Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – அதிசக்தி வாய்ந்த, சொகுசு வாகனங்களின்.. அணிவகுப்பில் அமைச்சர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – அதிசக்தி வாய்ந்த சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் அமைச்சர்?

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – அதிசக்தி வாய்ந்த, சொகுசு வாகனங்களின்.. அணிவகுப்பில் அமைச்சர்?

அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவோ அல்லது அவரது சகோதரர்களோ ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரும், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தனியார் வாகன அணிவகுப்பு எனவும், சிலர் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருளினையும், எரிவாயுவினையும் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஒரு தரப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் குளியாப்பிட்டியில் இருந்து கல்பிட்டி வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் பங்கேற்றிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1272355

Spin Riders எனப்படும் bikers அமைப்பு, தம் அமைப்பினூடாக நிதி திரட்டி, மஹரகம வில் அமைந்துள்ள Apeksha புற்றுநோய் மருத்துவமனைக்கு 12 இலட்சம் நன்கொடை கொடுக்கவும், அதன் பின் கல்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நன்கொடை கொடுக்கவுமே இந்த வாகன பேரணி ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொலிசாரின் அனுமதியும் பெறப்பட்ட பேரணி.

ஆனால் காலமாற்றத்தினை கவனத்தில் கொள்ளாமல் ஆடம்பரமாக செய்தமையால் அவர்கள் செய்த நன்மையும் பரிகாசத்துக்குள்ளாகி விட்டது.

இவ் அமைப்பு வேறு சில நல்ல விடையங்க்களையும் செய்துள்ளனர் என என் சிங்கள நண்பர் ஒருவர் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரும், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கும் இந்தச் செய்திக்கும் என்ன தொடர்பு? எதற்காக இவர் வலியப்போய் மூக்கை நுழைக்கிறார்? சிங்களவர் எல்லாரும் சேர்ந்து இவரை முக்கி எடுத்தாலே இவருக்கு புத்திவரும். சிங்களவன் எல்லாரும் சேர்ந்து அழிப்பது தமிழனை, இவர் அவர்களை காப்பாற்றுகிறாராம். அவர்கள் தெரு, அவர்கள் வாகனம், அவர்கள் எரிபொருள். இவருக்கு என்ன வந்தது? மக்கள் சாப்பிட வழியில்லை நாள்முழுதும் வெயிலில் நின்று காய்கிறார்கள், மயங்கி விழுகிறார்கள். இந்த நிலையில் சொகுசு வாகனங்களுக்கு நிரப்பும் எரிபொருளை அந்த மக்களுக்கு பகிர்ந்தளித்து நிதி சேகரிக்கலாமே. உதெல்லாம் வீண் ஆடம்பரம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுற வேலை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.