Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருக்கோணேஸ்வரர் ஆலயம்,  தொல்லியல் என்ற பெயரில்... ஆக்கிரமிக்கப்படவில்லை – அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படவில்லை – அரசாங்கம்!

திருக்கோணேஸ்வரர் ஆலயம்,  தொல்லியல் என்ற பெயரில்... ஆக்கிரமிக்கப்படவில்லை – அரசாங்கம்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை குறிப்பிட்டார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத்தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தார்.

இதன்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை கொண்டிருந்த திருக்கோணேஸ்வரம் இன்று 18 ஏக்கர் காணியை மாத்திரமே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காசிக்கும், திருப்பதிக்கும் செல்கின்ற அரசியல்வாதிகள் அதே சிவபெருமான் வீற்றிருக்கும் திருகோணேஸ்வர காணியை அபகரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த தெய்வ நிந்தனையே நாடு வீழ்ச்சி நிலைக்கு செல்கின்றமைக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், விதுர விக்கிரமநாயக்க, நாடு இன்னும் பிரிந்து செயற்படுவதாக குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர் என்றும் ஒவ்வொருவரும் வரலாறுகளை தெரிவிக்கின்றனர் என்றும் எனினும் வரலாறுகளை பற்றி சிந்திக்காமல், நடைமுறையை பற்றி சிந்திக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அகழ்வாராட்சி விஞ்ஞானமாகும் என்றும் எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக விரைவில் திருகோணமலைக்குச் சென்று ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1300707

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரத்திற்கு தீர்வுகாண விரைவில் அங்கு செல்வேன் - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

By T Yuwaraj

23 Sep, 2022 | 06:26 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரத்திற்கு தீர்வு காண வெகுவிரைவில் அங்கு செல்வேன். நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் மதம்,கலாசாரம் மற்றும் பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு என புத்தசாசனம் மற்றும் மத உரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற திருகோணேச்சரம் ஆலய நில ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டு தொல்லியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.வரலாற்று ரீதியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் போது ஆய்வுகள் ஊடாகவே தீர்வு காண முடியும்.

ஆய்வுகளை அடிப்படையாக்க கொண்டு கிடைக்கப்பெறும் தீர்வுகளை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.தொல்லியல் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சட்டத்திற்கு அமைய செயற்படாவிடின் இயற்றப்பட்ட சட்டம் எதற்கு என்ற கேள்வி தோற்றம் பெறும்.

வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தொல்லியல் தொடர்பில் இரு தரப்பினரும் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக்கொள்கிறாரகள்.மதம் மற்றும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் எவ்வளவு காலம் முரண்பட்டுக் கொண்டிருப்பது.

கோணேச்சரம் ஆலயம் தொடர்பில் இரு தரப்பினராலும் பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.வெகுவிரைவில் திருகோணேச்சரம் ஆலயத்திற்கு செல்வேன் ஆலயத்தின் நிர்வாக தரப்புடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு முரண்பாடற்ற தீர்வை பெற்றுக்ள முயற்சிப்பேன்.நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் மதம் மற்றும் கலாசார பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்க வேண்டியது எனது அமைச்சுசார் பொறுப்பாகும் என்றார்.
 

https://www.virakesari.lk/article/136232

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.