Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, ரஞ்சித் said:

நுணா, குமாரசாமி, தமிழ்சிறி! உங்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அல்லற்படும் மக்களின் அவலங்கள் குறித்தும் ஒருகணம் சிந்தியுங்கள். ஏனென்றால், நாங்களும் ஒரு காலத்தில் இதே அவலங்களை எதிர்கொண்டவர்களே!

நாங்களும் உங்களைப்போல்,மற்றவர்களைப்போல்  சாதாரண மனிதர்களே.......

என்னால் உக்ரேனுக்காக பரிதாபப்பட முடியவில்லை அவ்வளவுதான். 

மனித இழப்புகள் எனக்கும் ஏற்புடையதல்ல. உக்ரேனுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கும்  ஜனநாயக/மனிதாபிமான நாடுகளுக்கு இல்லாத உயிர் இழப்பு அக்கறை எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கும்  ஜனநாயக/மனிதாபிமான நாடுகளுக்கு இல்லாத உயிர் இழப்பு அக்கறை எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

சொந்த இன மக்களின் இழப்புக்களைக் கூட தமது பிரச்சார உத்திகளுக்காகவும், தமது தரப்பை நியாயப்படுத்தவும் பாவிக்கும் காலத்தில் வாழ்கிறோம். அப்படியிருக்கையில், உக்ரேன் நாட்டின் மக்களுக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத மேற்குலகோ அல்லது ரஸ்ஸியாவோ அம்மக்கள் மீது இரக்கப்படும் என்று நான் சிறிதும் நம்பவில்லை. அதுமட்டுமல்லாமல், உக்ரேனில் நிகழ்த்தப்பட்டுவரும் அழிவுகளை தனது பிரச்சார உத்திகளுக்காகவும் உக்ரேன் அரசு பாவிக்கும் என்பதும் உண்மையே.

ஆகவே, மேற்குலகிற்கோ, ரஸ்ஸியாவுக்கோ, உக்ரேன் அரசுக்கோ போரில் அகப்பட்டிருக்கும் உக்ரேன் அப்பாவிகள் தொடர்பான  மனிதவுரிமை மீதோ மனிதாபிமானம் மீதோ அக்கறை வந்தபின்னர்தான் அல்லற்படும் அந்த மக்கள் கூட்டம் மீது எமக்கு அக்கறை வருமென்றால், அது சரியாகப் படவில்லை. ஏனென்றால், அம்மக்கள் மீது இவர்களில் எவருக்குமே உண்மையான அக்கறை இருக்குமென்று நான் நம்பவில்லை. 

எம் தொடர்பாக உக்ரேன் அரசுகள் செய்த முன்னைய தவறுகளுக்காக, அத்தவறுகளுடன் சிறிதும் சம்பந்தப்படாத அப்பாவி உக்ரேனியர்கள் கொல்லப்படவேண்டும் என்று நாம் விரும்புவது நியாயமானதா? அப்படியானால் சிங்களப் பேரினவாதம் செய்த தவறுகளுக்காக சிங்கள மக்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது சரியாகிவிடுமே? தலைவர்கூட ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர பலவிடங்களில் சிங்களப் பொதுமக்கள் எமது இலக்குகள் அல்ல என்று சொல்லியிருக்கிறாரே? 

எதிரியின் இன மக்களையே இலக்குகளாக கருதக் கூடாதென்று போராடிய இனம் நாம், இன்று எதிரிக்கு உதவிய நாடொன்றின் இனமக்கள் அழிக்கப்படுவது கண்டு இன்புறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதைவிட வேறு என்ன சொல்ல? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

எதிரியின் இன மக்களையே இலக்குகளாக கருதக் கூடாதென்று போராடிய இனம் நாம், இன்று எதிரிக்கு உதவிய நாடொன்றின் இனமக்கள் அழிக்கப்படுவது கண்டு இன்புறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதைவிட வேறு என்ன சொல்ல? 

இலங்கையில்  உள்ள தமிழர்களுக்கு எதிராக உக்ரேன் முன்பு செயல்பட்டதா  என்பது அப்பாவி உக்ரேனியர்களுக்கு தெரியுமா என்பதற்கு அப்பால் உக்ரேன் இலங்கை அரசுக்கு உதவிய போது ரஷ்ய ஆதரவு அரசாகவே உக்ரேன் இருந்தது. கோஷான் சே 👍 இதை இங்கே விளங்கபடுத்தி இருந்தார்.

