Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுனிசெவ்' விடம் ஒப்படைக்க கூட்டிவரப்பட்ட சிறுவர்கள் மீது தாண்டியடியில் தாக்குதல்

Featured Replies

அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் (யுனிசெவ்) ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது;

அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை (9 ஆண்கள், 5 பெண்கள்) யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர்.

இது தொடர்பாக ்யுனிசெவ்ீ அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று தாண்டியடியில் வைத்து பொறுப்பேற்பதற்கு இணங்கியிருந்தனர்.

தாண்டியடிப் பகுதியில் பகலில் அதிரடிப் படையினர் நிலைகொண்டிருக்கும் அதேநேரம், இரவில் அவர்கள் அங்கிருப்பதில்லையென்பதால் அவ்வேளையில் இவர்களை அங்கு அழைத்து வந்து இன்று காலை அனைவரையும் யுனிசெவ்விடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாலை 6.30 மணியளவில் 14 சிறுவர்களையும் புலிகள் தாண்டியடிக்கு அழைத்து வந்த போதே அவர்கள் மீது அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத் தாக்குதலையடுத்து எல்லோரும் சிதறியோடியுள்ளனர். எனினும் எவருக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை. இன்று காலையே இது பற்றி தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது

http://www.thinakkural.com/news/2007/8/28/...s_page34963.htm

நான் நினைகின்றேன் இந்த தாக்குதலின் காரணம் இப்படியான ஒரு உத்தியோக பூர்வ ஒப்படைப்பை புலிகள் செய்தால் புலிகளின் கிழக்கு இருப்பை தென்னிலைங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் உத்தியோகபூர்வமாக தெரியவந்துவிடும் என்பதால் என

Edited by ஈழவன்85

இணக்கப்பாட்டின்பின் அது நடந்திருப்பதால்..

அவர்கள் மேற்கொண்டதாக்குதல் அவர்கள் எதை வீணடிக்க அந்த தாக்குதலை மேற்கொண்டனரோ அதைவிட மோசமான பலனைத்தரப்போகிறது..

முட்டாள்தனம் அதிகமாகிக்கொண்டேபோகிறது குழப்பக்கார அரசுக்கு

யுனிசெப் காறரும் சிதறி ஓடினார்களா..??? ஓடியிருந்தால் மிகவும் சந்தோசம்.... இல்லை வரும் வளியிலா தாக்குதல் நடந்தது..? தமிழ் சிறுவர்களுக்கும் போராளிகளுக்கும் எதுவும் நடந்து இருக்க கூடாது...

செவ்வாய் 28-08-2007 14:42 மணி தமிழீழம் (தாயகன்)

பெற்றோரிடம் ஒப்படைக்க அழைத்து வரப்பட்ட 14 சிறார்கள் மீது அதிரடிப் படையினர் தாக்குதல்

அம்பாறை மாவட்டத்தில் பெற்றோரிடம் கையளிப்பதற்கென அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்களை இலக்கு வைத்து தாண்டியடியில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியுள்ளதாகஇ அம்பாறை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கவியரசன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும்இ ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின் அடிப்படையில் வயது குறைந்த சிறுவர்கள் அவர்களது பெற்றோர் இடத்திலும்இ மறுசீரமைப்பு புனர்வாழ்வு நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு நேற்று மாலை 6.00 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்ட 9 ஆண்களும்இ 4 பெண்களும் அதிரடிப் படையினரின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பாகத் தப்பிஇ காட்டுப் பிரதேசத்திலுள்ள விடுதலைப் புலிகளின் முகாமிற்குத் திரும்பிச் சென்றுள்ள போதிலும்இ ஏனையவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை தெரிய வரவில்லை எனவும் கவியரசன் கூறினார்.

பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த சிறுவர்கள் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால்இ அல்லது ஒட்டுக் குழுக்களால் கைது செய்யப்பட்டிருந்தால்இ அவர்கள் துன்புறுத்தப்படாது. அல்லது ஒட்டுக் குழுவினரால் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உள்ளாகாமல் இருப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையை ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைப் புலிகள் கேட்டுள்ளனர்.

