.jpg

 

முன்னதாக சுந்திரத்தின நாளான கடந்த 04 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் , சிவஞானம் ஸ்ரீதரன் , இரா .சாணக்கியன் உள்ளிட்டோர் சுதந்திர தின நாளுக்கு எதிர்ப்பை வெளியிடும் முகமாக தமிழ் மக்களின் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டுவரும் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு விஜயம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில் அதற்க்கு மறுநாள் அமைச்சர்களின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

 

IMG_5560.jpg

 

IMG_5567.jpg

 

ஹெப்பத்திகொல்லாவ, மணலாறு , அரிசிமலை பகுதிகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் 40 பேருக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அமைச்சர்களோடு குருந்தூர் மலையில் 7 மணி தொடக்கம் நள்ளிரவுவரை பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

 

IMG_5559.jpg

 

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு வட்டுவாகலில் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமில் இரவு தங்கிய இரண்டு அமைச்சர்களும்  காலை புறப்பட்டு சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அமைச்சர்களான சி .பி ரத்நாயக்க, சன்ன ஜெயசுமணவுடன் 40 க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் இணைந்து குருந்தூர்மலையில் பிரித் ஓதல் ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை சாப்பிடவே வழியில்லை...இவங்கள் காட்டுக்கை என்ன்மோ செய்யிறாங்கள்...என்ன நாடடா இது..

  • கருத்துக்கள உறவுகள்

"பல எலி சேர்ந்தால் புற்று எடுக்காது." என்பது பழமொழி. த. தே. கூட்டமைப்பு என்று கூடி  கூட்டை பிரிக்காமல், ஒவ்வொரு அணியாகப்பிரிந்து, ஒரு அணி; நமது எல்லைகள் மாற்றியமைக்கப்படுவதை குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட  சர்வதேச அமைப்புகளுக்கும், இன்னொரு அணி; நமது வரலாறு, பண்பாடு எவ்வாறு திட்டமிட்டு கல்வியமைச்சின்மூலமும், நமது வரலாற்று குறிப்பேடுகளை அழிப்பதன்மூலமும்  மாற்றியமைக்கப்படுகிறது என்பதையும், மற்றோர் அணி;  மீள் குடியேற்றம், அபிவிருத்தி, தொல்பொருளாராய்ச்சி, வனவள பாதுகாப்பு  என்கிற பெயரில் சர்வதேசத்தை ஏமாற்றி கொரோனா காலத்திலும் தமிழரின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றமும், விகாரைகள் அமைக்கவும், இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதும், வெளிநாடுகளின் கடன் உதவியை பயன்படுத்தி நமது நிலங்கள் அபகரிக்கப்படுவதையும், நீதித்துறையினை பயன்படுத்தி சட்டங்களை மாற்றியமைத்து, தமிழருக்குரிய அதிகாரங்களை குறைப்பதும், இல்லாமற்செய்வதும், ஏதிலிகளாக்குவதும் என்றும் இன்னும்   அரசியல் நகர்வாக, வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து விளக்குவது போன்ற ராஜதந்திர நகர்வுகளை செய்து அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளையும் பரப்புரைகளையும் சர்வதேசத்துக்கு தொடர்ச்சியாக எடுத்துச் சென்று அழுத்தங்களை எல்லாப்பக்கமும் பிரயோகித்து, அரசை மூச்சுத்திணற வைத்து, தடுப்பது போன்றவற்றை சரிவர செய்யாமல் வெறும் வாக்குக்காக மக்களை பயன்படுத்துவதாலேயே நமது விலைமதிப்பற்ற இளம் சமுதாயம் எதிரிகளின் முகவர்  வலையில் சிக்கி போதைப்பொருள், வாள்வெட்டு, சிறை என்று தமது இளமையை வீணாக்கிக்கொண்டு இருக்கிறது. செய்வார்களா ...... நம் தலைவர்கள் என்று மேடைக்கு மேடை சொல்லிக்கொள்பவர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.