Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் தீர்ப்பெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.வென்றார் என்று சென்ற கட்டுரையில் கண்டோம். அப்போதைய 22 மாவட்டங்களில், தேர்தலில் ஜே.ஆருக்கு முதலிடம் அளிக்காத மாவட்டம் யாழ். மாவட்டமே. ஆகக் குறைந்த மக்கட் தொகை (44 சத விகிதம்) வாக்களித்ததும் அந்த மாவட்டத்திலேயே. ஜீ.ஜீ.யின் மகன் குமார் பொன்னம்பலம் யாழ். மாவட்டத்தில் முதன்மை நிலை பெற்றார். இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீமாவோவின் இடத்தில் இருந்து அவர் குடியுரிமை பறிபோனநிலையில் அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கொஃபைக்கடுவ அவர்களே. பதினொரு யாழ்.மாவட்டத் தொகுதிகளில் ஐந்து தேர்தல் தொகுதிகள் கொஃபைக்கடுவவிற்கு முதல் இடத்தைப் பெற்றுக்கொடுத்தன. பற்றில்லாத பரமசாது போல் பேசினாலும் பழிவாங்கும் பண்பு கொண்டவர் ஜே.ஆர்.வடதமிழர்கள் தம்மை அவமதித்து விட்டார்கள் என்பதை அவர் மறக்கவில்லை. 1983 இன் கலவரங்களுக்குக் காரணம் திருநெல்வேலியில் முளைக்கவில்லை. ஜே.ஆரின் முனிவிலிருந்தே (சினத்திலிருந்தே) முளைத்தது என்பது என் கருத்து. உண்மையான நம்பகமான ஒரு ஆணைக்குழு 1983 ஆம் ஆண்டுக் கலவரங்கள் பற்றி ஆராய்ந்திருந்தால் ஆளும் இடத்தில் இருந்த ஆட்களின் அட்டகாசங்கள் வெளிவந்திருக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் வென்றதும், மக்கள் தீர்ப்பெடுப்பு ஒன்றிற்குத் தயாராவதற்கு ஜே.ஆர்.அளித்த காரணங்கள் விசித்திரமானவை. பயங்கரவாதிகள் எங்கும் பதுங்கியுள்ளார்கள் என்று கூறி மக்களுக்குப் பூச்சாண்டி காட்டினார். இன்று அவசரகால நிலைமையையும் பயங்கரவாத தடைச்சட்ட அமுலாக்கத்தையும் நடைமுறைப்படுத்துவது அன்று ஜே.ஆர்.ஆட்சியாளர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களே.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி `நக்சலைட்டுகள்' என்ற ஜனநாயக விரோத வன்முறையாளர்கள் சிலரிடம் சிக்கியுள்ளதாகத் தமக்குப் பொலிஸார் தகவல் தந்துள்ளதாக அறிவித்தார். இந்த சொற்பிரயோகம் ஜே.வீ.பி.யை குறிப்பிடவில்லை. திருமதி பண்டாரநாயக்காவின் மகள் (பின்னர் ஜனாதிபதியான) சந்திரிகாவின் கணவர் சினிமா நடிகர் விஜயகுமாரணதுங்காவையும் அவரின் ஆதரவாளர்களையுமே அது குறிப்பிட்டது. எங்கோ பாவிக்கப்பட்ட ஒரு சொற் பிரயோகத்தை இங்கு பாவித்தார். ஜே.ஆர். மேற்கு வங்காள மார்க்சீயவாதிகளையே `நக்ஸலைட்டுக்கள்' என்று இந்தியாவில் குறிப்பிட்டு வந்தனர். மார்க்சியவாதக் கட்சிகள் இலங்கையில் பல இருந்தன. ஆனால் நக்சலைட் முத்திரை குத்தப்பட்டவர் ஸ்ரீமாவோவின் மருமகனே (மகளை முடித்தவர்)

விஜயவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் கைதானார்கள். பலரையும் அடக்கி வைத்துக் கொண்டே மக்கள் தீர்ப்பெடுப்புக்கு ஆயத்தமானார் ஜே.ஆர். தேர்தல் ஒன்றினை வெறும் மக்கள் தீர்ப்பெடுப்பால் இல்லாதொழிக்க முடியாது என்று மக்களுக்கு எடுத்துக்காட்டவிழைந்த பௌத்த, கிறிஸ்தவ மதகுருமாரின் கம்பஹா கூட்டமொன்று காடையர்களால் வன்முறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மக்களின் மதிப்பைப் பெற்றிருந்த பேராசிரியர் எதிரிவீர சரத்சந்ர என்ற சிங்களப் பெரியார் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களைப் பற்றி பௌத்த காங்கிரஸ் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்த போது அவரை சிறில் மத்தியூ என்ற ஜே.ஆரின் `உடன் கட்டை' மந்திரியின் அடியாட்கள் கீழே இறக்கி அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார்கள்.

தமிழர்களுக்கு எதிராக நடந்து வந்த அரச அடக்குமுறை இப்பொழுது நாடெங்கிலும் பரவியது. தமிழர்களுக்கு இது நடந்த போது வாளாதிருந்த சிங்கள மக்கள் இப்பொழுது தம்மிடையேயும் அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது செய்வதறியாது தத்தளித்தனர்.

ஹிட்லர் காலத்தில் நிமொலர் என்ற பாதிரியார் பின் வருமாறு கூறியிருந்தார்.

