Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் : காரணத்தை கூறுகிறது ரயில் நிலைய அதிபர் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் : காரணத்தை கூறுகிறது ரயில் நிலைய அதிபர் சங்கம்

By T YUWARAJ

20 SEP, 2022 | 10:01 PM
image

(எம்.மனோசித்ரா)

 

ரயில்களை முறையாக பராமறிப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாடு காரணமாக பெருமளவான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இவை தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் என்று ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில் பல தொழிநுட்ப கோளாரு காரணமாக அடிக்கடி இரத்து செய்யப்படுகின்றன.

கடந்த காலங்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பொருத்தமற்ற ரயில்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சில ரயில் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இந்த தரமற்ற ரயில் பெட்களை விட 1980 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட வண்டிகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்றவையாக உள்ளன. ஆனால் இவை வண்டிகள் தற்போது சேவையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதோடு , பராமரிப்பின்றியும் காணப்படுகின்றன.

மேலும், ரயில்களுக்கு தேவையான பல்வேறு உதிரிபாகங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிடுவார்களா என்பதில் சிக்கல் நிலைமையே காணப்படுகிறது.

ரயில் உதிரிபாகங்கள் இல்லாததால், பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன. இதனால் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ரயில் சேவை துறையில் 19,382 பணியாளர்கள் காணப்பட வேண்டும் என்ற போதிலும் , தற்போது 10,500 ஊழியர்கள் மாத்திரமே உள்ளனர். ரயில் திணைக்களத்தின் சில உப திணைக்களங்களில் ஊழியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இது தொடர்பிலும் உரிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

இந்த நெருக்கடி நிலை தொடரும் பட்சத்தில் மற்றும் ரயில்களின் முறையான பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் உடனடியாக கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும் பல ரயில்கள் தடம் புரளும்.

எனவே பல ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும். எனவே இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார். 

https://www.virakesari.lk/article/136057

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டொலர் பிரச்சினையால் 11 மாதங்களில் தடம்புரண்ட 44 ரயில்கள் !

18 NOV, 2022 | 05:29 PM
image

 

இந்த ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில்  44 ரயில்கள்  தடம் புரண்டுள்ளன. 

நேற்றைய தினம் (17) மட்டும்  இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில ரயில் பாதைகள் மற்றும் ரயில்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இதற்குக் காரணம் நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக ரயில்வே உதிரிப்பாகங்கள் மற்றும் ரயில்வேக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/140486

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.