Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும் போருக்குப் பின்னர் தமிழ் ஈழம் உருவாகும் வை.கோ. கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெறவுள்ள பெரும் போருக்கு பின்னர் தமிழ் ஈழம் உருவாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் புதுவயலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:வீரமுள்ள இளைஞர்கள் கொண்ட ம.தி.மு.க. வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக ஆட்சியில் விரைவில் மாற்றம் ஏற்படும். அப்போது ஊரும், உற்றமும் எங்களை தேடி வந்து ஆதரவு கேட்கும். ஈழத் தமிழர்கள் துயரில் இரு ந்து மீள வேண்டும். அங்கு பெரும் போர் விரைவில் உருவாக போகிறது. அதற்கு ஈழ தமிழர்கள் தயாராகி விட்டனர்.போருக்கு பிறகு விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் உருவாகும்.அண்ணாத்துரை தமிழர்களை பாதுகாக்க தி.மு.க. வை உருவாக்கினார். அது குடும்ப கட்சியாக மாறியதால் அவரது லட்சியம் நிறைவேறவில்லை. வேதனை கலந்த 13 ஆண்டுகால அரசியலில் ம.தி.மு.க. துவக்கப்பட்ட நோக்கம் மாறாமல் செயல்படுகிறது.

-வீரகேசரி

அட வைகோ அண்ணா எங்கையண்ணா இருக்கிறியள்? பேசிப் பேசியே இப்படிப் பேசியே......???

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே பேசிபேசியே எங்களை.........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா அதி மேதாவி, தமிழனின் வாழ்வுக்காக உயிரையும் கொடுக்கும் தியாகி ஜனார்தனா,மற்றும் குரல்,

நானும் கொஞ்ச காலமாய் கவனித்துக்கொண்டு வாரன், தமிழகத்தில் இருந்து யாரும் ஈழத்துக்கு ஆதரவா கதச்சா, அவையளை ஒரு நக்கல் நளினமா கொமண்ட்ஸ் விடுறீர்.

ஏனப்பு உமக்கு உந்த வம்பு வேலை?

முதல் டி ராஜேந்தரை வாரினீர், இப்ப வை கோவையே வாருரீர்!

மனுசன் நமக்காக 550 நால் சிறை கிடந்தவர் தெரியும் தானே?

வைகோவை பற்றி கதைக்கும் நீர், ஈழத்துக்க்காக எத்தனை நாளாப்பு சிறைக்குப் போனீர்?

ராஜீவ் போன பின்பு, பெரிய பெரிய தலைகள் எல்லாம் பம்மிய போது கூட செஞ்சை நிமிர்த்தி நமக்கு ஆதரவு தந்த ஆல் வைகோ மறவாதையும்.

தமிழ் நாட்டில் இருந்து யார் எமக்கு ஆதரவு தந்தாலும் ஏற்ப்போம், அது ஜெயலலிதாவே ஆனாலும் கூட.

தமிழ் நாட்டு அரசியலில் அவர்கள் யாருடன் கூட்டு வைத்தால் எமக்கு என்ன.

என்றும் நமது தேசிய தலைவரின் நண்பர் தான் வைகோ, மறவாதையும்.

இப்படி பட்ட அரைவேக்காட்டு தனமான கூற்றுக்காக வைகோவிடமும் ஏனைய ஈழ ஆதரவு தமிழக பிரபலங்களிடமும் ஜனார்தனனின் சார்பாக நான் மன்னிப்பு கேட்க்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே பேசிபேசியே எங்களை.........................

ஏனப்பு குரல் இப்படி பேசி பேசியே உம்மை ஏமத்துறதுல வை கோவுக்கு என்ன காணும் பயன்? நீர் என்ன தமிழ் நாட்டின் வாக்காளரே உம்மை அவர் பேசி ஏமாறி வோட்டுக் கேட்க்க.

ஈழத்தின் பால் வைகோ கொண்டிருக்கும் அதீத அக்கரையால் அவர் தமிழ் நாட்டில் அரசியலில் ஒதுங்கி போக வேன்டியதாயிற்று.

மற்றையவர்கள் போல வை கோவும் புலிகள் ஒரு இந்திய விரோத சக்தி என சொல்லி இருந்தால் இன்று அவர் முதலமைச்சரே ஆகியிர்ப்ப்பார்.

தமிழகத்தில் வை கோவின் அரசியல் வைரிகளே சொல்வார்கள், வைகோவின் ஈழத் தமிழன் பற்றிய உணர்வு பற்றி.

நாக்கிற்க்கு நரம்பில்லை என்பதற்க்காக இப்படியா நன்றி கெட்டுப் பேசுவது.

