Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணம்

எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர்

நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் எமது நாடு எதிர்கொண்டுவரும் நெருக்கடி என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மனித உரிமைகள் குறித்து நாம் பின்பற்றுகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அதன் பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் நன்கு அறிவோம் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகள் பலரை விடுதலை செய்தார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எஞ்சியுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்வது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றை அமைச்சர் அலி சப்ரியும் ஜெனீவாவில் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பயங்கரவாதத்தடை சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியிலும் தற்போது சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்று, அதனை சட்டமாக்கும் நடவடிக்கைகள் நீதி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1303413

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

போன தடவை தமக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை பற்றி விளக்கம் அளிக்கப்போய், சஜித் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு அவரின் கணக்கின் முடிச்சு அவிட்டு நாவடங்கி அமர்ந்தவர்  இந்த தினேஷ் குணவர்தன. இவர்தான் போனமுறை ஜெனிவாவுக்கு போனவர் என நினைக்கிறன், அதனால் யதார்த்தத்தை நேரடியாக கண்டவர். அதனால் மாற்றி வாசிக்கிறார், இல்லையென்றால் மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டுமே!

11 hours ago, தமிழ் சிறி said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் எமது நாடு எதிர்கொண்டுவரும் நெருக்கடி என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டே ஒவ்வொருதடவையும் சலிக்காமல் சென்று தாம் உத்தமர்கள் என நிரூபிக்க பார்க்கிறார்கள் குசும்பன்கள்!

11 hours ago, தமிழ் சிறி said:

ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கேதான் நிற்கிறதுசிங்களத்தின் ராஜதந்திரம். அவர்களின் பெருந்தன்மையை இலங்கை பயன்படுத்திக்கொள்கிறதா? அல்லது தங்களின்  தேவையை நிறைவு  செய்வதற்காக இலங்கையின் கையறு நிலையை இந்த நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றனவா? காலம் போகத்தெரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.