Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் 39 உயர் இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடை! சபையில் வெளியான தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசேகர, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இந்த நாட்டை காப்பாற்றிய 39 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள சர்வதேச தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய அரசாங்கம் தலையிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும், உள்ள ரீதியில்  முன்னெடுத்த வேலைத்திட்டங்களை கூட இன்று ஏற்றுக்கொள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இல்லையென்றால், மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை விசாரணை அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டிய  அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை எடுத்து, அதனை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/international-sanctions-against-39-military-offic-1644480478

  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கோ ...கேளுங்கோ..நல்லாக் கேளுங்கோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உட்பட 39 படையதிகாரிகளுக்கு சர்வதேசத்தில் புதிய நெருக்கடி

30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 39 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருதது வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினருக்கு மாத்திரமல்லது எதிர்காலத்தில் ஏனைய துறைகளை சார்ந்த நபர்களுக்கும் இந்த நிலைமையை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே நீதித்துறையுடன் தொடர்புடைய சில நபர்களின் மாணவர்களுக்கு கல்வி வீசா அனுமதிகளை வழங்க பல நாடுகள் மறுத்துள்ளன.

இதனடிப்படையில் அரசாங்கம் இந்த நிலைமை சம்பந்தமாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அந்த 39 அதிகாரிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும் என அவர்கள் எதிர்பார்துள்ளனனர் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/international-ban-on-39-officers-1644650341

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2022 at 22:17, பெருமாள் said:

உள்ள ரீதியில்  முன்னெடுத்த வேலைத்திட்டங்களை கூட இன்று ஏற்றுக்கொள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இல்லையென்றால், மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை விசாரணை அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டிய  அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும்,

உங்களின் நீதிபொறிமுறையை  நீங்களே மதிப்பதில்லை. மனிதஉரிமை மீறல், கொலை, கொள்ளை, இன்ன பல குற்றமளித்தவர்களுக்கு விடுதலை, பதவியுயர்வு இதை செய்துவிட்டு இதுதான் உங்கள் வேலைத்திட்டம் என்று நீங்கள் சொன்னால் அதை நம்புமளவிற்க்கு அவர்களுக்கு இன்னும் இனவழிப்பு பைத்தியம் வரவில்லை. நீங்களோ; அவர்களும் உங்களைப்போல் நலிந்தவர்களை அடக்கி கொள்ளையிடவேண்டும், உங்களுக்கு மாலையிடவேண்டும் என்று ஒவ்வொருதடவையும் ஒரு தந்திரத்தோடு போகிறீர்கள். இது நடக்க வேணுமென்றால் இந்தியாதான் மனித உரிமை பேரவையாக இருக்கவேண்டும் என்று புத்தரிடம் பிரார்த்தியுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.