Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதில் ஜனாதிபதி பதவியை... உடன் துறக்குமாறு, ரணிலுக்கு அழுத்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கோட்டா – முன்னாள் பிரதமர் ரணில் தனிப்பட்ட சந்திப்பு!!

பதில் ஜனாதிபதி பதவியை... உடன் துறக்குமாறு, ரணிலுக்கு அழுத்தம்.

பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய தன்னிச்சையாக பிரதமராக நியமித்தமை பொது மக்களைப் போராட்டத்திற்கு அழைத்த மிக முக்கியமான காரணியாக அமைந்தது.

இதனூடாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் ஆகிய இருவருமே இராஜினாமா செய்து சர்வகட்சி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குவது அவசியமானது.

மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ந்து இதே கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

அதனைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜதந்திர சலுகைகளைப் பயன்படுத்தி, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றது மாத்திரமன்றி, மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை, சட்டப்பூர்வ இராஜினாமாஆவணங்களைச் சமர்ப்பிக்காமல், பதில் ஜனாதிபதியாக நியமித்திருப்பது பாரதூரமான செயலாகும்.

இதனால் மக்கள் மீண்டும் ஆத்திரமடைந்து போராட்டக்காரர்களுடன் சேர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், ரணிலின் நலனுக்கு துணைபோகும் வகையில் பல்வேறு சதிகார சக்திகளால் நாடாளுமன்றத்தை தாக்கி, ஜனநாயகத்தின் ஒரே உச்ச நிறுவனத்தை குழிதோண்டிப் புதைத்து, சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான பின்னணியை உருவாக்கும் முனைப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1291242

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷர்களின் கட்டளைகளுக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் செயற்படுவார் - சரத் பொன்சேகா

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்களின் கட்டளைகளுக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார்.மக்களின் போராட்டத்தை தொடர்ந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் அனைத்தையும் இவரே இல்லாதொழித்தார்.

புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள். காலி முகத்திடலில் 90 இற்கும் அதிகமான நாட்கள் போராட்டத்தில் ஈடுப்படுவது சாதாரணதொரு விடயமல்ல எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடியே அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ளது.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்வின் பலவீனமான நிர்வாகத்தையும்,பொதுஜன பெரமுனவின் தான்தோன்றித்தனமான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.

நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள அரச தலைவர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் சிறந்த படிப்பினையை எடுத்துரைத்துள்ளார்கள்.போராட்டம் நிறைவடைந்து விட்டது இனி வழமை போல் செயற்படலாம் என அரசியல்வாதிகள் ஒருபோதும் கருத கூடாது.

போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.போராட்டகார்கள் அரசியல் வரபிரசாதங்களை பெற்றுக்கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுப்படவில்லை.

எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.காலி முகத்திடலில் 90 நாட்களுக்கும் அதிகமாக முகாமிட்டு 'கோ ஹோம் கோட்டா' என போராடுவது சாதாரணதொரு விடயமல்ல.

முக்களின் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இது சிறந்த அரச தலைவருக்கு அழகல்ல.நெருக்கடியான சூழ்நிலையை ரணில் விக்கிரமசிங்க சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போது திறைமறைவில் இருந்து சகல முயற்சிகளையும் தோற்கடித்து விட்டு ராஜபக்ஷர்களின் அனுசரனையுடன் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதில் ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டு,தற்போது இடைக்கால ஜனாதிபதிவியை அடைய முயற்சிக்கிறார்.ராஜபக்ஷர்களின் கட்டளைக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார்.பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவிற்கு அதிக பலம் உள்ள காரணத்தினால் அவர்களும ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்படுவார்கள்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த தரப்பினரை ஒன்றினைத்து அரசியல் ரீதியில் புதிய சக்தியை உருவாக்குவது சிறந்ததாக அமையும்.சிறந்த அரசியல் கலாச்சாரம் குறித்து நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழநிலையை கருத்திற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/131496

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.