Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட... சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்!

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட... சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது : வாக்குமூலம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும்  ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம்  முதன்முறையாக  முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது வாக்குமூலம் அளித்த அவர், ‘”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன்.

அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது. அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்றும் எனக்கு தெரியாது.

மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விபரங்களை தலைமை செயலாளரிடம் தான் கேட்டு தெரிந்துக் கொள்வேன். சிகிச்சை பெற்ற போது ஒருமுறை கூட ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்ததில்லை.

கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் கடைசியாக பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1272777

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் – விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்

 

 

 
ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வந்தார். அந்த வகையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் இதுவரை ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் இயங்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
அப்போது ஆணையத்தின் சார்பில், இடைத் தேர்தலையொட்டி அந்த படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தெரியுமா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாக கூறினார். இந்த தகவல் குறித்து நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் இதுதொடர்பாக நான் பேசவில்லை.அரசாங்கப் பணி தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.
மேலும் 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நான் உட்பட 3 அமைச்சர்கள் நேரில் அவரை பார்த்தோம்.எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் என கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான கேள்விகளை ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்பதற்கு அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என்றே நேற்றே அவர் கூறிவிட்டார் என மருத்துவமனை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிக்கலா தரப்பு தற்போது குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக என்ர பேரபிள்ளையளின் கொள்ளு பேரன்கள் காலத்தில் விசாரணை முடியும் என்டு எதிர்பார்க்கபடுகிறது ☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.