Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபத்துக்குள்ளான சீன விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 

தென்மேற்கு சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை என்றும் மாகாண அவசர மேலாண்மை பணியகத்தை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம், தெற்கு சீனாவில் உள்ள மலைப்பகுதியில் குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ஒஃப் சீனா (சிஏஏசி) தெரிவித்துள்ளது.

வுஜோ நகரின் மீது பறந்துக்கொண்டிருந்த போது, விமானம் தொடர்பை இழந்ததாகவும், விமானத்தில் 123 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்னதாக விமானத்தில் 133 பேர் இருந்ததாக அரச ஊடகம் தெரிவித்தது.

மேலும், இந்த விமானம், இறுதியாக, 376 நாட்ஸ் வேகத்தில் 3225 அடி உயரத்தில் மதியம் 2:22 மணிக்கு பறந்ததாக, விமான கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம், மாலை 3:05 மணிக்கு தரையிறங்க இருந்தது.

6 வருட பழமையான 737-800 விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.

சீனாவின் மூன்று முக்கிய விமான நிறுவனங்களில் சைனா ஈஸ்டர்ன் நிறுவனமும் ஒன்றாகும்.

கடந்த தசாப்தத்தில் நாட்டின் விமானத் துறையின் பாதுகாப்புப் பதிவு உலகின் மிகச் சிறந்ததாக உள்ளது.

இரட்டை எஞ்சின், ஒற்றை இடைகழி போயிங் 737 குறுகிய மற்றும் நடுத்தர தூர விமானங்களுக்கான உலகின் மிகவும் பிரபலமான விமானங்களில் ஒன்றாகும்.

ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, சீனாவின் கடைசி அபாயகரமான ஜெட் விபத்து 2010ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

ஹெனான் எயார்லைன்ஸின் எம்ப்ரேயர் இ-190 பிராந்திய ஜெட் விமானம், யிச்சுன் விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 96 பேரில் 44பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான சீன விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்! – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

சீனா ஈஸ்டர்ன் விமானம் போயிங் 737 எம்யூ5735 விபத்து: 132 பேருடன் சீன விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது

21 மார்ச் 2022, 09:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சீனா விமானம் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதை சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர். என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தில், வெளிநாட்டுப் பயணிகள் யாரும் இல்லை என, பயணிகளின் தகவல் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளதாக, சீன ஊடகக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் உறுதியான தகவல் பெறப்படும் என, ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சீன ஊடகக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. ஆனால், விபத்தில் யாரும் உயிர்பிழைத்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என, நிகழ்விடத்தில் உள்ள மீட்புக்குழுவினரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.

விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் குழுவினர் நிகழ்விடத்துக்குச் சென்றடைந்திருக்கின்றனர்.

வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.

MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:11க்கு (05:11 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மதியம் 03:05-க்கு குவாங்சோவை அடைந்திருக்க வேண்டும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

சீனா பொதுவாக பாதுகாப்பான விமான விபத்துக்கு பெயர்பெற்றது. கடந்த 12 ஆண்டுகளில் பெரிய அளவில் விமான விபத்துக்கள் நடக்கவில்லை.

இந்த விபத்து தொடர்பாக, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ள இயலவில்லை.

சீனாவின் அரசுக்குச் சொந்தமான ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், நாட்டின் மூன்று பெரிய விமானச் சேவை நிறுவனங்களுள் ஒன்று. சீனா சதர்ன், ஏர் சீனா ஆகியவை மற்ற இரு நிறுவனங்கள்.

 

சீனா விமான விபத்து

இந்த விபத்து தொடர்பாக, தீயணைப்பு அதிகாரி ஒருவர் 'குளோபல்' டைம்ஸ்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்புப் படையினரை விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆனால், அந்த பகுதி மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். எனவே, தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதியை அடைய முடியவில்லை. தீயணைப்புப் படையினர் நடந்தே அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்" என தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் சுமார் ஆறரை ஆண்டுகளாக இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் மொத்தமாக 162 இருக்கைகள் உள்ளன. இதில், 12 பிசினஸ் வகுப்பு இருக்கைகள் மற்றும் 150 பொருளாதார வகுப்பு இருக்கைகள் ஆகும்.

இதனிடையே ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் கருப்பு - வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது.

மொத்தமாக 450 வன தீயணைப்புப்படையினர் விபத்து நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளதாக, சிஜிடிஎன் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவர்களுள் 300 பேர் மாலை 6.30 மணியளவிலும், 150 பேர் இரவு 10.30 மணியளவிலும் நிகழ்விடத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதனிடையே, விபத்துக்குள்ளான போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலத்தில் நடந்த பெரிய விமான விபத்துகள்

2021

கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர்.

2020

மே 22 அன்று, 91 பயணிகள் மற்றும் விமானக்குழுவை சேர்ந்த 8 பேருடன் பயணித்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 2 பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிர்பிழைத்தனர்.

2019

மார்ச் 10 அன்று, எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், அடிஸ் அபாபா பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 157 பேரும் இதில் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

2018

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் ஏப்ரல் 11 அன்று, ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானக்குழுவை சேர்ந்த 10 பேர் உட்பட பயணித்த 257 பேரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர், ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினருமாவர்.

2017

2017ஆம் ஆண்டில் எந்தவொரு விமான விபத்தும் நடைபெறவில்லை.

