Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது 

spacer.png

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். 

இவர்கள் ஒரு விசைப்படகுடன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இந்திய-மீனவர்கள்-12-பேர்-கைது/71-299678

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இவர்கள் ஒரு விசைப்படகுடன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த விசைப்படகில் உள்ள எண்ணையைக் கைப்பற்றிக்கொண்டு படகைத் துடுப்புக்கொண்டு வலித்துச்செல்லுமாறு திருப்பி அனுப்பியிருந்தால் அது ஒரு தண்டனையுடன் எரிபொருளின்றி அவதியுறும் இலங்கைக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவும் இருந்திருக்கும். இப்பொழுது அந்த மீனவர்கள் பராமரிப்பு, நீதிமன்றச் செலவு அது இது என்று ஏகப்பட்ட செலவு. மோட்டுக் கடற்படை. 🧐   

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எல்லை தாண்டிய.. மீன்பிடியில் ஈடுபட்ட, இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் காரைக்கால் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களும் , மயிலாடுதுறையை சேர்ந்த 7 மீனவர்களும் கடந்த 30ஆம் திகதி காரைக்காலில் இருந்து படகில் கடற்தொழிலுக்காக புறப்பட்டுள்ளார்கள்.

குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமைபருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் கடற்படையினர் மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து மன்று அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டுள்ளது.

https://athavannews.com/2022/1289566

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.