Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் பெளத்த பேரினவாதம் கைமாற்றப்பட்டிருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பெளத்த பேரினவாதம் கைமாற்றப்பட்டிருக்கிறது

நேற்று இடம்பெற்ற சில விடயங்கள் சிங்கள பெளத்த பேரினவாதம் என்பது, கோத்தாவின் தப்பியோடலோடு அகற்றப்படவில்லை, மாறாக இன்னொரு பெளத்த பேரினவாதிக்கோ அல்லது பேரினவாத மக்கள் கூட்டத்திற்கோதான் கைமாற்றப்பட்டிருக்கிறது எனும் யதார்த்தத்தினை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நேற்று, காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ வாசஸ்த்தலத்தினைக் கைப்பற்றியபின் செய்தியாளர்களுடன் பேசிய ஓமல்பித்த சோபித தேரோ எனும் பெளத்த இனவாதத் துறவி, "சிங்கள பெளத்தர்களின் ஜனாதிபதியென்று கூறிக்கொண்டு சிங்கள பெளத்தர்களின் கலாசார நகரான ருவான்வலிசாயவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கோத்தாபய எனும் பதவிவெறி பிடித்த ஒருவனிடமிருந்து சிங்கள பெளத்தத்தினை மக்கள் தமது கைகளுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பெளத்த நிகாயக்களின் நான்கு உயர்பீடங்களும் கோத்தாவைப் பதவி விலகச் சொல்லிக் கோரிக்கை விடுத்திருப்பதுடன் புதிய செங்கடகல பிரகடணம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். சிங்கள பெளத்த நாடான இலங்கையின் உயர் பெளத்தபீடம் வெளியிட்ட இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரகடணத்திற்குச் சாட்சியாக சிங்கள பெளத்த கத்தோலிக்கர்களின் தலைவரான மல்கம் ரஞ்சித்தும் உடனிருந்தார்" என்று கூறினார்.

 

RW's appointment is NOT the solution - Omalpe Sobitha Thera, Cardinal -  Ceylon Today

அடுத்ததாக கோத்தா கொ கம போராட்டக்காரர்களுடன் மகிந்த, கோத்தா ஆட்சியில் ராணுவ அதிகாரிகளாக இருந்த ஒரு கூட்டத்தினரும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளார்கள் என்பது. குறிப்பாக  2010 இல் சம்பந்தன் ஐய்யா தலைமையிலான கூட்டமைப்பினர் கைகாட்டிய வேட்பாளரான சரத் பொன்சேக்கா எனும் சிங்கள பெளத்த போர்க்குற்றவாளி தன்னை இப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டுள்ளதுடன், அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படக் கூடியவர் எனும் கருத்தினையும் தனது சகாக்கள் ஊடாக இப்போராட்டக்காரர்களிடையே பரப்பியும் வருகிறார்.

Image

கோத்தாக்களும், மகிந்தாக்களும் ஓடி ஒளிந்திருக்கும் நிலையில், நாட்டுக்காகப் போராடி, யுத்தத்தை வென்று சிங்கள பெளத்த ஆட்சியின் கீழ் முழு நாட்டையும் கொண்டுவந்தவன் என்கிற பெயரை தன்னகப்படுத்தும் நோக்கில் இவர் செயற்பட்டு வருவதுடன், இதற்காக தனது பரப்புரைகளையும் போராட்டக்காரர்களிடையே கொண்டுசெல்லவும் தலைப்பட்டிருக்கிறார்.

