Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பினால் நம்புங்கள் : கிட்னி கல்லை உறிஞ்சிப் துப்பும் மூதாட்டியின் மகிமை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img1070813023_1_1.jpgimg1070813023_2_2.jpg

வீடியோ

நம்ப முடியாத சம்பவங்களில் நாம் அடுத்த கட்டமாக பார்க்கப்போவது, மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ராலயாதா என்ற கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் உருவாகும் கற்களை வாயால் உறிஞ்சியே எடுத்து விடுகிறாராம். இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த கிராமத்திற்கு நாம் விரைந்தோம்...

அங்கு மெதுவே விசாரித்தோம் அவர் பெரும் பீடிகை போட்டு பிறகு சீதாபாய் என்ற அந்த மூதாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

சீதாபாய் என்ற அந்த மூதாட்டியைச் சுற்றி நிறையபேர் அமர்ந்திருந்தார்கள். அவரும் தனது சிகிச்சையை தொடங்க ஆயத்தமாயிருந்தார். அப்போது ஒரு சிறுவனை அழைத்து அவனின் பிரச்சனையை கேட்டறிந்தாள். பிறகு வலியிருந்த பகுதியில் வாயை வைத்து உறிஞ்சத் தொடங்கினாள். பிறகு அந்த மூதாட்டி தன் வாயிலிருந்து சில கற்களை ஊதித் தள்ளினாள். கிட்னி கல்லை குணப்படுத்திக் கொள்ள அங்கு நீண்ட வரிசையில் நின்றிருந்த ஆண்களும், பெண்களும் காத்திருந்ததைக் கண்டு அதிசயித்தோம்.

பிறகு நாம் வந்த விவரத்தை சீதாபாயிடம் தெரிவித்தபோது, இந்த சிகிச்சையை தான் 18 ஆண்டுகளாக செய்துவருவதாகக் கூறி பிரமிக்க வைத்தார். இந்த சிகிச்சையை அளிக்கும்போது தான் காற்றில் பல இடங்களில் மிதப்பதை போல் உணர்கிறேன் என்றார். இந்த சிகிச்சைக்கு துர்க்கை தேவியின் அருளே காரணம் என்று ரொம்ப சாதாரணமாக கூறினார்.

சீதா பாய் சிகிச்சை விறுவிறுவென பார்த்துக் கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் இருந்த நபர் வந்தவர்களிடம் பழங்கள், கத்தரிக்காய், மற்றும் தக்காளிகளை சாப்பிடுமாறு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அவர் சில மூலிகை மருந்துகளையும் நோயாளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தார்.

ராஜஸ்தான், குவாலியர் மற்றும் கான்பூரில் சீதா பாயின் மகிமை ஏற்கனவே பரவியிருந்தது. இவரிடம் சிகிச்சை பெறவந்த திருமதி. பகாவான் தேவி என்ற ஒரு 75 வயது மூதாட்டியை சந்தித்தோம், இந்த வயதில் கல்லை அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், அப்போதுதான் மாதாவின் பெயரை கேள்விப்பட்டு இங்கு வந்தேன், சோனோகிராபி ஒன்றை எடுக்குமாறும் எனக்கு மாதா கூறியிருந்தார். சிகிச்சை முடிந்து பார்க்கும்போது கிட்னி கல் மறைந்துவிட்டிருந்தது" என்றார்.

மற்றொரு நபரான மனோஜ், இங்கு தான் 2வது முறையாக வருவதாகவும், முதல் முறை சிகிச்சைக்கு பிறகு வலி குறைந்தது. பிறகு அல்ட்ரா சவுண்ட் எடுத்த்ப்பார்த்தபோது முழு குணமடைந்ததை தெரிந்து கொண்டேன் என்றார்.

ஒரு பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக செய்து விட்டு எல்லாம் அந்த கடவுள் செயல்தான் என்று சீதாபாய் கூறியபோது தெய்வீக உணர்வு அவரிடம் தெரிந்தது.

ஆனால் விஞ்ஞானம் இதனை ஏற்கிறதா என்பதை அறிய டாக்டர் அஷோக் சவுத்ரி என்பவரை சந்தித்தோம் கல்லை உறிஞ்சி எடுப்பது என்பது நடக்க முடியாத காரியம், கல்லின் மிக நுண்ணிய பகுதிகள் சிறு நீரில் வெளியேறும் அவ்வளவே. மேலும் கல்லை நீக்க மருத்துவம் என்பது உடலில் அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்தது. எனவே அது சாத்தியமில்லை இல்லை என்று கூறினார்.

