Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பலசரக்கு கடைகளில் மரக்கறி விற்க தடை விதிக்க கோரி போராட்டம்!

யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்தைக்கு வெளியே உள்ள பலசரக்கு கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால் , சந்தைக்குள் வந்து மக்கள் மரக்கறியினை கொள்வனவு செய்யாமல் , வீதியோரமாக இருக்கும் பலசரக்கு கடைகளில் மரக்கறியினை கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றனர்.

அதனால் சந்தையின் உள்ளே மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் எம்மிடம் மக்கள் வருவதில்லை. சில கடைகளில் சுகாதாரமின்றி மரக்கறிகளை கொட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

அத்துடன் வீதியோர கடைகளில் மரக்கறி கொள்வனவுக்காக வருவோர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்துவதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன.

எமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சந்தைக்கு வெளியே உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால் எமது சந்தை சுற்று வட்டாரத்தில் உள்ள யாழ்.மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளுகைக்குள் உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரி இரு சபைகளிடமும் மகஜர் கையளித்துள்ளோம்.

அதேவேளை சுகாதாரம் அற்ற முறையில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடுக்குமாறும் , மரக்கறி வாங்க வருவோர் வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதானால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே வீதி ஒழுங்குகளை பேணி , போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு, கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடமும் மகஜர் கையளித்துள்ளோம் என சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1294233

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்!

நல்ல விடயம். எல்லாவற்றையும் ஒருவனே செய்யக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பலசரக்கு கடைகளுக்கு மரக்கறிகள் சந்தையில் இருந்தே பெறப்படும் என நினைக்கிறன் எங்கள் ஊரில் அதுதான் வழக்கம். சில விவசாயிகள் சந்தைக்கு பொருட்களை கொண்டு செல்லாமல், ஊரில் உள்ள கடைகளுக்கு விநியோகிப்பதுமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நல்ல விடயம். எல்லாவற்றையும் ஒருவனே செய்யக்கூடாது.

வியாபாரம் என்றால் போட்டி உள்ளதுதானே. இதுபற்றி பலசரக்கு கடை வியாபாரிகளின் கருத்தையும் அறியலாமே. பலசரக்கு கடைகளில் கடனுக்கு பொருட்கள் வாங்குவோரும் உள்ளார்கள்.  சில்லறை வியாபாரிகள் கடனுக்கு மரக்கறி கொடுப்பார்களா?

நாங்கள் பணக்கஸ்டத்தில் வாழ்ந்த காலத்தில் எமது அப்பா பலசரக்கு கடை ஒன்றில் மரக்கறி உட்பட அனைத்து பொருட்களையும் கடனுக்கு பெற்றுவிட்டு காசுவரத்து உள்ளபோது கடையின்  கடனை அடைப்பார். இலங்கைக்கு சென்றசமயம் குறிப்பிட்ட கடையை தேடி சென்றேன். கடை உரிமையாளர், கடை அங்கு இப்போது இல்லை என்று கூறினார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வியாபாரம் என்றால் போட்டி உள்ளதுதானே. இதுபற்றி பலசரக்கு கடை வியாபாரிகளின் கருத்தையும் அறியலாமே. பலசரக்கு கடைகளில் கடனுக்கு பொருட்கள் வாங்குவோரும் உள்ளார்கள்.  சில்லறை வியாபாரிகள் கடனுக்கு மரக்கறி கொடுப்பார்களா?

போட்டி இருக்க வேண்டும் தான். அது அவரவர் தகுதியுடன் இருக்க வேண்டும். பெரிய முதலாளிகள் தங்கள் பணபலத்தால் யாரையும் விலைக்கு வாங்கி எதையும் செய்ய முடியும். இதனால் பாதிக்கப்படப் போவது அன்றாடம் சம்பாதிக்கும் சின்ன வியாபாரிகள் தான். இதை அரசு அல்லது சம்பந்தப்பட்டவர்கள் தான் முன்னின்று கவனிக்க வேண்டும்.

 இங்கு ஜேர்மனியில் பல பெரிய அங்காடிகள் வந்த பின்னர் சிறிய சிறிய சில்லறைக்கடைகள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றது. ஏராளமான கட்டிடங்கள் வெறுமனே காட்சியளிக்கின்றது. வேலையற்றோர் தொகையும் அதிகரித்து கொண்டே போகின்றது.

15 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வியாபாரம் என்றால் போட்டி உள்ளதுதானே. இதுபற்றி பலசரக்கு கடை வியாபாரிகளின் கருத்தையும் அறியலாமே. பலசரக்கு கடைகளில் கடனுக்கு பொருட்கள் வாங்குவோரும் உள்ளார்கள்.  சில்லறை வியாபாரிகள் கடனுக்கு மரக்கறி கொடுப்பார்களா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.