Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது: கனடா

Featured Replies

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது: கனடா

ஜஞாயிற்றுக்கிழமைஇ 5 ஓகஸ்ட் 2007இ 20:21 ஈழம்ஸ ஜப.தயாளினிஸ

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கனடிய தூதரகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் ஹொலண்ட் கடிதம் ஒன்றை கடந்த ஜூலை 9 ஆம் நாள் அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்துக்கு பதில் தெரிவித்து கனடிய வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஜி.மக்கே அனுப்பியுள்ள பதில் கடிதம்:

இலங்கையில் இன மோதல் மீண்டும் தொடங்கியுள்ளமை குறித்து கனடிய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இத்தகைய நிலைமையால் பொதுமக்களின் பாதுகாப்பில் எதிர்விளைவுகள் ஏற்படும். அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்க கனடிய அரசாங்கம் தொடர்ந்தும் தயாராக உள்ளது. பொதுமக்களை பாதுகாப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்வதற்கும் சிறிலங்கா முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது என்று கனடிய அரசாங்கம் நம்புகிறது. இருதரப்பினரும் வன்முறைகளைக் கைவிட்டு அமைதிப் பேச்சுக்கு திரும்பவேண்டும். அனைத்து இனஇ மொழிஇ மதம் சார் மக்களினது சட்டப்பூர்வமான அபிலாசைகளுக்கு அரசியல் வழியிலான தீர்வை காண வேண்டும். அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிடவும் உதவிடவும் கனேடிய அரசாங்கம் தன்னுடைய பங்களிப்பைச் செய்யும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் ஊடே கனடிய அரசாங்கம் தனது கவலையைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அனைத்துலக மனிதாபிமான சட்டங்களையும்இ அனைத்துலக மனித உரிமைகளையும் சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் வலியுறுத்துகிறது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரச தலைவர் ஆணைய விசாரணைகளைக் கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர்கள் குழுவில் கனடாவும் தெரிவு செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

யாழ்ப்பாணத்தில் கனடிய தூதரகத்தை அமைப்பது குறித்த யோசனையை தாங்கள் தெரிவித்திருந்தீர்கள். 2006 ஆம் ஆண்டு கனடிய வெளிவிவகார மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சானது உலக நாடுகளில் கனடாவின் பிரதிநிதித்துவம் ஆராய்ந்தது. கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் போதுமான அளவில் பணியாற்றி வருவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் சிறிலங்கா தலைநகருக்கு பயணிப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து பிற பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அனைத்துலக நிறுவனங்கள்இ சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் பேச்சளவிலை தான் இருக்கினம்.. அந்த குறுகிய வட்டத்தைவிட்டு வெளியாலை வந்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் குடுக்கிறதுக்குதான் மாட்டோம் என்று அடம்பிடிக்கிறியள்..

உங்கடை அறிக்கை யாருக்கு வேணும்?

சரி கனடா தங்கள் நாட்டில் உள்ள அரசியல் யாப்பு உங்களுக்கும் பொருந்தும் என ஸ்ரீலங்கனுக்கும் தமிழனுக்கும் சொல்லலாம் தானே . யார் ஏற்கினம் என்று முதல் பார்ப்பம். அதற்கு பிறகு தெரியும் யார் போர் கள்ளன் என்றும் அதிகாரத்தை பகிர விரும்பாதவன் என்றும் அறிய முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.