Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடல்சார் வர்த்தகத்தின் மையமாக இலங்கையை மாற்றுவோம் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல்சார் வர்த்தகத்தின் மையமாக இலங்கையை மாற்றுவோம் - ஜனாதிபதி

15 Sep, 2022 | 10:50 AM

image

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம்  பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக  நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

NDC-06.jpg

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு  விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன்,  ஜனாதிபதி பாதுகாப்புக் கல்லூரியில் கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

NDC-02.jpg

பின்னர் சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவு குறிப்பொன்றையும் இட்டார்.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டில் சிறந்ததொரு பாதுகாப்பு முறைமை இல்லை என்றால் எமது எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் உலக மற்றும் பூகோள அரசியலின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் அது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.

முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவிகளை வகிக்கும் நிறைவேற்று  அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் குறித்த கல்வியை வழங்கும் நோக்கத்துடன் நாட்டில் நிறுவப்பட்ட முதலாவது ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதுவாகும்.

NDC-01-1.jpg

தேசிய மட்டத் தேவைகளை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு, இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கை ஆகிய துறைகளில் மூலோபாய சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவது இந்த தேசிய பாதுகாப்புக் கல்லூரியின்  நோக்கமாகும்.

2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புக்  கல்லூரியின்      முதலாவது பட்டமளிப்பு விழா இதுவாகும்,  மேலும் இந்த நிறுவனத்தின் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 31 பேருக்கு ஜனாதிபதி அவர்கள் பட்டங்களை வழங்கிவைத்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்நாயக்க, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இராணுவ நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சஞ்சீவனி வீரசேகர ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/135680

  • கருத்துக்கள உறவுகள்

கூரை ஏறி,  கோழி பிடிக்கத் தெரியாதவன், 
வானம் ஏறி, வைகுண்டம் போக ஆசைப் பட்டானாம்.
முதலில்… உள்ளூர் பிரச்சினைகளை முடியுங்கப்பு.
நாலு எண்ணைக் கப்பல், துறைமுகத்திலை காசு கொடுக்காமல் காவல் நிக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

கடல்சார் வர்த்தகத்தின் மையமாக இலங்கையை மாற்றுவோம் - ஜனாதிபதி

அணிலார் முந்தி சிறிலங்காவ சிங்கப்பூரா மாத்துவம் எண்டு சொன்னத இப்ப மாத்தி சொல்லுறார் 🤪

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பொருளாதார மையமாக உள்ள அமெரிக்கா அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஐரோப்பா இவற்றிற்கு மூலப்பொருள்களை வழங்கும் ஆசியா, உலகத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு பொருள்களை கொண்டு செல்லும் போது ஆசியாவில் முக்கிய வழங்கல் பாதையாக உள்ள சிங்கபூரினால் தற்போது முழுமையான தங்கு தடையின்றிய வழங்கலை செய்ய முடியவில்லை.

இலங்கை சிங்கப்பூரினை விட கேந்திர முக்கியத்துவமான நிலையில் உள்ளது, இலங்கையினூடாகவே ஆழ்கடல் கப்பல் போக்குவரத்தினை இந்தியா மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

இலங்கை தனது உள்நாட்டு கட்டமைப்பினை மேம்படுத்தினால் இலங்கை ஆசிய பகுதியில் மிக முக்கிய பொருளாதார வழங்கல் கேந்திர மையமாக வளர வாய்ப்புள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.