உக்ரேன் இனமக்கள்  யாரால் அழிக்கப்படுவது கண்டு இன்புறுகிறார்கள்
இலங்கை அரசுக்கு மிகவும் பக்கபலமாக இருந்துவரும்,இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு  cent க்கும் பயனற்ற,  தாங்களே வாழ தகுதியற்ற நாடு என்று ஒதுக்கிவைத்த ரஷ்யாவுக்காக.
சீனா கூட இலங்கையில் உள்ள  தமிழர்களுக்கு உதவுகிறது.

ரஷ்யா இராணுவம் கிராமம் கிராமமாக உக்ரேனில் இழந்து வருவதால், ரஷ்ய இராணுவத்தின் உயிரிழப்புகளால் புதின் தனது ஆக்ரோஷமான பேச்சுக்களால் கட்டிஅமைத்த பொய்கள் ரஷ்யாவில் தெரிய வர தொடங்கிவிட்டன.தேசியவாதிகளே புரினை பதவி விலக சொல்லி கேட்க தொடங்கிவிட்டனர்.மேற்குலகில் வாழும் இலங்கை தமிழர்களின் உறுதியான ஆதரவு அவருக்கு  உள்ளது.

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ரஞ்சித் said:

சொந்த இன மக்களின் இழப்புக்களைக் கூட தமது பிரச்சார உத்திகளுக்காகவும், தமது தரப்பை நியாயப்படுத்தவும் பாவிக்கும் காலத்தில் வாழ்கிறோம். அப்படியிருக்கையில், உக்ரேன் நாட்டின் மக்களுக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத மேற்குலகோ அல்லது ரஸ்ஸியாவோ அம்மக்கள் மீது இரக்கப்படும் என்று நான் சிறிதும் நம்பவில்லை. அதுமட்டுமல்லாமல், உக்ரேனில் நிகழ்த்தப்பட்டுவரும் அழிவுகளை தனது பிரச்சார உத்திகளுக்காகவும் உக்ரேன் அரசு பாவிக்கும் என்பதும் உண்மையே.

ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக எமக்குள்ள நியாயப்படுத்தல்கள் போல் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் உண்டு.மனித இழப்புகள்  தொடர்பான பரிதாப அலைகள்  அவரவர் மன நிலையை பொறுத்தது. 
எனக்கு ஈராக்,லிபியா,சிரியா,குர்திஷ் மக்கள் இழப்பில் வரும் அனுதாபமும்,வருத்தமும் உக்ரேன் அழிவில் வரவில்லை...வரப்போவதுமில்லை. மாறாக மேற்குலகின் மீதான வக்கிரமே அதிகரிக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ரஞ்சித் said:

எம் தொடர்பாக உக்ரேன் அரசுகள் செய்த முன்னைய தவறுகளுக்காக, அத்தவறுகளுடன் சிறிதும் சம்பந்தப்படாத அப்பாவி உக்ரேனியர்கள் கொல்லப்படவேண்டும் என்று நாம் விரும்புவது நியாயமானதா? அப்படியானால் சிங்களப் பேரினவாதம் செய்த தவறுகளுக்காக சிங்கள மக்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது சரியாகிவிடுமே? தலைவர்கூட ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர பலவிடங்களில் சிங்களப் பொதுமக்கள் எமது இலக்குகள் அல்ல என்று சொல்லியிருக்கிறாரே? 

அதே போல் என் இனம் அழியும் போது ஐயோ என்று சொல்லாதவன்  அவன் இனம் அழியும் போது நான் ஏன் பரிதாபப்படவேண்டும்?

எம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை புலிகள் கொல்லப்பட்டார்கள் என கணக்கு காட்டும் மேற்குலகிற்கும் தாங்கள் சார்ந்தோருக்கும் உக்ரேன் மனித இழப்பு மட்டும் அப்பாவியாக தெரிகின்றதாக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ரஞ்சித் said:

எதிரியின் இன மக்களையே இலக்குகளாக கருதக் கூடாதென்று போராடிய இனம் நாம், இன்று எதிரிக்கு உதவிய நாடொன்றின் இனமக்கள் அழிக்கப்படுவது கண்டு இன்புறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதைவிட வேறு என்ன சொல்ல? 

வேறு எந்த மொழிகளிலும் இல்லாத பெரிமையாக தமிழ் மத சார்பான கதைகள் தொடக்கம் அரச வரலாறுகள் ஈறாக வள்ளுவர்,ஔவையார்,பாரதியார் சிந்தனைத்துளிகள் என  அடுத்த உயிருக்கு பங்கம் விளைவிக்காதே என படித்து வளர்ந்தவர்கள் நாங்கள். அப்படியான ஒரு தமிழ் இனத்தை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டது யார்???

அழிவுகளுடன் பல சந்ததிகளை கடந்துவிட்டோம்.கண்டவனுக்கெல்லாம் பரிதாபப்பட்டு பலனில்லை. :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.