Image

மூன்றாவதாக, நேற்று நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியினை ஒழுங்குசெய்தவ்தில் முன்னின்றவர்கள் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியம் என்றழைக்கப்படும் "அந்தரெ" எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அணியினர். தமிழ் மக்களின் உரிமைகள், அவர்களின் தாயகம் தொடர்பாக ஜே வி பி யினரின் நிலைப்பாடு எவ்வகையானது என்பது ரகசியமல்ல. 1987 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்து தமது இரண்டாவது கலகத்தினை ஆரம்பித்த இவர்கள், 2005 இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்மூலம் தமிழரின் தயாகமான வடக்குக் கிழக்கினை நிரந்தரமாகவே பிரிப்பதில் வெற்றி கண்டவர்கள். ஆகவே, இவ்வாறான பின்னணியிலியே ஜே வி பி யின் அந்தரே மாணவர் அணியினரின் நேற்றைய பிரகடணம் பார்க்கப்படல் அவசியம். ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றியபின் தமது 4 அம்சக் கோரிக்கையினை முன்வைத்த இவ்வமைப்பின் பேச்சாளர் இலங்கையில் இன ரீதியிலான பிளவுகள் இனிமேல் இருக்கக் கூடாது, அனைவரும் இந்நாட்டின் மக்களே என்று கூறியிருந்தார். அதாவது, தமிழர்மேல் சிங்களப் பெளத்த பேரினவாதம் கடந்த 74 ஆண்டுகளாக கட்டவிழ்த்துவிட்டிருக்கும் ஆக்கிரமிப்பு அழித்தொழிப்பை முற்றாக மறைத்துள்ளதோடு, தமிழர்களுக்கென்று தனியான உரிமைகளோ, தாயகமோ தேவையற்றது எனும் ஜே வி பி யின் தாரக மந்திரத்தை மீளவும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக, கோத்தாவை ஆட்சியிலிருந்து அகற்றும் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்து இப்போராட்டத்தினை முன்னெடுத்தவர்கள் கூறிவருவது, தமிழரும் இணைய வேண்டும், அவர்களின் பிரச்சினைகள் பற்றி இப்போது பேசத் தேவையில்லை, கோத்தாவை அகற்றிவிட்ட பின்னர் தமிழரின் பிரச்சினைகள் பற்றி பேசலாம் என்பதுதான். ராஜபக்ஷேக்களுக்கு ஆதரவானவர்கள் என்று அறியப்பட்ட ஒரு சில ராணுவ, பொலீஸ் அதிகாரிகளைத் தவிர்த்து பெரும்பாலான ராணுவத்தினர் மற்றும் பொலீஸார் மீது சிங்கள பெளத்தர்கள் இன்றும் தமது அபிமானத்தைக் கொண்டிருக்கிறார்கள். 92 நாட்களாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தில் தொடர்ச்சியாக இவர்களால் கூறப்பட்ட ஒருவிடயம்தான் சிங்கள பெளத்த நாட்டினை கஷ்ட்டப்பட்டு ஒன்றாக்கியபின்னர் ராஜபக்ஷேக்கள் அதனை அழித்துவிட்டார்கள் என்பது. தமிழர் மீதான வெற்றியையும், தமிழர்தாயகம் மீதான் ஆக்கிரமிப்பையும் தொடர்ச்சியாக நியாயப்படுத்திவரும் பெரும்பாலான சிங்களவர்கள் கோத்தா ஒழிந்து ஓடிவிடுவதால் மட்டுமே அவற்றினை விட்டுக்கொடுத்துவிடப்போவதில்லை. 

எம்மீதான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பும் , அழித்தொழிப்பும் இனிமேலும் தொடரத்தான் போகிறது. இப்போராட்டக் காரர்களின் வெற்றியில் எமக்கும் பங்கிருந்தது என்று பெருமிதப்பட்டுக்கொள்வோர் தம்மைக் கேட்கவேண்டிய கேள்வி, இதன்மூலம் தமிழரின் உரிமைகளுக்கும், தாயகத்திற்கும் என்ன கிடைத்திருக்கிறது என்பதைத்தான். 

என்னைப்பொறுத்தவரை, சிங்கள பெளத்த பேரினவாதம் மக்களிடமிருந்து ராஜபக்ஷேக்களிடம் தற்காலிகமாகக் கைமாறியிருந்தது. அது மீண்டும் தற்போது மக்களிடமே திரும்பி வந்திருக்கிறது, அவ்வளவுதான். நாம் என்றும்போல அடக்கி ஒடுக்கப்படும் அதே தமிழர்கள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

என்னைப்பொறுத்தவரை, சிங்கள பெளத்த பேரினவாதம் மக்களிடமிருந்து ராஜபக்ஷேக்களிடம் தற்காலிகமாகக் கைமாறியிருந்தது. அது மீண்டும் தற்போது மக்களிடமே திரும்பி வந்திருக்கிறது, அவ்வளவுதான். நாம் என்றும்போல அடக்கி ஒடுக்கப்படும் அதே தமிழர்கள்தான். 

இதைத் தான் நானும் எண்ணி நொந்து கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்திலாவது போராட்டத்தை அழிக்க முன்னின்ற நாடுகள் தமிழரின் பிரச்சனைகளையும் இந்த நேரத்தில் தீர்க்க சொல்ல மாட்டார்களா என ஏங்குகிறேன்.

எமது தலைவர்களும் மிக முக்கியமான நேரத்தில் எதுவுமே பேசாமல் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒன்னும் நடக்கப்போவதில்லை என்பது தெரிந்த விசயம் தான்.

இந்த மாதிரி உள்நாட்டு அரசியல் பிரளயத்தில் உலக நாடுகளின் அனுசரனையில், 'ஏதாவது சிறு மாற்றங்கள் தமிழர்களுக்கும் வந்துவிடாதா..?' என்ற நப்பாசைதான்..! 😌

அதுவும் பொறுக்கவில்லையா உங்களுக்கு..? 🤭😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.