Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டபாய ராஜபக்ஸவின் பயணத்தால் கடைகளினுள் வைத்து பூட்டப்பட்ட பொதுமக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டபாய ராஜபக்ஸவின் பயணத்தால் கடைகளினுள் வைத்து பூட்டப்பட்ட பொதுமக்கள்.

கொழும்பு ஆமர்வீதியில் இன்று காலை 10.00 மணிக்கு பயணித்தவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்க சென்றவர்கள் கடைக்காரர்கள், பல்வேறு வேலைகளுக்காக அப்பகுதியால் சென்றவர்கள் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் எனப்பலருக்கும் வித்தியாசமான அனுபவம் ஒன்று காத்திருந்தது.

ஆமர்வீதியில் திரும்பும் இடத்தில் இருந்து அந்த வீதியின் இரு மருங்கிலும் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரால் அவசர அவசரமாக வீதிகளில் நின்றவர்கள், சென்றவர்கள், என அனைவரும் மறிக்கப்பட்டனர், வாகங்களின் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது.

மறிக்கப்பட்டவர்கள் அவசரமாக கடைகளுக்குள்ளும், கட்டடங்களுக்குள்ளும் கட்டாயப்படுத்தி கொண்டு செல்லப்பட்டு நூற்றுக்காணக்கான படையினர்களால் சுமார் அரை மணித்தியால நேரம் வைகப்பட்டிருந்தனர். சில இராணுவத்தினர் பொதுமக்களை வீதியை பார்க்கவேண்டாம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் பல மோட்டார் சைக்கிள் படையினர் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், ஆடம்பர வாகனங்கள் என்பன சென்றதை சில மக்கள் அவதானித்தனர். இதன் பின்னர்தான் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் தடகள விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்கின்றமை பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது.

- சங்கதி

என்ன மக்களின் மேலான கரிசனை புல்லரிக்குது

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயம் நடக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோதாபய வீதியில் செல்ல பொதுமக்கள் கால்வாய்களில் இறக்கப்பட்டனர் கொழும்பு ஆமர்வீதி நடைபாதையில் இன்று (ஓகஸ்ட் 22ம் திகதி) முற்பகல் 10 மணிக்கு நடந்துகொண்டிருந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரால் கடைகளுக்குள்ளும், குறுக்கு வீதிகளுக்குள்ளும், கழிவுக் கால்வாய்களுக்குள்ளும் அவசர அவசரமாக தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு, சீராக உடையணிந்த பெண்கள் உட்பட குறுக்கு வீதிகளுக்குள் அவசர அவசரமாக தள்ளப்பட்டுள்ளனர். எதற்காக இவ்வாறு தள்ளுகின்றீர்கள் என வினவியபோது, வாயை மூடிக்கொண்டு சொல்வதை செய்யுங்கள் என பாதுகாப்பு அதிகார் உயர்ந்த குரலில் சத்தமிட்டுள்ளார். இவ்வாறு கடைகளுக்குள்ளும், சிறு இடைவெளிகளுக்குள்ளும் அடைக்கப்பட்டவர்கள் வீதியை பார்க்க வேண்டாம் எனவும் கட்டளையிட்டுள்ளனர்.இவ்வாறு கட்டளையிட்ட போது, அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் எக்காரணம் கொண்டும் வீதியை யாருக்கும் பார்க்க வேண்டாம் எனக் கூறினார். அதற்கு காரணம் என்னவெனில், கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இவ்வாறு கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் வீதியில் நடந்துசென்றுகொண்டிருக்கும் போது மக்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும

Edited by Vasan

ஹாஹாஹா... :lol::lol: ஓஹோஹோ.... :lol::lol:

சிறீ லங்காவில் இப்படியெல்லாம் நடக்கிது! :lol::lol::lol:

அமெரிக்காவின் ஜோர்ஜ் புஸ்ஸுக்கு கூட இப்படியெல்லாம் பாதுகாப்பு குடுத்து இருக்க மாட்டாங்கள்.. :P

இதைவாசிக்கும்போது இதைவிட வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை... :D

பாதுகாப்பு அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை அதுதான் இலங்கை

கோதாபய வீதியில் செல்ல பொதுமக்கள் கால்வாய்களில் இறக்கப்பட்டனர் கொழும்பு ஆமர்வீதி நடைபாதையில் இன்று (ஓகஸ்ட் 22ம் திகதி) முற்பகல் 10 மணிக்கு நடந்துகொண்டிருந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரால் கடைகளுக்குள்ளும், குறுக்கு வீதிகளுக்குள்ளும், கழிவுக் கால்வாய்களுக்குள்ளும் அவசர அவசரமாக தள்ளப்பட்டுள்ளனர்.

அட நாசமாபோனவங்களே. சனத்தை பிடிச்சு கழிவுக் கால்வாய்களுக்குள் தள்ளிவிட்டால், அதுகள் பிறகு வீதியில் நடமாடுவதில்லையா? :lol::lol:

ஹாஹாஹா... :lol::lol: ஓஹோஹோ.... சிறீ லங்காவில் இப்படியெல்லாம் நடக்கிது! அமெரிக்காவின் ஜோர்ஜ் புஸ்ஸுக்கு கூட இப்படியெல்லாம் பாதுகாப்பு குடுத்து இருக்க மாட்டாங்கள்.. :P இதைவாசிக்கும்போது இதைவிட வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை... :lol:

மாப்பு. உலகத்தின் "சுப்பர் பவர்" இப்ப சிறீலங்கா தான். அதட்டை இல்லாத ஆயுதமா? படையா? அதுக்கு சுத்தியிருக்கிற நாடுகளே பயம் எண்டால் பாருங்கோவன். :lol::lol:

Edited by Eelathirumagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.