Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

சிறு கிராமத்திலிருந்து மதுரையில் வாழ்ந்து, பின் சென்னையிலும் வேலை நிமித்தம் காலத்தை ஓட்டவேண்டிய நிலை இருந்தது.

கிராமத்தில் வாழும்போது தெருவில் யார் எதிரே வந்தாலும் "என்னப்பு சுகமா இருக்கிறீர்களா? படிப்பு வேலை எப்படி..?" என சகலத்தையும் நம்மிடம் நேசத்துடன் விசாரிப்பார்கள். அண்டை கிராமங்களுக்கு போனாலும் நட்புடன் பேசும் கிராமத்திய வாழ்வும், வழக்கமும் இன்றும் உள்ளது.

மதுரை வந்தபோது, இம்மாதிரியான அக்கறையான விசாரிப்புகள் குறைந்து, தெரியாத முகமென்றாலும், ஓரளவு சிநேகத்துடன் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் அல்லது வழி காட்டுவார்கள்.

ஆனால் 70களின் இறுதியில் சென்னைக்கு வந்தபோது, அப்பெரிய நகரத்தை முதன் முதலில் பார்த்து பிரமித்துப்போனேன்.. பலதரப்பட்ட கலவை முகச் சாயல்கள்.. யார், எப்படி, எந்த மொழி என தெரியாத தடுமாற்றம்.

சாலையில் செல்வோரிடம் ஏதாவது கேட்டால், உடனே பதில் வராது. ஏற இறங்க பார்த்துவிட்டு, விட்டேத்தியாக பதில் வரும்.. அல்லது "தெரியாது சார்.." என முடித்துவிடுவார்கள்.

முதலில் இவர்களின் பேசுமுறை, தெரியாதவர்களிடம் சாக்கிரதையாக பேசும்/பழகும் விதம் அந்நியமாக தெரிந்தாலும், பரபரப்பான எந்திர வாழ்க்கை, ஏமாற்றுதல், திருட்டு பயம் போன்றவற்றால் அனைவரும் எச்சரிக்கையுடன் பழகுவது பாதுகாப்பானது என்ற அவர்களின் அணுகுமுறையை நாளடைவில் அனுபவத்தில் யாரும் உணர்வர்.

நிற்க.

இலங்கையிலிருந்து வந்துள்ள இந்த தம்பி, வெள்ளேந்தியாக சென்னை மக்களிடம், அதுவும் செளகார் பேட்டையில்(இது பெரும்பாலும் வட இந்தியர்களின் வியாபார பகுதி, இந்திதான் இங்கே கோலோச்சும், தமிழிலில் அரைகுறையாக பேசுவார்கள்) பேச எத்தனித்தால், எப்படி சிநேகமான முறையில் பதில் வரும்..? (தெருவோர கடை வைத்திருக்கும் சில கடைநிலை தமிழ் தொழிலாளிகளை தவிர.)

வேடிக்கை..!

இப்பகுதிக்கு பல வருடங்களாக சென்று வந்துள்ள அனுபவத்தில் எழுதுகிறேன். (மின்ட் தெரு, கோவிந்தப்பன் தெரு, பிராட்வே, ஏழு கிணறு, தம்பு தெரு இன்ன பிற..)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ராசவன்னியன் said:

Picture1.png

சிறு கிராமத்திலிருந்து மதுரையில் வாழ்ந்து, பின் சென்னையிலும் வேலை நிமித்தம் காலத்தை ஓட்டவேண்டிய நிலை இருந்தது.

கிராமத்தில் வாழும்போது தெருவில் யார் எதிரே வந்தாலும் "என்னப்பு சுகமா இருக்கிறீர்களா? படிப்பு வேலை எப்படி..?" என சகலத்தையும் நம்மிடம் நேசத்துடன் விசாரிப்பார்கள். அண்டை கிராமங்களுக்கு போனாலும் நட்புடன் பேசும் கிராமத்திய வாழ்வும், வழக்கமும்..!

மதுரை வந்தபோது, இம்மாதிரியான அக்கரையான விசாரிப்புகள் குறைந்து, தெரியாத முகமென்றாலும், ஓரளவு சிநேகத்துடன் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் அல்லது வழி காட்டுவார்கள்.

ஆனால் 70களின் இறுதியில் சென்னைக்கு வந்தபோது, அப்பெரிய நகரத்தை முதன் முதலில் பார்த்து பிரமித்துப்போனேன்.. பலதரப்பட்ட கலவை முகச் சாயல்கள்.. யார், எப்படி, எந்த மொழி என தெரியாத தடுமாற்றம்.

சாலையில் செல்வோரிடம் ஏதாவது கேட்டால், உடனே பதில் வராது. ஏற இறங்க பார்த்துவிட்டு, விட்டேத்தியாக பதில் வரும்.. அல்லது "தெரியாது சார்.." என முடித்துவிடுவார்கள்.