எமக்காக மன்னிப்புக் கேட்ட உங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள். வரலாறுகள் எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. நாமும் ஏமாந்து கொண்டிருக்கின்றோம். அரசியல் இலாபங்களுக்காக நாட்காலி ஆசைக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முதலில் இனம் காணுங்கள். வைகோ ஒரு சிறந்த ஈழப்பற்றாளன் தான் மறுக்க மாட்டேன். ஆனால் அவர் போய் அரசியல் இலாபங்களுக்காக சேர்ந்திருக்கும் சாக்கடைகளைப் பாருங்கள். சாக்கடைகளுடன் சாக்கடைகளாகப் போகக் கூடாதென்பதே எனது ஆவா.

நன்றியுடன்

;;ஜானா

ஜனார்த்தனன் நான் நினைக்கிறேன்.

நீங்கள் கடந்த தமிழக தேர்தல் காலத்தில் இருந்து சண் குழுமத்தின் ஊடகங்களை பார்த்து, படித்தால்தான் வைகோ மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்று.

அரசியல் இலாபங்கள் நாற்காலி ஆசைகள் எல்லாம் ஈழத் தமிழழனுக்காக குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் எப்பவோ நிறைவேறியிருக்கும்.

ஈழத்திற்கு அவர் படகில் ஈழம் வந்ததும் அதனைக் காரணம் காட்டி திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும், ஒன்றரை ஆண்டுகளிற்கு மேல் சிறையில் இருந்ததற்கும் அவரின் அவரின் அரசியல் இலாபங்கள் நாற்காலி கனவுகள் ஆகியனவா? காரணம்

ஈழத்தமிழர்களிற்கு ஆதரவு கொடுப்பதென்பது தற்போது தமிழகத்தில் அவரின் வாக்கு வங்கியை எந்தவிதத்தில் அதிகரிக்காது. எந்தவித அரசியல் நன்மையும் ஏற்படாத அதேவேளை ஆபத்துக்கள் வருமெனத் தெரிந்தும் தொடர்ந்தும் எமது மக்களிற்காக குரல் கொடுத்து வருகிறார். அவரிற்கு எந்தவித நெருக்கடிகள் வந்தபோதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளிற்கு எதிராக எந்தவொரு சொல்லைக்கூட சொல்லாதவர்.

கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக கட்சியை நடாத்தி வந்தபோதும் அக்காலப்பகுதியில் வந்த தேர்தல்களில் முதல் தேர்தலில் இடதுசாரிகளுடன் இணைந்தும் மற்றையதில் தி.மு.கவினால் அக்கூட்டணியில் இருந்தபோதும் நரித்தனமாக ஏமாற்றப்பட்டவேளை தனித்தும் போட்டியிட்டும் ஒரு சட்ட மன்ற உறுப்பினரையும் பெறமுடியவில்லை.

அதேபோன்று கடந்த தேர்தலின்போது திமுகவினால் திட்டமிட்ட முறையில் ஏமாற்றப்பட்டவேளை இம்முறையும் தனித்துப் போட்டியிட்டு சட்டமன்றிற்குச் செல்லாது விட்டால் கட்சியினர் மத்தியில் கட்சிமீது சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதற்காக கட்சியின் நலன் கருதியே அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். (இதுதான் முதல் முறையாக அதிமுகவுடன் கூட்டல்ல. இதற்கு முதலும் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் அதிமுகவுடன் இணைந்து போட்டிட்டிருந்தார்) முதன் முறையாக மதிமுக ஆறு உறுப்பினர்கள் சட்டமன்ற மன்றிற்கு போவதற்கு வழியேற்படுத்தியது அதிமுகவுடனான தேர்தல் கூட்டே.

தேர்தல்களில் வெல்லாது தனித்து நின்று சாதிக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து அரசியல் ரீதியாக மதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அதிமுவுடனான கூட்டு. இது சாக்கடையில் கலந்து சாக்கடையாகப் போவதற்கல்ல. அரசியல் ரீதியாக பலமிழந்து காணாமல் போவதைத் தடுப்பதற்காக தம்மை பலப்படுத்தவே அதிமுக கூட்டு.

அந்த கூட்டிலும் ஈழத்தமிழரின் நலன்களும் அடங்கிருந்தன.

ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பதால் அவர் பெற்றுக்கொண்டது வெறும் சிறைதான். அப்படி இருந்தும் சளைக்காது குரல் கொடுக்கும் ஒருவரை மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்த்துக்காக புலிகளிற்கு எதிராகவே அறிக்கை கொடுக்கும் நாம் அரசியல் நலன் நாற்காலி ஆசைகள் என்று விமர்சிக்கிறோம். இதுதான் எங்கள் புத்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக சிறை சென்றவர் வை.கோ. தயவு செய்து எங்களுக்கு ஆதரவு தருபவர்களைக் குறை சொல்ல வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.