Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு தேர்தலில் கருணா குழு போட்டியிட முடியாது.

Featured Replies

கிழக்கு தேர்தலில் கருணா குழு போட்டியிட முடியாது.

கிழக்கு மாகாணத்தில் இவ்வருட முடிவிற்கு முன் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கருணா குழுவினர் போட்டியிடமுடியாது எனத்தெரியவருகிறது.

கருணா குழுவினர் 20 அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்திலும் மற்றயவை பொல்கென்கொட கொழும்பிலும் அமைந்துள்ளபோதிலும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயக்காவினால் அரசியல்கட்சியாக 2007 யூலை 10 வெளியிட்ட அரசியல் கட்சிகளின் வரிசையில் இடம்பெறவில்லை எனத்தெரியவருகிறது.

2004 ஒக்ரோபர் மாதம் 12 ம் திகதி கருணாகுழுவின் செயலாளர் ஜி.ஆர்.கணராஜா அவர்களால் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்கள் கையளிக்கப்பட்ட போதும் இறுதியாக தேர்தல் திணைக்களத்தால் யூலை 10 , 2007 வெளியிடப்பட்ட அரசியல் கட்சி வரிசையில் கருணாகுழுவிற்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத்தெரியவருகிறது.

தேர்தல் திணைக்களத்தால் 53 கட்சிகள் அரசியல் கட்சிகளாக இலட்சணைகளுடன் வெளியிடப்பட்டுள்ளபோதும் கருணாகுழு இடம்பெறவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

-Pathivu-

  • தொடங்கியவர்

கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தது சிறிலங்கா அரசாங்கம்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவிட்டதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:

கருணா குழு தம்மை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2004 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 12 ஆம் நாள் தேர்தல் திணைக்களத்திடம் மனு கையளித்த போதும் 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் ஒரு கட்சியாக அதனை திணைக்களம் பதிவு செய்யவில்லை.

கடந்த ஜூலை 10 ஆம் நாள் தேர்தல் திணைக்களத்தினால் 53 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருணா குழுவின் பெயர் இடம்பெறவில்லை.

கருணா குழுவினர் அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்த காலத்துக்குப் பின்னர் விண்ணப்பித்த கட்சிகள் கூட அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் தேர்தலில் அங்கீகரிக்கப்படாத குழுவினர் "சுயேட்சை குழுவினராக" போட்டியிட வாய்ப்புள்ளதாக தேர்தல் திணைக்கள பிரதி ஆணையாளர் பி.எம்.சிறீவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருணா குழுவை அரசியல் கட்சியாக சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்திருப்பதன் மூலம் அக்குழுவினர் அரசியல் கனவை அக்குழுவை உருவாக்கிய சிறிலங்காவே உடைத்து நொறுக்கியிருக்கிறது என்று கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கருணா குழுவினர் அரசியல் நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கைவிடுதலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளது என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-Puthinam-

''கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தது சிறிலங்கா அரசாங்கம்.""

கருணாவுக்கு வக்காலத்து வாங்கினவ வாயில மண்

டக்லஸை முன்னிலை படுத்தி கருணாவை அழித்தொழிக்க நினைகிறது அரசு கருணா குழுவை ஒரு அடியாட்களாகவே பார்குது என்பதை கருணா குழுவினர் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கொஞ்ச கலத்தில் அரசே போட்டு தள்ள தொடங்கீடும் என நினைகிறேன்.சாணக்கியன் சொன்னது மாதிரி உதயத்தின் பின் விடி வெள்ளிக்கு என்ன வேலை

இரண்டு அடிவருடிகளும் கருவேப்பிலை. காலம் சிங்கவனைப் பற்றி இவர்களுக்கு பாடம் புகட்டும்.

ஈழத்திலிருந்து

ஜானா

டிபிஎஸ் எழுதினமாதரி சிங்களத்தின் வேட்டை நாய்களாக மாத்திரமே கருணா குழுவைப் பயன்படுத்தி வருகிறது.

கிழக்கை சிங்கள மயமாக்க உதவ இந்த வேட்டை நாய்கள் பயன்படுத்தப்படும், ஆனால் அதனை ஆளவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தாலும் தேர்தல் ஒன்று வந்தால் தன்னுடைய "பவர்" என்ன என்று காட்டுவதற்காக கருணா கும்பல் ஏற்கனவே திட்டங்களைப் போட்டு, மற்றைய கூலிக்கும்பல்களை வெருட்டி வைத்துள்ளது. எனவே பதவியில் வர அவர்கள் போராட வேண்டியது சிங்களவர்களுடனும் முஸ்லிம்களுடனும்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடந்தாலும் தேர்தல் ஒன்று வந்தால் தன்னுடைய "பவர்" என்ன என்று காட்டுவதற்காக கருணா கும்பல் ஏற்கனவே திட்டங்களைப் போட்டு, மற்றைய கூலிக்கும்பல்களை வெருட்டி வைத்துள்ளது. எனவே பதவியில் வர அவர்கள் போராட வேண்டியது சிங்களவர்களுடனும் முஸ்லிம்களுடனும்தான்.

அண்னே மற்றவர் பென்சில் பேனை புத்தகம் புத்தக பாக்கு குடுத்துதான் பிரச்சனை பட்டவையாம் ஆனா கட்சி இல்லாம எப்பிடி வாக்கு புடுங்கிரது? :o

அண்னே மற்றவர் பென்சில் பேனை புத்தகம் புத்தக பாக்கு குடுத்துதான் பிரச்சனை பட்டவையாம் ஆனா கட்சி இல்லாம எப்பிடி வாக்கு புடுங்கிரது? :o

சுதந்திர கட்சிக்கு நக்க வேண்டியதுதானே ஆதி அது மட்டுமல்ல சுயேட்சையாகவோ அல்லது வேறு கட்சிகளையோ மிரட்டி அதன் வேட்பாளராக தேர்தலில் நிற்கும் சாத்தியம் இருக்குது :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.