Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டவிரோதமாக... பலத்தை, பயன்படுத்துவதை நிறுத்துங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜனாதிபதியிடம் வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத ஒற்றுமை குறித்து முன்வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்ப்பெறவேண்டும் – மீனாக்ஷி கங்குலி

சட்டவிரோதமாக... பலத்தை, பயன்படுத்துவதை நிறுத்துங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜனாதிபதியிடம் வலியுறுத்து.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களை விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை விட மிருக பலத்தின் மூலம் செயற்பட விரும்புகின்றோம் என்ற ஆபத்தான செய்தியை, இந்த நடவடிக்கைகள் ஊடாக புதிய அரசாங்கம் மக்களுக்கு அனுப்புகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவியேற்ற ஒரு நாளுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது என்ற செய்தியை இலங்கைக்கு அவர்களின் சர்வதேச பங்காளிகள் உரத்த குரலில் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2022/1292181

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களை விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

1 hour ago, தமிழ் சிறி said:

பதவியேற்ற ஒரு நாளுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏதோ வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து, கேள்வி கேட்டு, வெருட்டி, அடக்கிப்போட்டார் என்பதுபோல் செய்தி வந்தது, ஆனால் அவ சமாதானமாகவில்லை, குற்றம் சாட்டி, கட்டளை போடுறா. சர்வதேசம் தன்னைப்போல கிணற்றுத்தவளைகள் என்று நினைத்து, வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டுகிறார். இவரது பயணம் சவால் நிறைந்ததாகவே இருக்கும் உள்ளூரிலும், சர்வதேசத்திலும். அமெரிக்கா பக்கபலம் இருக்கென்று நினைத்து குதித்து தாண்ட வெளிக்கிட்டு தனித்து மொக்கையானார். ராஜபக்ஸ்சாக்களை காப்பாற்றப்போய், இப்போ அவர்கள் நல்லவர்கள், இவர் அடாவடி காரன் என்றும் மிருக ஆட்சி என்று எல்லோரும் வர்ணிக்கிறார்கள். செய்த பாவத்தை வலியப்போய் தலையில வாங்கிக்கொண்டார், சுமக்கட்டுமேன்! ராஜபக்ஸ்சாக்கள்  இப்போ இவரை மாட்டி விட்டு தாங்கள் தப்பித்த மகிழ்ச்சியில். பிழையான நேரத்தில் தவறான முடிவெடுப்பவர் இவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

ராஜபக்ஸ்சாக்களை காப்பாற்றப்போய், இப்போ அவர்கள் நல்லவர்கள், இவர் அடாவடி காரன் என்றும் மிருக ஆட்சி என்று எல்லோரும் வர்ணிக்கிறார்கள். செய்த பாவத்தை வலியப்போய் தலையில வாங்கிக்கொண்டார், சுமக்கட்டுமேன்! ராஜபக்ஸ்சாக்கள்  இப்போ இவரை மாட்டி விட்டு தாங்கள் தப்பித்த மகிழ்ச்சியில். பிழையான நேரத்தில் தவறான முடிவெடுப்பவர் இவர்.

இப்போது... பலரும், கோத்தாவை... நல்லவர் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
மூன்று மாதம், மூர்க்கமாக போராடியும், தங்கள் மேல் கைவைக்கவில்லை என்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

இப்போது... பலரும், கோத்தாவை... நல்லவர் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
மூன்று மாதம், மூர்க்கமாக போராடியும், தங்கள் மேல் கைவைக்கவில்லை என்கிறார்கள். 

 இதுதான் ராஜபக்ஸ்சாக்களின் தந்திரம்.  இது தெரியாமல் ஏதோ கோத்தா தனக்கு பதவி ஏற்றியது போல்  இவர் குதித்து விழுந்து கிடக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.