Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக்கதை எப்படி

Featured Replies

ஆமர் பிளேற் இல்லாத இராணுவ வாகனம் குறித்து புலிகளுக்கு தகவல் கொடுப்பது யார்?

[30 - July - 2007] [Font Size - A - A - A]

இராணுவ வாகனங்களுக்குப் பாதுகாப்புக்காகப் பொருத்தப்படும் உறுதியான உலோகத் தகட்டு உபகரணமே `ஆமர் பிளேற்' என்பதாகும். பொதுவாக இராணுவ வாகனங்களுக்கு ஆமர் பிளேற் பொருத்தப்பட்டிருக்கும். எதிரிகள் மேற்கொள்ளும் அனைத்து வகையான வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்தும் இந்த ஆமர் பிளேற் பொருத்தப்பட்ட வாகனங்கள் பெருமளவில் பாதுகாக்கப்பட்டுவிடும். 25 வருடங்களாக இந்த நாட்டில் போர் நடந்து வருவதால் பாதுகாப்பு முப்படையினர், பொலிஸார், படையினரின் வாகனங்களுக்கு மேற்படி ஆமர் பிளேற் பொருத்தப்பட வேண்டிய அவசியம் பற்றிக் கூறத்தேவையில்லை.

புலிகள் இயக்கத்தினர் துப்பாக்கி மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும், கிளேமோர் உட்பட அனைத்து வெடிகுண்டுத் தாக்குதல்களின் போதும் அவற்றின் வெடிப்புகளை ஆமர் பிளேற் தடுத்து விடுவதால் படையினர் புலிகளின் தாக்குதல்களிலிருந்து பூரண பாதுகாப்பைப் பெறுவர். குறிப்பாக படையினரின் வாகனங்களை சிதறடிப்பதற்காக புலிகள் இயக்கத்தினரால் பொருத்தப்படும் அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து படையினரின் வாகனங்களை ஆமர் பிளேற் பாதுகாத்து விடுவதால் சேதங்களும் உயிரிழப்புகளும் பெருமளவில் குறைக்கப்படுகின்றன.

ஆயினும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குச் செல்லும் அனைத்து இராணுவ வாகனங்களுக்கும் ஆமர் பிளேற் பொருத்தப்பட முடியாத நிலை இன்னும் பாதுகாப்புத் துறையில் இருப்பது வருந்தக் கூடியதும் துரதிர்ஷ்டமானதுமாகும்.இதன் பலனாக படையினரும் சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தினர்களும் இராணுவ நடவடிக்கைகளில் தமது உயிரைப் பலிகொடுக்க நேருகிறது. யுத்த நடவடிக்கைகளுக்காக பாதுகாப்புப் படையினரும் பொலிஸ் படையினரும் பயணம் செய்யும் வாகனங்களின் வரிசை கொன்வோய் (Convoy) எனப்படும். இவ்வாறான கொன்வோய்களில் படையினர் பயணம் செய்வதும் அவற்றைக்குறி வைத்து புலிகள் இயக்கத்தினர் தாக்குதல்களை நடத்துவது இன்று நேற்றுத் தொடங்கிய விடயம் அல்ல. புலிகளின் குண்டுத் தாக்குதல்களால் சிதறடிக்கப்பட்ட வாகனங்களும் உயிர் சேதங்களும் கொஞ்சமல்ல. இந்த வகையில் புலிகள் இயக்கத்தினர் கிளேமோர் குண்டுத் தாக்குதல் மூலம் ஏற்படுத்தியிருக்கும் சேதமும் உயிரிழப்புமே அதிகமாகும். இந்த வகையான தீவிர குண்டுவெடிப்புகளிலிருந்து வாகனங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இராணுவத்தினருக்கு உள்ள மார்க்கம், வாகனங்களுக்கு ஆமர் பிளேற் பொருத்துவது மட்டுமே ஆகும்.

இதுவரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தாக்குதல்களிலும் பெரும் சேதத்துக்கும் உயிரிழப்புக்கும் காரணமாக இருந்தவை இவ்வாறான ஆமர் பிளேற் பொருத்தப்படாத வாகனங்களே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத் தாக்குதலின் போதே கடந்த 24 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணம் செய்த வாகனம் சிதறடிக்கப்பட்டதுடன் 12 படையினரும் உயிரிழந்துள்ளனர். படையினர் பயணம் செய்த வாகனத் தொடர்களில் தாக்குதலுக்குள்ளான அந்த வாகனத்துக்கும் ஆமர் பிளேற் பொருத்தப்பட்டிருக்கவில்லை.

துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு புலிகளின் கிளேமோருக்குப் பலியான அந்த வாகனத்தில் படையினர் மன்னாரிலிருந்து மதவாச்சிக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவ்வாறு மன்னார் கல்லடி இராணுவ முகாமிலிருந்து கடந்த 24 ஆம் திகதி விடியற்காலை படையினரை ஏற்றிக் கொண்டு 4 இராணுவ பஸ்களும் இரண்டு பவல் தாங்கி வாகனங்களும் சென்றுகொண்டிருந்த வேளை செட்டிகுளம் பகுதியில் வைத்து புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் இலக்கு வைத்துக் கிளேமோர் தாக்குதலை நடத்தியிருப்பது குறித்த கொன்வோய் இராணுவ வாகனத்தொடரில் இராணுவத்தினர் பயணம் செய்த நான்காவது வாகனமாகிய இராணுவ பஸ் வண்டியையே. இந்த இராணுவ வாகனத்துக்கும் ஆமர் பிளேற் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அதற்கு முன்பாக சென்று கொண்டிருந்த இராணுவத்தினர் பயணம் செய்த இரண்டு வாகனங்களுக்கும் பின்புறமாக வந்துகொண்டிருந்த கடற்படையினர் பயணம் செய்த வாகனத்துக்கும் ஆமர் பிளேற் பொருத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு படையினர் பயணம் செய்த `கொன்வோய்' வாகன வரிசையில் ஆமர் பிளேற் பொருத்தப்படாத வாகனத்தை இலக்கு வைத்தே புலிகள் இயக்கத்தினர் கிளேமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவ்வாறு குறித்த இராணுவ வாகனம் மட்டுமே ஆமர் பிளேற் பொருத்தப்படாத நிலையில் வந்து கொண்டிருப்பதாகப் புலிகள் எவ்வாறு குறிப்பாக அறிந்து கொண்டனர் என்ற விவகாரம் பற்றி தற்போது பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த குழுவினர் விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. யாரோ ஒரு நபர் இவ்வாறு கொன்வோய் வாகனத் தொடரில் ஆமர் பிளேற் பொருத்தப்படாத நிலையில் வந்து கொண்டிருந்த வாகனம் பற்றியும் தாக்குதலுக்கான இலக்கு பற்றியும் துல்லியமான முறையில் புலிகள் இயக்கத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

-லங்காதீப : 29.07.2007-

http://www.thinakkural.com/news/2007/7/30/...s_page32423.htm

அடப்படுபாவிகளா, பேரூந்துக்கு ஆமர் பிளேட் எல்லாம் போடுவதில்லடா

சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை எண்டு சொல்வது சில வேளைகளில் உண்மையாகத்தான் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்படுபாவிகளா, பேரூந்துக்கு ஆமர் பிளேட் எல்லாம் போடுவதில்லடா

சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை எண்டு சொல்வது சில வேளைகளில் உண்மையாகத்தான் இருக்கு

பரதேசிகளுக்கு போரின் வடு தெரிந்தால்தானே.. சும்மா நல்லா திண்டுகொண்டு கொழும்பிலை இருந்துகொண்டு சும்மா எழுதவேண்டியது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.