Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடிகை தமிதாவை... விடுவிக்க,  நடவடிக்கை எடுக்கவும் – சஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை தமிதாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் – சஜித்

நடிகை தமிதாவை... விடுவிக்க,  நடவடிக்கை எடுக்கவும் – சஜித்.

கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1298157

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை தமிதா கைது – சஜித்திற்கும், நாமலுக்கும் இடையில் கருத்து மோதல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் நடிகை தமிதா அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டமை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும் நடிகை தமிதா அபேரத்னவை தடுத்து வைப்பதைத் தவிர்க்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் இவ்வாறான அடக்குமுறைகள் தொடரும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வாறு முன் வந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் தற்போதைய சட்டங்களின்படி குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு இணங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதையடுத்து, நாமல் ராஜபக்ஷவுக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், பொதுமக்களின் பிரதிநிதித்துவத்தை ராஜபக்ஷ குடும்பத்தாலோ அல்லது  நாமல் ராஜபக்ஷவோ தீர்மானிக்க முடியாது என தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1298234

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமித்தா அபேரத்னவிற்கு, விளக்கமறியல்.

போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமித்தா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று பத்தரமுல்லை தியத்த உயனேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது தமித்தா அபேரத்ன, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

https://athavannews.com/2022/1298248

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

இதன்போதே அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

என்ன சிறியர் நான் பிணையில் எடுக்கவா இவவை😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன சிறியர் நான் பிணையில் எடுக்கவா இவவை😜

ராஜா... எதுக்கும், வீட்டிலை சொல்லிப் போட்டு, எடுங்கோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன சிறியர் நான் பிணையில் எடுக்கவா இவவை😜

எடுத்திட்டு வெளிநாடு போகப்போறாரோ?! (வீட்ட போகேலா தானே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன சிறியர் நான் பிணையில் எடுக்கவா இவவை😜

பிணை எடுத்து????????:cool:
என்ன கதிர்காம யாத்திரை போகவா?😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ராஜா... எதுக்கும், வீட்டிலை சொல்லிப் போட்டு, எடுங்கோ. 😂

சொன்னா பாய் தலகாணி எல்லாத்தையும் கட்டிக்கொடுத்து துரத்தி விடுவா மனிசிக்காரி

 

4 hours ago, ஏராளன் said:

எடுத்திட்டு வெளிநாடு போகப்போறாரோ?! (வீட்ட போகேலா தானே)

பாஸ்போட்  எடுத்தாச்சு  விரைவில இலங்கையை விட்டு செல்ல இருக்கிறன்  ஆனால் இந்த அலுவலுக்கெல்லாம் செலவழிக்க ஏலாது கண்டியளோ 

 

1 hour ago, குமாரசாமி said:

பிணை எடுத்து????????:cool:
என்ன கதிர்காம யாத்திரை போகவா?😎

ம் கூம் இருந்தாலும் சாமிஜீ வாழ்க்கையில் சகஜம் தானே நித்தியானந்தம் போல

  • கருத்துக்கள உறவுகள்

"எங்கள் போராட்டம் ஓயாது" - இலங்கை நடிகை தமித்தா கைதுக்கு முன்பு பேட்டி

16 நிமிடங்களுக்கு முன்னர்
 

தமித்தா அபேரத்ன

இலங்கையின் சிங்கள சினிமா நடிகையும் 'கோட்டா கோ கம' மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான தமித்தா அபேரத்னவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது, வலுக்கட்டாயமாக ஜனாதிபதி செயலகத்தினுள் நுழைந்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் தமித்தா அபேரத்ன செப்டம்பர் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து செப்டம்பர் 8ஆம் தேதி கோட்டே நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து தமித்தாவை செப்டம்பர் 14ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் தமித்தா கலந்து கொண்டிருந்தார்.

அப்போது ஊடகங்கள் முன்பாக பேசிய தமித்தா, அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் மிக கடுமையாகச் சாடினார்.

 

"மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருட்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு பால்பெட்டி வாங்குவதற்குக் கூட, தாய்மார்களிடம் பணமில்லை. அங்குள்ளவர்களுக்கு (ஆட்சியில் இருப்பவர்கள்) மக்களின் துயரங்கள் புரிவதில்லை" என்று தமித்தா கூறினார்.