நன்றி : பதிவு

படைத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலில் தாக்குதலின்போது இழப்புக்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரி56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் தேடுதல் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

8 சிறுவர்களையும் பெற்றோரிடம் அதிரடிப்படை ஒப்படைக்கவில்லை

அம்பாறை, தாண்டியடிப் பகுதியில் ஐ.நா. சிறுவர் நிதியத்திடம் (யுனிசெப்) ஒப்படைப்பதற்காக அழைத்து வரப்பட்டபோது இடம்பெற்ற தாக்குதலில் சிதறியோடி பின்னர் விஷேட அதிரடிப் படையினரிடம் சிக்கிய எட்டுச் சிறுவர்களும் இதுவரை யுனிசெப் அதிகாரிகளிடமோ அல்லதுபெற்றோரிடமோ ஒப்படைக்கப்படவில்லை .

தங்களுடன் இணைய வந்த 14 சிறுவர்களை தாண்டியடியில் வைத்து யுனிசெப்பிடம் ஒப்படைப்பதற்காக கடந்த திங்கட்கிழமை மாலை புலிகள் அழைத்து வந்த போது விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் இந்த சிறுவர்கள் நாலாபுறமும் சிதறியோடினர்.

இவர்களில் 6 பேர் மறுநாள் புலிகளிடம் சென்றுவிட ஏனைய எட்டுப்பேரையும் அதிரடிப்படையினர் பிடித்து தாண்டியடி முகாமில் தடுத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் யுனிசெப்பின் அம்பாறை மாவட்ட அதிகாரி இவ்விடயத்தில் தலையிட்டும் இது வரை அதிரடிப்படையினர்

அவர்களை `யுனிசெப்'அதிகாரிகளிடமோ அல்லது பெற்றோர்களிடமோ ஒப்படைக்க வில்லை.

இவர்களை விடுவிக்க நேற்று `யுனிசெப்' அதிகாரிகள் பலத்த முயற்சிகளை மேற் கொண்டிருந்தனர்.

-தினக்குரல்

யுனிசெவ் இது சம்பந்தமாக அறிக்கை விடும் எண்டு நினைக்க வில்லை... ஏற்கனே அதிரடி படைகளுக்கு இது சம்பந்தமான விடயத்தை ஜுனிசெப் சொல்லி இருந்து இருந்தால் தைரியமாக வெளிப்படையாக ஜுனிசெவ் போராடி இருக்கும்... அவர்களின் அமைதியை பார்த்தால் சொல்ல வில்லை போல இருக்கிறது...

இராணுவ மேலிடத்தில் இருந்து கட்டளைகள் வந்தால் அண்றி சிறுவர்களை மீட்பது கடினம்... அதனால் மேல் மட்டம் மட்டும் செண்று முட்டி மோதி அவர்களை ஜுனிசெவ் வெளியில் கொண்டு வந்தாலும், தமிழ் சிறுவர்களின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது....

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு படையினரிடம் சரணடையும் சிறுவர்களை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த கூடாது- யுனிசெப்

வீரகேசரி இணையம்

அம்பாறை விசேட அதிரடிப்படையினரிடம் சரணடைந்துள்ள சிறுவர் போராளிகள் தொடர்பில் யுனிசெப் அமைப்பு கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அதிரடிப்படையினரிடம் சரணடைந்த சிறுவர் போராளிகளின் முழு பெயர்,வயது, படங்களை இணையத்தளங்களில் பிரசுரித்துள்ளது. இதேவேளை மனித உரிமைகள் அமைச்சு இலங்கையில் இடம் பெறும் கடத்தல் சிறுவர் படையணிகளில் சேர்க்கப்படுகிறது. போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனினும் சிறுவர் போராளிகளிற்கு மறு வாழ்வு அளிப்பதாக சிறுவர்களை முன்னாள் போராளிகள் என பிரசுரித்திருக்க கூடாது இவை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு ஆணைக்குழுவின் சிருவர் மறுவாழ்வு தொடர்பான செயற்பாடுகளிற்கு முரணாக உள்ளதென யுனிசேபின் பேச்சாளர் கோடர் வேய்ஸ் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாறை அதிரடிப்படையினர் சரணடைந்துள்ள சிருவர் போராளிகள் 4 ஆண்,4 பெண்கள் அடங்குகின்றனர்.

அம்பாறை காட்டுப்பகுதியில் இருந்து கைப்பற்றிய இவர்கள்வசம் வெடி பொருட்கள் டெட்டனேட்டர்கள், காணப்பட்டதாக இவர்களை விடுதலைப்புலிகள் சங்சி குடிச்சாறு அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்க்காக அனுப்பி வைத்திருக்கலாம் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இச்சிறுவர்கள் தாம் சிருவர் போராளிகள் என அடையாளப்படுத்தப்படின் அவர்களது மறுவாழ்விற்கும், எதிர்காலத்திற்கும் அது பாதிப்பாக இருக்குமென யுனிசெப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.