Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மாவட்டத்தில்.... மேலதிகமாக, எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

யாழ். மாவட்டத்தில்... மேலதிகமாக, எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் இந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது நாளொன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோல் தேவைப்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற எண்ணத்தில் அதிமாக மக்கள் பெற்றோலை கொள்வனவு செய்கின்றனர்.

அதேபோன்று நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் லட்சத்து 50 ஆயிரம் வரை டீசலும், அத்துடன் 50 ஆயிரம் மண்ணெண்ணையும் தேவைப்படுகிறது.

ஆகவே எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு ஏற்ற வகையில், நான் கலந்துரையாடி வருகின்றேன். எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள். அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்.

கையிருப்பில் உள்ள பெற்றோலை வைத்து இப்பொது சமாளிக்க முடியும். வேறு இடத்தில உள்ள மக்களும் இங்கே வந்து டீசலை கொள்வனவு செய்கின்றனர். அத்துடன் வெளி மாவட்ட பயணங்களில் ஈடுபடும் வாகனங்கள் அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்யும் நிலை காணப்படுகிறது.- என்றார்

https://athavannews.com/2022/1269759

#################   #################   ###############

முற் கூட்டியே... சேமித்து வைப்பதில், யாழ்ப்பாண  தமிழன் தலை சிறந்தவன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள். அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்.

இந்தப் பெற்றோல், டீசல், மண்ணெண்ணைத் தட்டுப்பாடுகளானது இவற்றிற்குப் பதிலாக வேறு வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கு மக்களைத் தூண்டிவிடும். அப்படி ஒரு நிலமை எங்களது மண்மீட்புக்காக இலங்கையில் தமிழர்கள் போராடியபோது ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். அந்த வேளையில் அவர்கள் எப்படிப் புதிய உபாயங்களைக் கண்டுபிடித்து தங்கள் வாழ்க்கையை நகர்த்திச் சென்றார்கள் என்பதை அந்தக்கால கட்டத்தில் அங்கு சென்றவர்கள் அறிந்து, அனுபவித்து வியந்ததை மறக்க முடியாது. 

இன்று முழு இலங்கைக்குமே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அங்குவாழும் ஏனைய மக்களைவிடவும், அதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடித்துத் தங்கள் வாழ்க்கையை நகர்திச்செல்லும் திறன் அங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமே உண்டு என்பதில் ஐயமில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இந்தப் பெற்றோல், டீசல், மண்ணெண்ணைத் தட்டுப்பாடுகளானது இவற்றிற்குப் பதிலாக வேறு வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கு மக்களைத் தூண்டிவிடும். அப்படி ஒரு நிலமை எங்களது மண்மீட்புக்காக இலங்கையில் தமிழர்கள் போராடியபோது ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். அந்த வேளையில் அவர்கள் எப்படிப் புதிய உபாயங்களைக் கண்டுபிடித்து தங்கள் வாழ்க்கையை நகர்த்திச் சென்றார்கள் என்பதை அந்தக்கால கட்டத்தில் அங்கு சென்றவர்கள் அறிந்து, அனுபவித்து வியந்ததை மறக்க முடியாது. 

இன்று முழு இலங்கைக்குமே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அங்குவாழும் ஏனைய மக்களைவிடவும், அதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடித்துத் தங்கள் வாழ்க்கையை நகர்திச்செல்லும் திறன் அங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமே உண்டு என்பதில் ஐயமில்லை.   

போக்குவரத்திற்கு சைக்கிளை பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில அரைவாசிப்பேருக்கு ரியூசன் கிளாசிலை தங்களது பிள்ளைகளை விட்டுட்டு தெருவோரத்தில் ஸ்கூட்டியில் ஒரு காலும் நிலத்தில ஒரு காலுமாக நின்று ஊர்க்கதைகள விண்ணாணம் கதைக்கவே எரிபொருள் தேவை  இதில் கொஞ்சம் அலேட்டான ஆம்பிளையள் இவர்களை வேறவிதமாகக் கையாண்டுவிடுவினம்.

எங்கட வீட்டுக்கு முன்னாலை ஒரு பள்ளிக்கூட ரீச்சர் ஆரம்பத்தில் நானும் ஒரு கடைக்கண்ணால அவவைப்பார்த்து வழிஞ்சிருக்கிறன் இப்போ பக்கத்திலுள்ள கடைக்கும் ஸ்கூட்டியிலதான் போகிற இருபாலை வயல் வெளியில விளையிற பூசனிக்கா மாதிரி ஊதிப்பெரிசாகிட்டா புருசனும் வாத்தியார்தான் காதல் திருமணம் ஆனால் அவருக்கு ஊர்மேய ஆசை காரணம் ஸ்கூட்டியால் வந்தவினை. யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடங்கள் விட்டவுடன் ஸ்கூடியில தாய்மார் பிளைகளை ஏத்திக்கொண்டு போவினம் தாயும் பிள்ளைகளும் நிலத்தில தேயாத குறை அவ்வளவு கனதி காரணம் பாடசாலைக்கும் வீட்டுக்குமான சிறிய நடைப்பயிற்சியாகுதல் பெற்றோருக்கோ பிள்ளைகளுக்கொ இல்லை.

நாங்கள் படிக்கேக்க(?) வீட்டுக்கு வந்து சேர எப்படியும் இரண்டு மணித்தியாலம் ஆகும் ஊரில இருக்கிற மாங்காய் விளாங்காய் "விலிம்பிலிக்காய்" இவைகள் லவட்டிச் சாப்பிட்டு வர இந்த நேரமே போதாது இடையில் புதுப்படம் வந்தால் தியேட்டருக்கு முன்னால் முதல்நாள் கட்டும் கட் அவுட்டை வாய்பிளந்து பார்ப்பதற்கு கூடுதல் நேரம் வேணும். இப்படிப்பார்த்து அண்ணரிட்டைப் பிரடியில் அடிவாங்கியிருக்கிறன், பிறகுதான் தெரிந்தது அண்ணரும் அதுக்குத்தான் வந்தவர் எண்டு.

ஏ எல் படிக்கேக்க ஒரு சையிக்கிள் தடியை எடுத்துக்கொண்டு ஊரில உள்ள பெட்டையள்  எல்லாரும் பத்திரமா வீட்டுக்குப்போயிட்டினமோ எனபார்த்துவிட்டு அப்பன்மாரிட்ட வந்திட்டினம் மன்மதக்குஞ்சுகள் எனப் பழிச்சொல்லும் வாங்கி வீட்டுக்கு வர கிட்டத்தட்ட பளை போய் வாற அளவுக்குச் சயிக்கிள் ஓடியிருப்பம் 

"நாய்க்கு வேலையுமில்லை நிக்கிறதுக்கு நேரமுமில்லை"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.