2016

டிசம்பர் 25 அன்று, கருங்கடலில் ரஷ்ய ராணுவ விமானமான Tu-154 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 92 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் ரஷ்ய படையினருக்காக கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் இவ்விபத்தில் உயிரிழந்தனர்,.

https://www.bbc.com/tamil/global-60820835

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை!

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை!

சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்மிங்கில் இருந்து அந்நாட்டு உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பகல் 1.10 மணிக்கு போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது.

குவாங்ஜோ விமான நிலையத்துக்கு பகல் 2.52 மணிக்கு வந்து சேர வேண்டிய இந்த விமானம், உரிய நேரத்தில் வராததால் தேடுதல் பணி நடைபெற்றது.

அப்போது இந்த விமானம் ஹூஜோ நகரத்தில் உள்ள டெங்ஷியானில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது

கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது என்று அவசர மேலாண்மைத் துறை தெரிவித்ததாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் ஜின்ஹூவா அறிவித்தது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் இதுவரை காயங்களுடன் யாரும் மீட்கப்படவில்லை என்று சிசிடிவி எனப்படும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குளான சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132பேர் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் 23 தீயணைப்பு வாகனங்களி;ல் 117 வீரர்கள் முதலில் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் பிற பகுதிகளில் இருந்து 538 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், விமான பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவவும் 9 குழுக்களை சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அமைத்துள்ளது.

விபத்து நிகழ்வதற்கு முன்பு, 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிடத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விமான விபத்து அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், மீட்பு பணிகளை முடுக்கி விடமும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஸி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2022/1272827

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் போயிங் விமான விபத்து: இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை

22 மார்ச் 2022
 

சீனா விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை.

விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

இந்த விபத்து சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான முழு விசாரணைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் உயிரிழந்தோர் குறித்த விவரம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், யுனான் மாகாணத்தில் உள்ள ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் குவாங்சு விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

 

சீனா விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

"கணவரை இழந்துவிட்டேன்"

புதிதாக திருமணமான பெண் ஒருவர் தன் கணவரை இந்த விபத்தில் இழந்துவிட்டதாக, WeChat பதிவில் தெரிவித்துள்ளார். அவர் தன் முந்தைய பதிவுகளில் கணவருடன் சென்ற சுற்றுலா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த விமானத்தில் பயணித்தவர்கள் யார், விமானக்குழுவினர் யார் என அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுள், 6 பேர் கொண்ட குழு, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பயணித்ததாக தெரியவந்துள்ளது.

 

சீன விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

விமானத்தில் பயணித்த ஒருவரின் அலுவலக சகா, ஊடகத்திடம் பேசுகிறார்.

அக்குழுவில் தன்னுடைய சகோதரி மற்றும் நெருங்கிய நண்பர்களும் இருந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்" என, அவர் Jiemian News ஊடகத்திடம் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் பயணித்த டான் என்பவரின் அலுவலக சகா ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், டான் குடும்பத்தினரிடம் தான் இந்த செய்தியை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

"அவர்கள் அழுதுகொண்டிருக்கின்றனர். இதனை அவருடைய தாய் நம்பவில்லை. தன் மகன் சீக்கிரம் வந்துவிடுவார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். டானுக்கு 29 வயதுதான் ஆகிறது" என்றார்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விமானத்தில் பயணித்தோரின் குடுபத்தினரை அழைத்துச் செல்லும் பணியில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

சீனா விமான விபத்து

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

விமான நிலையத்தில் காத்திருக்கும் உறவினர்கள்

இதனிடையே விபத்துக்குள்ளான 737-800 ரக விமானங்கள் மிகுந்த பாதுகாப்பானவை என தெரிவித்துள்ள விமான நிபுணர்கள், உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்குள்ளான விமானம் தயாரிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகிறது.

விபத்துக்கான காரணம் விமானியின் குறைபாடா அல்லது பாதுகாப்பு குறைபாடா, விமான வடிவமைப்பு மற்றும் வானிலை காரணமா என, பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலத்தில் நடந்த பெரிய விமான விபத்துகள்

2021

கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர்.

2020

மே 22 அன்று, 91 பயணிகள் மற்றும் விமானக்குழுவை சேர்ந்த 8 பேருடன் பயணித்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறைந்தது 2 பேர் மட்டுமே இந்த விபத்தில் உயிர்பிழைத்தனர்.

2019

மார்ச் 10 அன்று, எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், அடிஸ் அபாபா பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 157 பேரும் இதில் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

2018

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் ஏப்ரல் 11 அன்று, ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானக்குழுவை சேர்ந்த 10 பேர் உட்பட பயணித்த 257 பேரும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர், ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினருமாவர்.

2017

2017ஆம் ஆண்டில் எந்தவொரு விமான விபத்தும் நடைபெறவில்லை.

2016

டிசம்பர் 25 அன்று, கருங்கடலில் ரஷ்ய ராணுவ விமானமான Tu-154 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 92 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் ரஷ்ய படையினருக்காக கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.

https://www.bbc.com/tamil/global-60836217

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2022 at 00:15, பெருமாள் said:

 

 

2 minutes ago, ஏராளன் said:

 யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

மேலுள்ள காணொளியில்…. விமானம், செங்குத்தாக விழுந்ததை பார்க்கவே….
எவரும் தப்பி இருக்க சாத்தியம் இல்லை என ஊகிக்க முடிந்தது.
வயிற்றுப் பகுதியில் விழுந்திருந்தால்… ஒரளவு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.