Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி தெரிவின் போது... உறுப்பினர்கள் சிலர், அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

ஜனாதிபதி தெரிவின் போது... உறுப்பினர்கள் சிலர், அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தபட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த அச்சுறுத்தலினால்தான் அவர்கள், ஜனாதிபதி தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

வாக்களிக்காவிட்டால் விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் என அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தெரிவானது சட்டபூர்வமானது அல்ல. நாடாளுமன்றில் இதன் வாக்கெடுப்பு இடம்பெற்றாலும் நாடாளுமன்றுக்கு வெளியிலேயே உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்- என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினர் பயங்கர காய்கள் என்பதால் அவர்கள் அச்சுறுத்தப்படவில்லை.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

கூட்டமைப்பினர் பயங்கர காய்கள் என்பதால் அவர்கள் அச்சுறுத்தப்படவில்லை.😀

கூட்டமைப்பினரை அச்சுறுத்தினால்…
அவர்கள் இந்தியாவிடம் போட்டுக் குடுத்து விடுவார்கள் என்று பயம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம்.  இந்தியா இப்போ தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்குது. பலிகொடுக்கவும் இப்போ யாருமில்லை, உதவுவோரும் இல்லை. இதில த.தே. கூட்டமைப்பை கட்டி அழுமா? இலங்கை இந்தியாவை பாத்து பயந்திச்சாம் என்றால் இலங்கை விழுந்து சிரிக்கும். அது ஒருநாளும் இந்தியாவை பாத்து பயந்ததில்லை, இந்தியாவின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இந்தியா தான் இலங்கையை பாத்து பயந்தது இதுவரை தொடர்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.