Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்!

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்!

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஸி ஜிங்பினும் நேற்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்கள் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதற்கு பின்னர், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் அதேநேரத்தில், தாய்வானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளை இனி சீனா தொடரக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்பின் போது, திபெத், ஹொங்கொங்கிலும், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள் குறித்து சீன ஜனாதிபதியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்தை நடத்தினார்.

உக்ரைனில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்படுவதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1310554

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் புதிய பனிப்போரா? சீன ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?

By RAJEEBAN

15 NOV, 2022 | 11:58 AM
image

சீனாவுடன் புதிய பனிப்போரிற்கான தேவையுள்ளதாக என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா தாய்வான்மீது போர் தொடுக்கும் என கருதவில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருவரும் வடகொரியா குறித்தும், உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

h2FOi7Ay.jpg

உக்ரைனில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுவதை  எதிர்ப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

சமாதானத்திற்கான சீனாவின் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தியுள்ள சீன ஜனாதிபதி குழப்பமான பிரச்சினைக்கு இலகுவான தீர்வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவால் வடகொரியாவை கட்டுப்படுத்த முடியும் என நான் உறுதியாக கருதுகின்றேன் என தெரிவிப்பது கடினம் என அமெரிக்க ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டில்  குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வடகொரியா மற்றுமொரு அணுவாயுத பரிசோதனையில் ஈடுபடுவதை தடுக்கவேண்டிய கடப்பாடு சீனாவிற்குள்ளது என சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.

ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தாய்வான் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்வானிற்கு சென்றதை தொடர்ந்து பதற்ற நிலை அதிகரித்து காணப்பட்டது.

சீனா உடனடியாக பாரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டதை தொடர்ந்து  அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் குறித்த அச்சம் ஏற்பட்டது.

தாய்வான் தொடர்ந்தும் சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாக காணப்படுகின்றது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடக்க முடியாத முதல் சிகப்பு கோடு அது என சீன ஜனாதிபதி  அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

தாய்வான் மீது சீனா தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என சமீப காலங்களில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

இது உண்மையா புதிய பனிப்போர் உருவாகின்றதா என   செய்தியாளர்கள் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள அவர்  புதிய பனிப்போரிற்கான தேவையுள்ளதாக நான் உறுதியாக நம்பவில்லை,தாய்வான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் உடனடி நோக்கம் எதுவும் சீனாவிடம் உள்ளதாக நான் கருதவில்லை எனகுறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/140079

  • கருத்துக்கள உறவுகள்

' சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் ' - பைடனுக்கு ஜி ஜின்பிங் பதிலடி

By DIGITAL DESK 2

15 NOV, 2022 | 10:27 AM
image

 

சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள்.

அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் (15, 16)நடைபெறுகிறது.

இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்துள்ளது. 

இந்த சந்திப்பு குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மைக்காலமாக சீனா மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

xi-jinping-to-joe-biden-02.jpg

சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நிலவுகிறது. இதனை பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், சில கல்வியாளர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது சர்வாதிகார போக்கு என்றும் சீனாவில் நீதித்துறை சுதந்திரமாக இல்லை, ஊடக சுதந்திரம் இல்லை என்று விமர்சித்து வருகின்றன.

xi-jinping-to-joe-biden-03.jpg

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பைடன் உலகளவில் 100 தலைவர்களை திரட்டி இணையவழியில் ஒரு மாநாட்டை நடத்தினார். அதில் நாம் உரிமைகள், ஜனநாயகம் சரிவதை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து துணிச்சலுடன் மனிதகுல முன்னேற்றத்தையும், மனிதகுல சுதந்திரத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசியிருந்தார். இந்தக் கூட்டத்திற்கு சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இந்தக் கூட்டம் பிரிவினையை தூண்டுகிறது என்று சீனா விமர்சித்திருந்தது.

இந்நிலையில் சீன ஜனநாயகத்தை தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சிக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/140050

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, ஏராளன் said:

சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள்.

அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

20 minutes ago, ஏராளன் said:

சீன ஜனநாயகத்தை தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சிக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லா இடமும் அமெரிக்க/மேற்குலகின்ரை பருப்பு அவியாது.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.