ஆனால் சீதா பாயோ, தான் குழந்தையாய் இருக்கும்போதே துர்க்கையின் பக்தை என்றும் துர்க்கைதான் இந்த மகிமையை தனக்கு அளித்தாள் என்றும் கூறுகிறார். விஞ்ஞானமா அல்லது தெய்வீக சக்தியா என்ற புதிர் விடுபடாமல் திரும்பினோம்.

வெப்டுனியா - தமிழ்

Edited by Kishaan

கிஷாண் அண்ணா உங்களிற்கு மட்டும் எங்கே தான் இப்படியான செய்தி எல்லாம் கிடைக்குது.............அது சரி இதை நீங்க நம்புறீங்களா என்று சொல்லுங்கோ அதற்கு பிறகு பேபி நம்புறன்......... :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிஷாண் அண்ணா உங்களிற்கு மட்டும் எங்கே தான் இப்படியான செய்தி எல்லாம் கிடைக்குது.............அது சரி இதை நீங்க நம்புறீங்களா என்று சொல்லுங்கோ அதற்கு பிறகு பேபி நம்புறன்......... :P :P

சாய்பாபா வாய்க்குள்ள இருந்து கல்லு (சிவலிங்கம்) எடுக்கிற விசியத்தை/ இரகசியத்தின் பின்னணியை உங்க அண்மையிலே BBC இலை போட்டுக்காட்டினவை/ கிழிச்சவங்கள்...

ஆனால் இதன் மூலம் பலருடைய நோய் குணமாகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே.. அதனால் தான் கொஞ்சம் ஆழமாக சிந்திக்கவேண்டி இருக்கு ஜமுனா அக்கா..

ஆனால் இது சொல்லப்படுகிறமாதிரி கடவுள், அது, இது என்றதிலை நம்பிக்கை இல்லை, அதிலை தெளிவாக இருக்கிறேன்.. :D

சில கேள்விகளுக்கு இதில் பதில் சொல்லப்படாததால் உடனடியாக விஞ்ஞான விளக்கம் சொல்ல முடியாது..

பொறுத்திருந்து பார்ப்போம்.. :lol:

ஹி ஹி.

அரோகரா. நல்ல விடயங்கள் எல்லாம் நடக்குது போல. முதலில் யார் அந்த நோயாளிகள் என்பதை தேடிப் பார்த்தால் ஓரளவு உண்மை விளங்கும்.

நான் நகைச்சுவையாக நண்பர்களிடம் கூறும் "கணிதவியல்" சம்பந்தப்பட்ட ஒரு கதை இருக்கிறது. "Topology and Manifolds" பற்றி கற்பவர்கள் இதை அறிந்திருக்க கூடும். ஒரு "இரு பரிமாண" உயிரினத்தை எடுத்துக்கொண்டால் அதன் உடல் ஒரு "closed curve" ஆக இருக்கும். அந்த உயிரினத்தை பொறுத்தமட்டில் அதனுடல் முற்றுமுழுதாகவே, அதன் இயங்கு வெளியில், மூடப்பட்ட ஒன்று. அதனால் அதன் உட்பகுதியை தொட்டு உணர்ந்து பார்க்க முடியாது. ஆனால் முப்பரிமாணத்தில் இயங்கும் நமக்கு அதன் உடலின் உட்பகுதி எப்பொழுதுமே திறந்திருக்கும். உதாரணமாக அந்த உயிரினத்துக்கு ஒரு "சிறுநீரக க்கல்" வந்துவிட்டதென வைப்போம். முப்பரிமாணத்தில் இயங்கும் நாம், அதன் உடலை "கீறிக் கிழிக்காமல்" முப்பரிமாணத்தினூடாக அந்தக் கல்லை எடுத்து விடலாம். அவ்வுயிரை பொறுத்தவரை "சிறுநீரகக் கல்" மாயமாக மறைந்து விட்டது. அதாவது "முப்பரிமாணத்தில் இயங்கும் நாம் இரு பரிமாண உயிரினத்துக்கு ஒரு கடவுள்". :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.