Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச ஊழியர்களை போன்று அரசியல்வாதிகளும் 60 வயதுடன் ஓய்வு பெற வேண்டும் - துமிந்த திஸாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்களை போன்று அரசியல்வாதிகளும் 60 வயதுடன் ஓய்வு பெற வேண்டும் - துமிந்த திஸாநாயக்க

By VISHNU

10 SEP, 2022 | 03:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச ஊழியர்கள் 60 வயதுடன் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை போல் அரசியல்வாதிகளும் 60 வயதுடன் அரசியலில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும்.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பிரதேச சபையில் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலங்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச போக்குவரத்து சேவை நட்டமடைவத்கு அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும்.அரசியல்வாதிகள் தங்களி;ன் சுய தேவைகளுக்காக அரச நிறுவனங்களை நட்டமடைய செய்துள்ளனர். அரசியல் நியமனங்களினால் இன்று அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.தற்போதைய நிலைக்கமைய அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

ஆனால் தனியார் மயப்படுத்த கூடாது.அரச நிறுவனங்கள் நட்டமடைவதற்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும்,அரசியல் கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டும்.

அரச ஊழியர்கள் 60 வயதுடன் ஓய்வு பெறுவதை போன்று அரசியல்வாதிகளும் 60 வயதை அடைந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற வேண்டும்.

60 வயதிற்கு பிறகு அரச சேவையாளர்களால் சேவையாற்ற முடியாது என்று குறிப்பிடப்படுகிறது.60 வயதிற்கு பிறகும் அரசியல்வாதிகளினாலும் சேவையாற்ற முடியாது.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய தேவைக்காகவே அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகிறார்கள்.அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அரசியல்வாதிகள் முதலில் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/135428

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

60 வயதிற்கு பிறகு அரச சேவையாளர்களால் சேவையாற்ற முடியாது என்று குறிப்பிடப்படுகிறது.60 வயதிற்கு பிறகும் அரசியல்வாதிகளினாலும் சேவையாற்ற முடியாது.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய தேவைக்காகவே அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகிறார்கள்.அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அரசியல்வாதிகள் முதலில் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என்றார்.

இது நிஞாயமான கருத்து, ஏற்று செயற்படுத்தப்பட வேண்டியது. நிஞாயமாய் சிந்திக்கிறவர்களும் உண்டு சில விடயங்களில்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இது நிஞாயமான கருத்து, ஏற்று செயற்படுத்தப்பட வேண்டியது. நிஞாயமாய் சிந்திக்கிறவர்களும் உண்டு சில விடயங்களில்.

உறுதியாக நின்ற சாத்தானை. உறுக்குலைய வைத்து விட்டான் துமிந்த  ...

அண்ணை நீங்கள் கட்சி மாறி விட்டீங்களா?.    🤣😂. அப்படி செய்தால் இலங்கை தமிழ் மக்களுக்கு தலைவர்கள் இல்லாமல் போய்விடும் 😁

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கதிரைக்கு பாரமாய் இருந்து தூங்குவதை விட ,வீட்டில போய் ஓய்வெடுப்பது நலமோ இல்லையோ? மக்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாது, சொன்னாலும் கேட்கிறதற்கு அவர்களுக்கு நேரமில்லை, நாட்டில எப்போ விடியுது, இருளுது என்று ஒன்றும் தெரியாது, மக்கள் பெயரால் தங்கள் கருத்துக்களை திணித்து சிங்களத்துக்கு தாளம் போடுவதற்கு தலைவர்கள் எதற்கு? இப்போ மக்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே கையாள ஆரம்பித்து விட்டார்கள், இவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு இப்போ மக்கள் முன்வந்தாற்தானுண்டு! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.