Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த ரணில்: பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த ரணில்: பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

13 ஜூலை 2022, 07:44 GMT
புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்
 

Sri Lanka protestors

இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர்.

பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங்.

இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர்.

போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டது இருப்பினும் பாதுகாப்புப் படையினரை மீறி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் உள்ளே நுழைந்தனர்.

பால்கனியின் மேலே யாரோ ஒரு தீபத்தை ஏற்றி வைத்தனர். உடனே மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தனர்.

அவசர நிலை பிரகடனம்

 

கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு.

 

படக்குறிப்பு,

கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு.

பிரதமர் அலுவலகம் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பி மாலத்தீவு சென்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 37.1ன் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் கூறியதாக அபேவர்த்தன கூறியுள்ளார்.

முன்னதாக, இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.

 

போரணி.

 

படக்குறிப்பு,

'போ'ரணி.

பிரதமர் அலுவலக வாயிலுக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் கண்ணீர் புகை வீசி பின்னுக்குத் தள்ளியதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக்கு எதிரான முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரண முகக் கவசமே அணிந்திருந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் நடந்த போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லம் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து தலைமறைவான கோட்டாபய புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்று தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

 

பாதுகாப்பு

இந்நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி, இன்று காலை போராட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடல் போராட்டக் களத்திலிருந்து பேரணியாக கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் சென்றனர். பிறகு போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர். அப்போது போலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகத்தை நடத்தினர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ரணில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்திருப்பது அவர் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை செயல்படுத்தியதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள் கூடியிருக்கும் நிலையில், அங்கே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டது.

 

ஹெலிகாப்டர்.

 

படக்குறிப்பு,

வட்டமிடும் ஹெலிகாப்டர்.

நாடுமுழுவதும், அவசர நிலையும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், போராட்டத்தை தாங்கள் கைவிடப்போவதில்லை என்று காலிமுகத் திடலில் உள்ள போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அமைதியாக கூடிப் போராட்டம் நடத்தி வரும் மக்களின் தலைக்கு மேலே ராணுவ ஹெலிகாப்டரை பறக்கவிடுவது, இந்த ஆட்சிக்கு எதிரான அமைதியான போராட்டத்தை இவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது என்று பிபிசியிடம் கூறினார் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விராகா பெரீரா.

https://www.bbc.com/tamil/sri-lanka-62147297

இலங்கை பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள். களத்தில் இருந்து பிபிசி தமிழ் நேரலை.

https://www.facebook.com/BBCnewsTamil/videos/2330940070378666/?t=2

  • கருத்துக்கள உறவுகள்

Breaking news: பிரதமர் அலுவலகம் கைப்பற்றப்பட்டது

பிரதமர் அலுவலகம் கைப்பற்றப்பட்டது

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்

 

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்

Breaking news: பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம்

பிரதமர் அலுவலகத்துக்கருகில்... போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம்.

பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291059

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு நகரைச் சுற்றியும் பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பறக்கும் உலங்குவானூர்திகள்!

கொழும்பு நகரைச் சுற்றியும், பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும்... பறக்கும் உலங்குவானூர்திகள்!

கொழும்பு நகரைச் சுற்றியும் பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பல உலங்குவானூர்திகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரையும் இராஜினாமா செய்யுமாறு கேட்டு போராடிவரும் நிலையில் விமானப்படை உலங்குவானூர்திகள் தொடர்ந்தும் வட்டமிட்டு வருகிறன்.

கொழும்பில் போராட்டம் தொடங்கிய பின்னர் முதல் தடவையாக இலங்கை இராணுவ உலங்குவானூர்திகள் போராட்ட இடங்களுக்கு மேலே பறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1291034

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.