Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனுக்கும் ,சாணக்கியனுக்கும் உள்ள ஒற்றுமை இருவருக்குமே தங்களை விட்டால் வேறு ஒருத்தரும் இல்லை என்ட நினைப்பு .
சாணக்கியனுக்கு பொறுப்பான அமைச்சு பதவி கிடைத்தால் அடங்கி விடுவார்...வருங்கால நிதி அமைச்சர் என்று தனக்கு தானே போஸ்டர் எல்லாம் அடித்து விட்டு இருந்தார் .
சுமத்திரன் குள்ள நரி ...அவரது முக்கிய வேலையே தமிழர்கர்களது போராட்டத்தை ஒடுக்குவது தான் ...அவருக்கு உந்த அமைச்சு பதவிகள் எல்லாம் தேவையில்லை ....அதை விட வருமானங்கள் வேறு வழிகளில் அவருக்கு வருகின்றது 
உண்மையிலேயே டக்ளஸ் ,அங்கயன் ,பிள்ளையான் போன்று அரசோடு சேர்ந்து இயங்குபவர்களை விட இவர் ஆபத்தானவர் 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் மாறவில்லை. 

திரும்ப்வும் கூறுகிறேன், TNA யை அமெரிக்கா அழைத்து கதைத்திருந்தது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறியிருந்தார்க்ள். இந்த விடயத்தை ஒழுங்கு செய்தவர்களை நான் அறிவேன். . 

சுமந்திரன் தொடர்பான விமர்சனங்களை  மூன்று விதமாகப் பார்க்கிறேன.

1) அவரது அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விமர்சிப்பவர்கள். 

2) அவரது தனிப்பட்ட குணநலனின் அடிப்படியில் அவரை விமர்சிப்பவர்கள்.  

3) அவர் TNA யின் தலைமைத்துவத்தை பிடித்துவிடுவார் என்கின்ற அடிப்படையில், அவரை எப்படியாவது அந்த இடத்தை பிடிக்க விடக்கூடாது என்கின்ற அடிப்படையில் அவரை விமர்சிப்பவர்கள். 

இங்கே 1)விடயத்தில் சுமந்திரனை பல இடங்களில் நான் ஆதரித்து வந்துள்ளேன். அதற்குக் காரணம்  எங்கள் அரசியல்வாதிகளிடையே உள்ள Intellectuals ன் பற்றாக்குறை. தெரிவுகள் மிகக் குறைவான இடத்தில் விரும்பியோ விரும்பாவிட்டால்லோ அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய தேவை (தற்போதும்) இருக்கிறது.

பல இடங்களில் அவரது நிலைப்பாட்டை கடுமையாக எதிர்க்கிறேன். உதாரணமாக போராட்டம், போராளிகள் தொடர்பாக அவர்து கருத்துக்கள் ஒட்டுமொத்த தியாகத்தையும் கொச்சைப்படுத்துகின்றது. போராட்டத்தை இகழ்வது கோபத்தை கடுமையான  உண்டுபண்ணுவதோடு எங்கள் பக்கம் உள்ள நியாயமான காரணங்களை வலுவிழக்கச் செய்யும். இதனால் பல இடங்களில் அவரை எதிர்க்கிறேன்.

2) அவரது தனிப்பட்ட  குணநலனில் உள்ள குறைபாடு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பாதிப்பை உண்டுபண்ணும். சரியான தலைமைத்துவம் எப்போதுமே தன்னைச் சூழவுள்ளவர்களது வளர்ச்சியை விரும்பும். ஆனால் சுமந்திரனது செய்கை, வளர விரும்புபவர்களை / அதற்கான தகுதியுள்லவர்களை கத்தரித்துவிடுவதாக இருக்கிறது (உ+ம் சாணக்கியன் ).  இவரது செயற்பாடு நீண்ட காலத்தில் தமிழருக்கு மிகவும் பலவீனமான அரசியல் ஆழுமைகளை உருவாக்கிவிடும். அத்தகைய அரசியல் தலைவர்கள் ஒன்று சோரம் போவார்கள் அல்லது பேரம்பேசும் துணிவுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். 

மேலே நான் கூறிய 3) வது வகையான விமரிசனங்களையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த வகை விமர்சனங்களுக்கு அவர்கள்(விமர்சனம் செய்வோர்) இலகுவாகத் தூக்கும் ஆயுதம் சமயம். சமயத்தை பின்னணியாகக் கொண்டு அவரை விமர்சனம் செய்யும்போது சுமந்திரனுக்கு நான் ஆதரவளிக்கிறேன். ஏனென்றால் சாதி சமய ரீதியிலான பிரிவினால் பாதிக்கப்படுவது சிறுபான்மை சமயத்தவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் அதனால் பாதிக்கப்படுகிறது.

உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் TNA யை எதிர்த்து(உயர்குல யாழ்ப்பாண சைவ வேளாளர்) மன்னார் மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் வேலை  ஆரம்பமாகியுள்ளது. அவர்கள் தனித்து இயங்குவதற்காக ஒன்று சேர்கிறார்கள். TNA யை எதிர்த்துப் போட்டியிட கங்கணம் கட்டியுள்ளனர். 

அதற்கு அவர்களது விளக்கம், 

1) யாழ்ப்பாணத்துத் தலைமை (சைவ, வேளாளர்) மன்னாரைப் புறக்கணிக்கிறது. 

2) மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் சமயப் பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த யாழ்ப்பாண சைவ வேளாளத் தலைமையே. உதாரணமாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகம்(?) அல்லது உரிமையாளர்கள் அவரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தவரே. அவர்கள்தான் இங்கே பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.

எனவே, மேற்கூறிய காரணங்களால்தான் பல இடங்களில் சுமந்திரனை நான் ஆதரிக்கிறேன்  அல்லது பல இடங்களில் அவரை எதிர்க்கிறேன்.

(என்ன  குழப்பமாக இருக்கிறதா 🤣)

 

 

இப்போது இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் நாளடைவில் இதுதான் நடைபெறப்போகிறது. 

ஒட்டுமொத்த இந்தியாவையும் 2% மான பிராமணர்கள்தான் ஆழ்கிறார்கள். உலகில் பல நாடுகளில் சிறுபான்மையினர்தான் நாட்டை ஆழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க. 

நன்றி கற்ப்ஸ். எனக்கும் உங்கள் நிலைப்பாடுதான் கிட்டத்தட்ட. ஆனால் சுமந்திரன் செயல்பாடு அற்றவரா? அல்லது planted leader ஆ? என்ற சந்தேகம் வர வர, planted leader என்பதை நோக்கியே என் கருத்தில் நகர்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி கற்ப்ஸ். எனக்கும் உங்கள் நிலைப்பாடுதான் கிட்டத்தட்ட. ஆனால் சுமந்திரன் செயல்பாடு அற்றவரா? அல்லது planted leader ஆ? என்ற சந்தேகம் வர வர, planted leader என்பதை நோக்கியே என் கருத்தில் நகர்கிறது.

 

Planted leader என்பதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. அவரை உள்ளே கொண்டுவந்தது எந்த நாடு என்பது உங்களுக்கு புரியும். பாதுகாப்பு ஏற்பாடுகளிலிருந்து (STF) எல்லாமே அவர்கள்தான். இதன் காரணமாகத்தான் சுமந்திரனை வெளியேற்றுவதற்கு இந்தியா படாதபாடெல்லாம் படுகிறது. 

இந்தியாவின் கைப்பிள்ளையான TNA சம்பந்தருக்குப் பின்னர் USA யின் கைப்பிள்ளையாக மாறும்.  இதன்போதாவது எங்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்துவிடாதா என்கின்ற நப்பாசை என்க்கு இருக்கிறது. 

 

3 hours ago, ரதி said:

சுமத்திரனுக்கும் ,சாணக்கியனுக்கும் உள்ள ஒற்றுமை இருவருக்குமே தங்களை விட்டால் வேறு ஒருத்தரும் இல்லை என்ட நினைப்பு .
சாணக்கியனுக்கு பொறுப்பான அமைச்சு பதவி கிடைத்தால் அடங்கி விடுவார்...வருங்கால நிதி அமைச்சர் என்று தனக்கு தானே போஸ்டர் எல்லாம் அடித்து விட்டு இருந்தார் .
சுமத்திரன் குள்ள நரி ...அவரது முக்கிய வேலையே தமிழர்கர்களது போராட்டத்தை ஒடுக்குவது தான் ...அவருக்கு உந்த அமைச்சு பதவிகள் எல்லாம் தேவையில்லை ....அதை விட வருமானங்கள் வேறு வழிகளில் அவருக்கு வருகின்றது 
உண்மையிலேயே டக்ளஸ் ,அங்கயன் ,பிள்ளையான் போன்று அரசோடு சேர்ந்து இயங்குபவர்களை விட இவர் ஆபத்தானவர் 

ஒருவரும் ஒருவருக்குச் சளைத்தவர்கள் அல்ல. எல்லாமே கூடவிருந்து கொல்லும் வியாதிகள்தான்.   ஒன்று புற்றுநோய் மற்றது காசநோய், இன்னொன்று சர்க்கரை வியாதி. 

எல்லாமே இறுதியில் எங்களைக் கொல்லத்தான்போகிறது. ஆனால் வேதனைகளும் வலிகளும் காலமும் வேறுபடுகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.