Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக வல்லாதிக்க சக்திகளின் கைப் பொம்மையாக இருக்கக்கூடாது உக்ரைன் மிகச்சிறந்த முன்னுதாரணம் - உதயங்க வீரதுங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)

 

 

உலகில் வல்லாதிக்கத்திற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் கை பொம்மையாக இருக்ககூடாது என்பது உக்ரேன் மிகச் சிறந்த உதாரணம் என்பதை இலங்கை உணர்ந்து கொள்வதோடு அணிசேராக் கொள்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உக்ரேன், ரஷ்ய மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கையில் தங்கியுள்ள உக்ரேனிய பிரஜைகள் மற்றும் ரஷ்ய பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

DSC_1428.JPG

 

சோவியத் ஒன்றியக் குடியரசு உடைந்தபோது உக்ரேன் நாடு உருவானது. 

பின்னர் அந்த நாடு சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்தது. எனினும், ரஷ்யாவின் தேசிய நலன்களில் அது அக்கறைகொண்டதாக இருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி விளோடிமிர் செலன்ஸ்கி பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக பங்கேற்பதற்கு நடவடிக்ககைளை எடுத்திருந்தார்.

இருப்பினும் அதற்கான முன்னெடுப்புக்கள் வெற்றியளித்திருக்காத நிலையில் அதற்குரிய படிநிலைகளை மேலும் கடக்க வேண்டியிருந்த சூழலில் உக்ரேன் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிப்பதற்கு விரும்பினார்.

அத்துடன், அவர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல கூட்டு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிக்கொள்வதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். 

இந்த வியடத்தில் ரஷ்யா அதிருப்தியைக் கொண்டிருந்ததோடு, தனது தேசத்தின் நலன்கள் தொடர்பிலும் கரிசனைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

குறிப்பாக, தனது தேசத்திற்கு அண்மித்த பகுதிகளில் நேட்டோ முகாமை அமைப்பதை ரஷ்யா விரும்பவில்லை. 

இதுவே உக்ரேன் மீதான தாக்குதலுக்கு பிரதான காரணமாகின்றது.

உலகத்தில் இரண்டு வல்லாதிக்க சக்திகளின் பலப்பரீட்சை நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் உக்ரேன் ஒருபக்கம் சார்ந்தமையால் இவ்விதமான போர் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

இவ்விதமான தருணத்தில் அணிசேராக் கொள்கையே பொருத்தமானதாகும். 

இலங்கை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றபோது இந்தக் கொள்கையில் பற்றுறுதியுடன் செயற்பட்டிருந்தார்கள்.

இருப்பினும், அவ்வப்போது ஆட்சியாளர்கள் வல்லாதிக்க நாடுகளுக்கு அடிபணிவதும், அவர்களின் கைபொம்மையாக செயற்படும் நிலைமைகளும் நிகழ்கின்றது. 

அதனை தவிர்த்து அணிசேராக் கொள்கைளுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதற்கு உக்ரேனே இலங்கைக்கு சிறந்த உதாரணமாகும் என்றார்.

உலக வல்லாதிக்க சக்திகளின் கைப் பொம்மையாக இருக்கக்கூடாது உக்ரைன் மிகச்சிறந்த முன்னுதாரணம் - உதயங்க வீரதுங்க | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தங்கள் வீட்டு படலைக்குள் என்ன நடக்குது என்று இவர்கள் பார்க்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

உலகில் வல்லாதிக்கத்திற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் கை பொம்மையாக இருக்ககூடாது என்பது உக்ரேன் மிகச் சிறந்த உதாரணம் என்பதை இலங்கை உணர்ந்து கொள்வதோடு அணிசேராக் கொள்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சொல்கிறவர் யார் என்று கவனியுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.