"முதலில் (ஹிட்லரின் ஆட்கள்) யூதர்களைத் தேடி வந்தார்கள். நான் யூதன் அல்லாததால் வாளாதிருந்தேன். பின்னர் கம்யூனிஸ்டுக்களைத் தேடி வந்தார்கள். நான் கம்யூனிஸ்ட் அல்லாத படியால் வாளாதிருந்தேன். பின்னர் தொழிற் சங்க வாதிகளைத் தேடி வந்தார்கள். நான் தொழிற்சங்க வாதி அல்லாததால் வாளாதிருந்தேன். பின்னர் என்னைத் தேடி வந்தார்கள். அப்பொழுது என்சார்பில் குரல் எழுப்ப எவருமே விட்டு வைத்திருக்கப்படவில்லை".

ஒவ்வொருவருந் தானுந் தன் பாடும் என்று வாழ்ந்த நிலையில், அதற்குரியவாறு கட்டுப்பாடற்ற பொருளாதார சித்தாந்தங்களை ஜே.ஆர்.நடைமுறைப்படுத்திய நிலையில், அக்கால அராஜகம் மக்கள் கண்களுக்குப் புலப்படவில்லை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு தேசம் நித்திரைக்குப் போகும் போது அதன் கழுத்தை நெரிக்க உதவும் யுக்தியே அரசியல் மக்கட் தீர்ப்பு முறை என்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஹிட்லர் காலத்தில் கூறப்பட்டது. மக்கள் தீர்ப்பைப் பாராளுமன்றத் தேர்தல் முறை மூலம் பெறாமல் குறுக்கு வழியில் பெற ஆவன செய்தார் ஜே.ஆர். மந்திரிமார்களிடம் இருந்தும் மற்றைய அரச பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் இருந்தும் திகதியிடப்படாத இராஜிநாமாக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். தமக்கெதிராகப் போனால் கையெழுத்திட்ட தினத்தைப் பதியாமல் தமக்கெதிராகப் போகும் தினத்தை அக்கடிதத்தில் உள்ளடக்கி இராஜிநாமாக் கடிதங்களை ஏற்றுக் கொள்வதே அவரின் ஏற்பாடு. குரல் வளையை நெரிப்பது எப்படி என்று கிழநரி ஜே.ஆருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை.

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் கூட அவர் வழிக்கு இடையூறாக இருக்கவில்லை. பாராளுமன்ற வாழ்நாளினை மக்கள் தீர்ப்பெடுப்பால் நீடிப்பது இன்றைய அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரண் இல்லை என்று நான்குக்கு மூன்று என்ற அடிப்படையில் ஏழு நீதியரசர் கொண்ட நீதியரசர்கள் குழாம் ஜே.ஆருக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கியது.

மக்கள் தீர்ப்பெடுப்பு அவசர காலச் சட்டம் அமுலில் இருக்கும் பொழுதே நடத்தப்பட்டது. ஜனாதிபதியை எதிர்த்து முன்னர் தேர்தலில் நின்ற கொஃபைக்கடுவவின் வாக்குக் கூட வேறொருவரால் கள்ளமாகப் பாவிக்கப்பட்டது. அவருக்குக் கூட வாக்களிக்க முடியவில்லை. பலவிதமான கள்ளத் தனங்கள் தேர்தலில் பாவிக்கப்பட்டன. 1982 இல் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த இளைஞர், யுவதிகள் மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தால் புதிய வாக்காளர் டாப்பு பாவிக்கப்பட்டிருக்கும். அதற்கும் இடமளிக்கவில்லை. ஜே.ஆர்.பழைய டாப்பின் படியே தேர்தல் நடந்தது.

இன்றைய பாராளுமன்றம் பதவியில் தொடர வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்குப் பதில் கேட்டதில் பதிந்த வாக்காளர்களில் 38 சதவிகித வாக்குகளையே பெற்றார் ஜே.ஆர்.அவருடைய குள்ள நடவடிக்கைக்கு கிடைத்த வாக்குகள் 31 இலட்ச வாக்குகள். எதிராகக் கிடைத்த வாக்குகள் 26 இலட்ச வாக்குகள். பலர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. பலரும் இந்தச் செயல்முறையை நாடுகாணாத ஒரு விகட நாடகமாகவே கருதினார்.

பாராளுமன்றப் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுத் தன்னையும் ஸ்திரமான நிலையில் வைத்துக் கொண்ட ஜே.ஆர். 1983 இல் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1983 ஆம் ஆண்டுக் கலவரங்கள் திருநெல்வேலியில் 13 அரச இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதால் தெற்குச் சிங்களவர் கொதிப்படைந்து நடத்திய ஒரு நிகழ்வே என்று அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களும் உலகெங்கும் எடுத்துக் காட்ட முனைந்துள்ளனர். ஆனால் அதுவல்ல உண்மை.

தமிழர்கள் வீடுகளையும் தொழிற்ஸ்தானங்களையும் உடைமைகளையும் எரித்து நாசப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் 1983 ஜூலை மாதத்திற்குப் பல மாதங்களுக்கு முன்னரே முடுக்கிவிடப்பட்டன. வாக்காளர் டாப்புக்கள் பெற்றுத் தமிழர்கள் வதிந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அதற்கு அரசும் அரச ஆதரவாளர்களும் உடந்தையாக இருந்தனர்.

இராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் இறந்தமை ஆயத்தமாகியிருந்த அரச ஆதரவாளர்களுக்குத் தமிழர்கள் மீது வன்முறையை முடுக்கிவிட ஏதுவாக அமைந்தது. அது தான் உண்மை. அது பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

-நம்முள் கவீரன்

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.