"இவர்கள் நினைக்கிறார்கள் போராட்டம் முடிந்து விட்டது என்று. காலிமுகத்திடலுடன் போராட்டத்தைச் மட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது அப்படியல்ல என்று நாம் காட்டினோம். தங்கள் கதிரைகளையும் பதவிகளையும் பாதுகாப்பதவர்கள்தான் இவர்கள். இவர்களே இன்று அரசியலில் இருக்கின்றனர் என்று தமித்தா சாடினார்.

இதற்குப் பின்னர் மக்கள் - இந்தக் கட்சிகளுக்கு நிறங்களுக்கு அடிமையாகாமல் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக, நாங்கள் வென்றெடுத்தவற்றைப் பாதுகாப்பதற்காக எழுச்சியடையாது விட்டால், இந்தக் கெட்டவர்கள் மறுபடியும் வந்து அமர்ந்து விடுவார்கள். தயவு செய்து அதற்கு இடமளிக்க வேண்டாம். உங்களுக்கு நடக்கும் அத்தனை அநியாயங்கள் தொடர்பிலும் வெளியே வந்து பேசுங்கள்" எனவும் அவர் கூறினார்.

"இங்கு கூடியிருக்கும் எங்களை விடவும் மூன்று நான்கு மடங்கு அதிகமான பொலிஸார் இங்கே வந்துள்ளனர். போராட்டத்துக்கு அவ்வளவு பயமா? அப்படிப் பயப்படத்தான் வேண்டும். ஏனென்றால் திருடர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இவ்வாறு வந்துள்ளார்கள். அப்பாவி போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்காக இவர்கள் இங்கே வரவில்லை" எனக் கூறிய அவர், "இந்தப் போராட்டம் வெற்றியடையும் வரை நாங்கள் திரும்பப் போவதில்லை" என்றார்.

இதன் பின்னரே நடிகை தமித்தா கைது செய்யப்பட்டார்.

அரசியல் தலைவர்கள் கருத்து

இதேவேளை தமித்தா அபேரத்ன கைதுசெய்யப்பட்டமையானது அரச மிலேச்சத்தனம் என்றும் அரச பயங்கரவாதம் எனவும் நாடாளுமன்றில் இன்று தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனை நிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

 

சஜித் பிரேமதாஸ

 

படக்குறிப்பு,

சஜித் பிரேமதாஸ, இலங்கை எதிர்கட்சித் தலைவர்

கைது செய்யப்பட்டிருந்த தமித்தாவை பார்ப்பதற்காக கோட்டே பொலிஸ் நிலையத்துக்கு சஜித் சென்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நடிகை தமித்தாவை இலக்கு வைப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு நாடாளுமன்றில் வேண்டிக்கொண்ட அவர்; "தமித்தா அபேரத்ன எந்தவித சட்டவிரோத செயலையும் செய்யவில்லை, பொது சொத்துக்களையோ தனியார் சொத்துகளையோ சேதப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடவில்லை" என அவர் கூறினார்.

பேச்சுச் சுதந்திரம், எதிர்ப்பு வெளியிடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் போன்ற மனித உரிமைகளையே தமித்தா பயன்படுத்தினார் என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்; அவரை விடுதலை செய்வதற்கு ஆவண செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும் கலைஞர்கள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இந்த அரசாங்கத்தின் கண்களில் காட்ட முடியாதுள்ளது எனவும் சஜித் பிரேமதாஸ இதன்போது கேலியாகக் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்கத்திலிருந்து கூச்சல் சத்தம் எழுந்தது.

அன்போது பேசிய சஜித் பிரேமதாஸ, "நாமல் ராஜபக்ஷ இங்கு கூச்சலிடுகின்றார். தமித்தாவை பற்றித்தான் நான் இங்கு பேசினேன்; நீங்கள் ஏன் கூச்சலிடுகிறீர்கள்" என கேள்வியெழுப்பினார்.

தமித்தா அபேரத்னவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதற்கு தனக்கு உரிமை உள்ளது எனக் கூறிய சஜித் பிரேமதாஸ, இந்தப் பிரச்சினைகளை ஜெனீவாவில் அல்ல; இந்த நாட்டுக்குள்ளேயே தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, தமித்தாவை பொலிஸ் நிலையத்துக்கு செப்டம்பர் 9ஆம் தேதியன்று வருமாறு பொலிஸார் அழைத்திருந்தாகவும், தியத்த உயன பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமித்தா கலந்து கொண்டமையை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரின் உரையில் தெரிவித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னணிச் செயற்பாட்டாளர்கள் பலர், கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-62841280

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.