Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதில் ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் பதவியேற்பு

பதில் ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று(வெள்ளிக்கிழமை) பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை, சபாநாயகருக்கு நேற்று அனுப்பி வைத்தார்.

இது தொடர்பில் சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார.

அதன்பின்னர் பதில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://athavannews.com/2022/1291210

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

கோத்தாவின்... கடிதத்துக்கு, அடிபடும் அரசியல் வாதிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் பதவியேற்பு

அரசியலமைப்பின் பிரகாரம்... ஜனாதிபதியின் கடமைகளையும், பொறுப்புக்களையும்... பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என அறிவிப்பு!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை கடந்த 14ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தினை நாளைய தினம் விசேடமாக கூட்டுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளைய அமர்வில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே, அவர் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியை இராஜினாமா செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1291229

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய OUT ரணில் IN – 7 நாட்களில் புதிய ஜனாதிபதி!

July 15, 2022
spacer.png

 

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக பாவி விலகியுள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

இன்று இடமப்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர்,

அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் என அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஜூலை 16 ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற விவகாரங்களை விரைவில் நடத்துவதே எனது நோக்கம். இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இந்தக் காலப்பகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு சபாநாயகர் சகல அரசியல் கட்சிகளிடமும் நாடாளுமன்றத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

https://globaltamilnews.net/2022/178472

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.