Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாமரைக் கோபுரத்தில் இருந்து Bungee jumping விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக் கோபுரத்தில் இருந்து Bungee jumping விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்து!

தாமரைக் கோபுரத்தில் இருந்து Bungee jumping விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்து!

தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் (Bungee jumping) என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும்  சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ என்ற நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி, தாமரை கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை கவர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

350 மீட்டர் உயரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பங்கி ஜம்பிங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் இரவு நேரத்தில் மாத்திரம் 30-40 பங்கி ஜம்பிங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1303558

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக் கோபுரத்திலிருந்து பாய்ந்து சாகசம் செய்ய சந்தர்ப்பம்

By T. SARANYA

08 OCT, 2022 | 01:43 PM
image

தாமரைக் கோபுரம் சிங்கபூரில் உள்ள கோ பங்கி நிறுவனத்துடன் முதன்முறையாக காலில் கயறு கட்டிக் கொண்டு குதிக்கும் பங்கி ஜம்ப் சாகசத்தை (bungee jumping) ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த பங்கி ஜம்ப் என்ற சாகசம் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்வுள்ளது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘கோ பங்கி’ நிறுவனம் தற்போது ஜப்பான், சீனா, நேபாளம் ஆகிய மூன்று நாடுகளில் பங்கி ஜம்பிங் சாகசத்தை செயல்படுத்தி வருகிறது.

கோ பங்கி மற்றும் பங்கி லங்காவின்  பொது முகாமையாளர் டேவிட் ஹோரோடெஸ்னி, ஜப்பானில் 8 சாகச குதிப்பு தளங்கள் இருப்பதாகவும், ஜப்பானின் மிக உயரமான தளம் 216 மீற்றர் என்றும்  தெரிவித்தார். 

மேலும், சீனாவில் 260 மீற்றர் உயரமுள்ள பங்கி தளத்தைக் கொண்டுள்ளது, இது உலகின் மிக உயரமான கண்ணாடிப் பாலத்தில் இருந்து இயங்குகிறது.

கோ பங்கி நிறுவனம் வருடத்திற்கு 50,000 க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக குதிக்க வைக்கிறது. 

தாமரை கோபுரத்தில் தளத்தை அமைத்தவுடன் ஒரு நாளைக்கு 130 பேருக்கு சந்தர்ப்பம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் பகலில் 100 பேரையும் 30 பேரை  இரவு வேளையிலும் குதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரிய திட்டமாக இது அமையும் என டேவிட் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/137255

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.