Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜூலியன் அசாஞ்சேவை.... அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு, பிரித்தானியா ஒப்புதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானியா ஒப்புதல்!

ஜூலியன் அசாஞ்சேவை.... அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு, பிரித்தானியா ஒப்புதல்!

கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய உட்துறைச் செயலர் பிரித்தி படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.

உளவு பார்த்தல் குற்றச்சாட்டு உட்பட 18 வழக்குகளில் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க அதிகாரிகளால் தேடப்படுகிறார்.

எவ்வாறாயினும், பல மேல்முறையீட்டு வழிகள் அசாஞ்சிற்கு திறந்தே உள்ளன. அந்த முடிவை எதிர்த்து முறையீட 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

‘நேற்று (வெள்ளிக்கிழமை) நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் இரண்டின் பரிசீலனையைத் தொடர்ந்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. அசாஞ்சே மேல்முறையீடு செய்வதற்கான சாதாரண 14 நாட்கள் கால அவகாசத்தை கொண்டுள்ளார்.

இந்த வழக்கில், அசாஞ்சேவை நாடு கடத்துவது அடக்குமுறை, அநீதி அல்லது முறைகேடு என்று பிரித்தானிய நீதிமன்றங்கள் கண்டறியவில்லை. ஒப்படைப்பு என்பது அவரது மனித உரிமைகளுடன் ஒத்துப்போகாது, நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் உட்பட, அமெரிக்காவில் இருக்கும் போது அவரது உடல்நிலை உட்பட அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்பதையும் அவர்கள் கண்டறியவில்லை’ என பிரித்தானிய உட்துறைச் செயலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ட்விட்டரில் கூறியுள்ள விக்கிலீக்ஸ், இது ‘பத்திரிகை சுதந்திரம் மற்றும் பிரித்தானிய ஜனநாயகத்திற்கான இருண்ட நாள்’ என்றும் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த மோதல்களில் அமெரிக்காவின் தவறுகளை அவர் அம்பலப்படுத்தியதால் அவர் ஒரு ஸ்தாபன எதிர்ப்பு வீரன் என்றும், அவரது வழக்குப்பதிவு, பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான அரசியல் உந்துதல் தாக்குதல் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பெரும் எண்ணிக்கையிலான இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதற்காக அசாஞ்சே, அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார்.

https://athavannews.com/2022/1287505

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பெரும் எண்ணிக்கையிலான இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதற்காக அசாஞ்சே, அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார்.

உண்மைக்கு பாதுகாப்பும் இல்லை.
உண்மைக்கு மதிப்பும் இல்லை.

இந்த லட்சணத்தில் உக்ரேனுக்காக இரத்தக்கண்ணீர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உண்மைக்கு பாதுகாப்பும் இல்லை.
உண்மைக்கு மதிப்பும் இல்லை.

இந்த லட்சணத்தில் உக்ரேனுக்காக இரத்தக்கண்ணீர்.

May be a cartoon

ஜூலியன் அசாஞ்சேயை... அமெரிக்காவுக்கு அனுப்பி, 
சமாதி கட்ட ஆயத்தப் படுத்துகிறார்கள்.
 😡

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.