Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியை சந்தித்தது சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்டக்குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டக்குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நிதி நெருக்கடிக்கு உரியவாறான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்திய ஆரம்பகட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், இதன் தொடர்ச்சியாக இரண்டாம் சுற்றுக்கலந்துரையாடல்களை நாளைய தினம் (26) நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

 

வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி செயற்திட்டம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான முதற்கட்ட நகர்வாக ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் பீற்றர் ப்ரூபர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு நேற்றைய தினம் (24) நாட்டை வந்தடைந்துள்ளது.

DSC_6961.jpg

அதன்படி இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவையும் சந்தித்த அக்குழு, நாட்டின் நிதி உறுதிப்பாடு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள், பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

 அதேவேளை மத்திய வங்கியின் உயரதிகாரிகள் உள்ளடங்கலாக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ள இக்குழு, நாட்டின் வணிகத்துறைசார் முக்கிய தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது. 

எதிர்வரும் 31 ஆம் திகதி வரையான 8 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்டக்குழுவானது, தமது உயர்மட்ட சந்திப்புக்களின் முடிவில் இருதரப்பிற்கும் இடையில் ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை அடைந்துகொள்வது குறித்து அறிக்கையொன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 இது இவ்வாறிருக்க சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அதனை அடிப்படையாகக்கொண்டு கடன் மீள்செலுத்துகை விடயத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளியகக் கடன் வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து இவ்வருட இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவி செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதியை சந்தித்தது சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்டக்குழு - மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளரும் பங்கேற்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து பேச்சு

30 AUG, 2022 | 02:40 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து  சர்வதேச நாணய நிதியக்குழுவினருக்கும் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் நேற்று செவ்வாய்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஏதுவாய் அமைந்த காரணிகள் , அவற்றிலிருந்து மீள்வதற்கு தம்மால் முன்வைக்கப்படும் யோசனைகள் என்பன குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கு தெளிவுபடுத்தினார்.

பொருளாதாரம் மற்றும் நிதி மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தூதுக்குழு கடந்த 24 ஆம் திகதி நாட்டுக்கு வியஜம் செய்தது. 

302304108_398116802433499_68443750384126

இக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை மீண்டும் ஜனாதிபதியுடன் நாணய நிதியக் குழுவினர் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இதன் போது நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பான தமது மதிப்பாய்வுகள் தொடர்பில் அக்குழுவினர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.

குறித்த தூதுக்குழுவிற்கு பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டுவதை நோக்கி முன்னேறுவதே இதன் நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/134675

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.