Jump to content

என் கணவர் இப்படித்தான் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்,” - ஐதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“என் கணவர் இப்படித்தான் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்,” - ஐதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார்

  • சுரேகா அப்பூரி
  • பிபிசி தெலுங்கு சேவை
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அடப்பா சிவசங்கர் பாபு

பட மூலாதாரம்,UGC

 

படக்குறிப்பு,

அடப்பா சிவசங்கர் பாபு

"நான் சம்பாதித்த பணம் மட்டுமல்ல, என் உறவினர்களிடம் இருந்தும் பணம் வாங்கிக் கொடுத்தேன். இப்போது அவர் என் பணத்தை திருப்பிக் கொடுப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவருடன் என் உடலையும் நான் பகிர்ந்துக்கொண்டேன். அந்த ஆளுக்கு என்ன நற்பண்பு உள்ளது?

இது வைதேகியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜதராபாத்தை சேர்ந்த அடபா சிவசங்கர் பாபு என்பவரால் அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதுவரை எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவசங்கர் திருமணம் செய்ததாகக் கூறப்படும் பெண்களில் ஒருவர்.

"என் கணவர் பல பெண்களை திருமணம் செய்துள்ளார் என்று உணர்ந்த நேரத்திலிருந்து, நான் அவரை நீதிக்கு முன் நிறுத்த என்னால் முடிந்த அளவுக்குப் போராடிக் கொண்டிருக்கிறேன்", என்கிறார் வைதேகி.

கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று ஜதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில், இரண்டு பெண்கள் சிவசங்கர் தங்களை மணந்துக்கொண்டதாகவும் இறுதியில் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார்கள்.

"கொண்டாபூரில், நான் குடியிருக்கும் வீட்டில் இருந்து இரண்டு வீதிகள் தள்ளி ஒரு குடும்பத்தை அவர் வைத்தார். 200 மீட்டர் தள்ளி, மற்றொரு குடும்பத்தை அவர் வைத்தார்," என்று வைதேகி கூறுகிறார். அதேபோன்று அவர் தங்களை ஏமாற்றியதாக இன்னும் சில பெண்களும் கூறினார்கள்.

"இதுவரை அவர் 11 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஆனால், எங்களால் 8 பெண்கள் குறித்த விவரங்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது," என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பெண் கூறினார்.

சிவசங்கர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட ஒரு மாதத்திற்குள் மேலும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்கிறார். இது தெரிய வந்ததும் அவரிடம் விசாரித்த போது புதுமணப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஷூரிட்டி தருவதாக உறுதியளித்தார். இதற்கு முன் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறுகிறார் . சில காலமாக இது அவருடைய வேலையாக இருந்தது. இதைக் குறைந்தபட்சம் இப்போதாவது நிறுத்த வேண்டும்," என்றார் வைதேகி.

சிவசங்கர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

 

ஐதராபாத்

யார் இந்த அடபா சிவசங்கர் பாபு?

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி மண்டலத்தில் உள்ள பெத்தாபுடியை சேர்ந்தவர் அடபா சிவசங்கர் பாபு. தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

"அவர் 2018ஆம் ஆண்டு, மங்களகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அதன் பிறகு அவர் ஐதராபாத் சென்றார். அப்போது முதல், அவர் விவாகரத்தான பெண்கள் மீது கவனம் செலுத்தினார். புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் விவாகரத்து ஆன பெண்களை மேட்ரிமோனி இணையதளங்களில் தேடுவது அவரது வழக்கம்.

மேல்தட்டு பெண்களை குறிவைத்தும் வேலைக்குச் செல்லும் பெண்களைக் குறிவைத்தும், அவர்களின் கைபேசி எண்களை எடுத்து அவர்களிடம் பேசத் தொடங்கினார். மேலும் அவர்களுடைய பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமும் பேசினார். அவரது குடும்பத்தைப் பற்றி கேட்டால், அவர் தனது பெற்றோர் இப்போது இல்லை என்றும் விவாகரத்து பெற்றவர் என்றும் அவர்களிடம் கூறுவது வழக்கம். தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகச் சொல்லி, அவர்களை ஒரு குழந்தையைச் சந்திக்க வைப்பது வழக்கம்.

மேலும், அத்தை மற்றும் மாமா வேடத்தில் ஒருவரை நடிக்க வைத்து, அவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வார். அதன்பிறகு அவர்களிடமிருந்து சாமர்த்தியமாக பணம் பறித்து வந்தார். திருமணமாகி ஒன்றரை மாதம் ஆன நிலையில், அந்தப் பெண்ணை வேலையை விட்டுவிடுமாறு வற்புறுத்தத் தொடங்குவார். இதற்கிடையில், தான் முன்பு திருமணம் செய்து கொண்ட பெண்கள் சந்தேகப்பட ஆரம்பித்தால், அவர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறுவார்.

பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்ததற்குக் காரணம், புது மனைவி பணம் தருவார் என்ற நம்பிக்கைதான். புது மனைவியிடம் தனக்கு ஏதோ தேவை இருப்பதாகச் சொல்லி, அவரிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதில் ஒரு பகுதியை அவர் மீது சந்தேகப்பட்ட மற்றொரு மனைவிக்குக் கொடுப்பார். புதிய மனைவி அவரிடம் பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கும் போது, அவர் ஒரு புதிய பெண்ணுடன் நட்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்வார். இதுபோல் இன்று வரை 11 பேரை திருமணம் செய்துள்ளார்", என்றார் வைதேகி.

இதுவரை 8 பெண்கள் பற்றிய ஆதாரங்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.

சில பெண்கள் ஏற்கெனவே ஒருமுறை விவாகரத்து ஆனதால், இந்த விவகாரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வெளியே வந்தால், அது தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற அச்சம் காரணமாக முன்வருவதில்லை என்றும் அவர் கூறினார்.

சிவசங்கர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் பெண்களில் வர்ஷினியும் ஒருவர். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

"என்னை 2021ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்தார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வைதேகியை திருமணம் செய்தார். எங்கள் திருமணம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. அதே மாதத்தில் அவர் வேறொரு பெண்ணை மணந்தார். இந்தப் பெண் இப்போது கர்ப்பமாக உள்ளார். சிவசங்கரை பற்றி நாங்கள் கூறியும் சிவசங்கருடன் சென்றுவிட்டார்," என்று வர்ஷினி பிபிசியிடம் பேசினார்.

"விவாகரத்துக்குப் பிறகு புது வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் எங்களைப் போன்ற பெண்கள் சிவசங்கரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். உங்களுக்குத் தெரிந்ததைப்போல், எங்களுக்கு நல்ல, வேலைக்குச் செல்லும் கணவர் வேண்டும், எங்கள் பெற்றோர்களுக்கு தங்கள் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர் எங்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் போதும், இந்த ஆசைகளை அவர் பயன்படுத்திக் கொண்டார்," என்று வர்ஷினி புலம்புகிறார்.

 

திருமணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண்கள் அவரை எப்படி நம்பினார்கள்?

பெண்களைச் சந்திக்கும் போது, மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகக் கூறுவார்.

"அதன் பிறகு, ஆரம்பக் கட்டம் திருமணத்தை நோக்கி நகரும்போது, அவர் போலி சம்பள சீட்டுகளையும் ஊழியர் அடையாள அட்டைகளையும் உருவாக்குவார். இப்படி அந்த பெண்ணை மட்டுமின்றி அவரது பெற்றோர், உறவினர்களையும் நம்ப வைக்கிறார்," என்கிறார்கள் சிவசங்கர் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறும் பெண்கள்.

"திருமணமான ஒரு மாதத்திலேயே அந்தப் பெண் வேலை செய்வது பிடிக்கவில்லை என்று சொல்லி வேலையை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தத் தொடங்குவார். அந்தப் பெண் வேலை செய்து வெளியுலகம் தெரிந்தால், அவரது திட்டம் அம்பலமாகிவிடுமோ என்ற பயம். தனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தனது நிறுவனம் தன்னை விரைவில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் மெதுவாகக் கதை கட்டுவார். எல்லோரும் அங்கே மகிழ்ச்சியாகக் குடியேறலாம் என்று அவர் அந்தப் பெண்னை நம்ப வைப்பார். அதன்பிறகு, தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும் அதனால், தனது அமெரிக்கப் பயணம் தாமதமாகி வருவதாகவும் கூறுவார். இந்தச் செயல்பாட்டில், நிறுவனம் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டதாகவும் இப்போது தனது அனைத்து ஆவணங்களையும் மீண்டும் பெறுவதற்கு லட்சங்கள் செலவாகும் என்றும் அவர் அவர்களை நம்ப வைப்பார். இது போல் பெண்ணிடம் மட்டும் கடன் வாங்காமல், அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் கடன் வாங்கிக் கொடுக்கவும் செய்கிறார். ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் 25-30 லட்சம் பெற்றுள்ளார்," என்றார் வர்ஷினி.

 

ஐதராபாத்

எப்படி சந்தேகம் எழுந்தது?

வர்ஷினியை திருமணம் செய்த பிறகு, தனது நிறுவனம் தன்னை ஒரு ப்ராஜெக்ட் வேலைக்காக அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சிவசங்கர் அவரிடம் கூறினார்.

