Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் போக்கை... திருத்தியமைக்க வேண்டும், அதற்கு... ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சம்பிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க

நாட்டின் போக்கை... திருத்தியமைக்க வேண்டும், அதற்கு... ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சம்பிக்க.

தெளிவான திட்டம் இல்லாத நாட்டின் போக்கை திருத்தியமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனவும், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது பிரதமரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதும், பொதுமக்களுக்கு விடயங்களை விளக்குவதும், நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதும் இன்றியமையாதது என்றும் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.

இவ்வாறானதொரு நிலைமையை தவிர்க்க தெளிவான திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கு அனைத்துக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

உரிய தலைமைத்துவமும், வழிகாட்டுதலும் இல்லாவிட்டால் நாடு முற்றாக ஸ்தம்பித்துவிடும் அபாயம் காணப்படுவதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1287527

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாட்டின் போக்கை... திருத்தியமைக்க வேண்டும், அதற்கு... ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சம்பிக்க.

எந்த சிங்கள சனாதிபதி வந்தாலும் ஒரே  இனவாத கொள்கைதான். தமிழர் பிரச்சனை தீர்க்கும் வரைக்கும் இரு இனத்திற்கும் விடிவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்தான் அண்மையில் தான் தமிழரையும் அரவணைத்து அரசியல் செய்யப்போவதாக கூறியிருந்தார் எல்லாம் சுடலை ஞானந்தான்.  ஒரு காலத்தில் வாசு தேவ நாணயக்கார தேர்தலில் போட்டியிடும்போது, தான் நாட்டின் தலைவராக வந்தால் இருபத்து நான்கு மணித்தியாலத்தில் புலிகளின் பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைப்பேன் என அறிக்கை விட்டவராம். இப்போ அவரின் மனநிலை எப்படி இருக்கிறது? எல்லாம் சந்தர்ப்பவாதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.