முதலில் இவர்களின் பேசுமுறை, தெரியாதவர்களிடம் சாக்கிரதையாக பேசும்/பழகும் விதம் அந்நியமாக தெரிந்தாலும், பரபரப்பான எந்திர வாழ்க்கை, ஏமாற்றுதல், திருட்டு பயம் போன்றவற்றால் அனைவரும் எச்சரிக்கையுடன் பழகுவது பாதுகாப்பானது என்ற அவர்களின் அணுகுமுறையை நாளடைவில் அனுபவத்தில் யாரும் உணர்வர்.

நிற்க.

இலங்கையிலிருந்து வந்துள்ள இந்த தம்பி, வெள்ளேந்தியாக சென்னை மக்களிடம், அதுவும் செளகார் பேட்டையில்(இது பெரும்பாலும் வட இந்தியர்களின் வியாபார பகுதி, இந்திதான் இங்கே கோலோச்சும், தமிழிலில் அரைகுறையாக பேசுவார்கள்) பேச எத்தனித்தால், எப்படி சிநேகமான முறையில் பதில் வரும்..? (தெருவோர கடை வைத்திருக்கும் சில கடைநிலை தமிழ் தொழிலாளிகளை தவிர.)

வேடிக்கை..!

இப்பகுதிக்கு பல வருடங்களாக சென்று வந்துள்ள அனுபவத்தில் எழுதுகிறேன். (மின்ட் தெரு, கோவிந்தப்பன் தெரு, பிராட்வே, ஏழு கிணறு, தம்பு தெரு இன்ன பிற..)

எல்லா இடமும் மக்களால் நிரம்பி வழிகின்றது.
வாகன இரைச்சலும், ஹோர்ன் சத்தமும்…. மிக மிக அதிகம்.
வீதி வியாபாரிகள், மிக நட்பாக கதைக்கின்றார்கள்.
பகிர்விற்கு நன்றி வன்னியன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கடை காவல் நிலையத்திலிருந்து தேவராஜ முதலி தெரு, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு போன்ற தெருக்களில் மக்கள் நெரிசல் மிக அதிகமாக இருக்கும்.

இங்கிருக்கும் கிளை தெருக்களான காசி செட்டி தெருவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கிவிட்டு, வரும்வழியில் அகர்வால் பவனின் ரசமலாய் வாங்கி சாப்பிட்டுவிட்டு அப்படியே கந்தசாமி கோவிலுக்கு சென்று வணங்கி வருவதும் உண்டு.  

d527e7e661f5d54c2cdde98de408a7e3.jpg    AF1QipP2u0VsSzIIXbg6VOJ3S-dEygePaWwffBheUHqG=w1080-k-no

Untitled.jpg

இந்த ரசமலாய் என்பது திரட்டுப்பாலுடன் பாலாடை கட்டிகள், மசாலா பொருட்களை சேர்த்து சுண்ட காய்ச்சிவிட்டு, பாதாம், குங்கும பூ தூவி, சிறு மண்பானைகளில் குளிரவைத்து கொடுப்பார்கள். அகர்வால் பவனில் இவ்வகை இனிப்புகள் மிக நன்றாக இருக்கும்.

இப்பகுதிகளில் மொத்த விலைக்கடைகள் அதிகமாக இருப்பதால், இந்த மீன் பாடி வண்டிகள், குட்டி யானை வாகனங்கள் அதிகமாக ஓடும். தேர்ந்தெடுக்க வகை வகையான பொருட்கள், அவைகளின் விலையும் கொஞ்சம் மலிவாக கிட்டும்.

இரு சக்கர வாகனத்தில் செல்வது மிகக் கடினம். சில தெருக்கள் ஒரு வழிப்பாதையாகவும் இருக்கும். மாலைவேளைகளில் நடந்து செல்லவே மிக நெருக்கடியாக இருக்கும். பெரும்பாலும் மார்வாடி (ராஜஸ்தான், குஜராத்திகள்)கடைகள்தான்.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எல்லா இடமும் மக்களால் நிரம்பி வழிகின்றது.
வாகன இரைச்சலும், ஹோர்ன் சத்தமும்…. மிக மிக அதிகம்.
வீதி வியாபாரிகள், மிக நட்பாக கதைக்கின்றார்கள்..

இதே வீதி வியாபாரிகளை, வாகனத்தில் செல்லும்போது கவனக்குறைவால் இடித்துவிட்டால் போதும், சென்னை தமிழில் வைவார்கள்.  😄

'பேமானி, கசுமாலம், ஒன் மூஞ்சியில கையை வைக்க..! வீட்ல சொல்லிக்கினு வந்துட்டையா..?' என ஒருமையில் விளித்து திட்டும் வசவுகளை காது கொடுத்து கேட்க இயலாது. 🤭

'சென்னை தமிழ்' புரிய கற்றுக்கொண்டது, இம்மாதிரி மக்கள் பேசும்போது கேட்டு பழகியதுதான்.

Edited by ராசவன்னியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.