Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு , கிழக்கில் இருந்து... முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி

வடக்கு , கிழக்கில் இருந்து... முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும்.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் இருந்து நாளை திங்கட்கிழமையும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை சென்றடைந்து நினைவேந்தலில் பங்கேற்கவுள்ளது.

யாழ் ஊடக மையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் இதனை தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள், சிவில் சமூகங்கள் போன்ற அமைப்புக்கள் இணைந்து பேரணியை மேற்கொள்ளவுள்ளன.

இதில் அரசியல்வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மீனவ சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகள் அனைவரையும் பங்கேற்குமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

https://athavannews.com/2022/1281904

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்துதான் இந்தியா எச்சரித்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்

இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்

இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி இன்று(15.5.2022) அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில் ஆரம்பமாகியது.

DSC03267.JPG

இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இன்று ஆரம்பிக்கப்படும் இப்பேரணியானது பொத்துவில்லில் ஆரம்பிக்கப்பட்டு திருக்கோவில், அக்கரைப்பற்று ,காரை தீவு, கல்முனை, களுவாஞ்சிகுடி ஆரையம்பதி காத்தான்குடி வீதி வழியூடாக கல்லடி பாலத்தினை சென்றடையும். 

DSC03260.JPG

அதனைத் தொடர்ந்து 16.5.2022 ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து செங்கலடி,வாழைச்சேனை,வாகரை வழி ஊடாக திருகோணமலை சிவன் கோவில் முன்றலினை சென்றடையும்.

17.5.2022. காலை திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து நிலாவெளி ஊடாக தென்னைமரவாடியை சென்றடைந்து வவுனியா நெடுங்கேணி வீதி வழியாக முல்லைத் தீவைச் சென்றடையும்.

DSC03259.JPG

தொடர்ந்து 18.5.2022 அன்று வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலில் சென்றடையவுள்ளது. 

DSC03240.JPG

முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்'    என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 12.5.2022 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேற இடங்களில் நினைவு கூறப்பட்டு வரும்வேளை இப் பேரணியயானது மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மதகுருமார்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
 

 

https://www.virakesari.lk/article/127554

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

(நா.தனுஜா)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவ்விரு மாகாணங்களிலும் இருந்து ஆரம்பித்த மக்கள் பேரணி நாளைய தினம் முள்ளிவாய்க்காலை வந்தடையும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான நாளைய தினம் முள்ளிவாய்க்காலை வந்தடையக்கூடியவாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அவ்விரு மாகாணங்களிலுமிருந்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

அதன்படி இப்பேரணி கிழக்கு மாகாணத்திலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மாகாணத்திலிருந்து நேற்று திங்கட்கிழமையும் ஆரம்பமானது.

கிழக்கு மாகாணப் பேரணி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்தும் வடக்கு மாகாணப் பேரணி வல்வெட்டித்துறை அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முறை, களுவாஞ்சிக்குடி ஊடாக திருகோணமலை நோக்கிச்சென்று, அங்கிருந்து முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலை வந்தடையும்.

அதேபோன்று வல்வெட்டித்துறை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி பொலிகண்டி, பருத்தித்துறை, புத்தூர் ஊடாகப் பயணித்து, நல்லூர் கந்தன் ஆலயவாசலை அடைந்து, பின்னர் அங்கிருந்து தென்மராட்சி, பரந்தன் ஊடாக முள்ளிவாய்க்காலை வந்தடையும்.

இந்தப் பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாத்திரமன்றி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/127613

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.