வர்ஷினியையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லி அவர்களது திருமணத்தைப் பதிவு செய்து வைத்தார். வர்ஷினியின் சகோதரிக்கும் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறினார். விசா நடைமுறைக்கு பணம் தேவை என்று கூறி, அவரிடமும் அவரது பெற்றோரிடமும் கடன் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது அமெரிக்க பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அவரிடம் கூறினார்.

பணத்தைத் திருப்பி செலுத்தாததால், வர்ஷினியின் பெற்றொர்கள் விசாரணை நடத்தினர். பல காரணங்களைக் கூறி அவர்களைத் தவிர்த்துவிட்டார். அவரது நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, வேண்டுமானால் காவல்துறையில் புகார் செய்யலாம் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

வர்ஷினி தனது பெற்றோருடன் சேர்ந்து மேடக் மாவட்டம் ராமசவுத்ராபுரம் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். வைதேகியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார். அவரை தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் வைதேகியை பொய் சொல்லி சமாதானப்படுத்தினார். தன்னை ஏமாற்றியது வர்ஷினி தான் என்று கூறிய அவர், காவல் நிலையத்தில் தனக்கு ஆதரவாக நிற்கும்படி வைதேகியிடம் கேட்டுக் கொண்டார். வர்ஷினிக்கும் அவருடைய பெற்றோருக்கும் திருப்பிச் செலுத்துவது அவருடைய பொறுப்பு என்று வைதேகியிடம் சொல்ல வைத்தார்.

ஆனால், வைதேகியும் மெதுவாக அவரைச் சந்தேகிக்கத் தொடங்கினார்.

"அவர் தினமும் இரவு நேரப் பணி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணிடம் எப்போதும் பேசிக்கொண்டிருப்பார். கேட்டால், அவர் தங்கள் வாடிக்கையாளர் என்று கூறுவார். ரகசியமாக வேறொரு ஃபோனை உபயோகித்து, அந்த ஃபோனை காரில் வைத்துவிட்டு வருவார். உண்மையில், அவர் குளியலறையிலும் ரகசியமாக தொலைபேசியில் பேசுவதை நாங்கள் கவனித்தோம்.

அந்த ஃபோனை பிடுங்கி, எதிர்முனையில் இருக்கும் அந்த பெண்ணிடம் பேசிய போது அவரது மனைவி என்று சொன்னார். இந்த விஷயங்களை அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகு வர்ஷினியிடம் பேசினேன். நாங்கள் இருவரும் கூடுதல் தகவல்களைத் தேடத் தொடங்கியபோது, அவர் பக்கத்து வீதிகளில் மூன்று குடும்பங்களை நடத்தி வருவதைக் கண்டோம். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அவர் பெண்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதை நாங்கள் கண்டுபிடித்தோம். கடந்த காலங்களிலும் அவர் மீது பெண்கள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த விவரங்களைச் சேகரித்தோம்.' என்றார் வைதேகி.

 

ஐதராபாத்

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சிவசங்கருக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் 2 வழக்குகளும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது ஐதராபாத்தில் உள்ள கேபிஎச்பி, ஆர்சி புரம், கச்சிபௌலி, எஸ்ஆர் நகர் காவல் நிலையங்களிலும், அனந்தபுரம் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு சிவசங்கரின் பதில் என்ன?

சிவசங்கர் திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்கள் கூறியதை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தான் தலைமறைவாகவில்லை என்றும் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

"நான் 8-11 பெண்களை திருமணம் செய்து கொண்டேன் என்பது உண்மைக்குப் புறம்பானது. பெண்களின் பெற்றோர்(பல) மற்றும் ஒரு நபர் நிறுவனங்களை நிறுவி மோசடி செய்ய விரும்பினர். அதற்கு நான் உடன்படாததால் அவர்கள் இரண்டு பெண்களைக் கொண்டு என் மீது புகார் செய்தனர். நான் இத்தனை பெண்களைத் திருமணம் செய்து கொண்டேன் என்றால், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறேன். அவர்களிடம் ரூ.60 லட்சம் வாங்கியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்.

நான் ஒருமுறை தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் கருத்து வேறுபாடு இருப்பதால், நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. இன்று வரை, நான் வேறொரு பெண்ணுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்," என்று குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை என்ன கூறுகிறது?

இந்த வழக்கு குறித்து காவல்துறை வாய் திறக்கவில்லை. விசாரணை நடத்துகிறோம் என்று மட்டும் கூறி வருகின்றனர். சிவசங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெண்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-62280413

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/  
    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
    • சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
    • நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன்  They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.  இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும்.  அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.